Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • G.Ra ஜிரா 11:41 pm on November 28, 2013 Permalink | Reply  

    பெண்களின் பண்கள் 

    தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.

    வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.

    உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
    உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே

    எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.

    ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
    இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே

    அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.

    ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
    நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
    இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
    உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது

    அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.

    அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.

    ஒருத்தி:
    அடி போடி பைத்தியக்காரி
    நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா

    இன்னொருத்தி
    அடி போடி பைத்தியக்காரி
    நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்

    இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.

    இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
    எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்

    இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.

    இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.

    மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கல மங்கை மீனாட்சி
    உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி

    பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.

    காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
    காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்

    இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!

    இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.

    மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
    தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

    இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.

    அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
    இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

    வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!

    இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?

    ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    திருமாலைத்தானே மணமாலை தேடி
    எந்த மங்கை சொந்த மங்கையோ
    ஓ எந்த கங்கை தேவ கங்கையோ

    போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!

    இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.

    கடவுள் தந்த இருமலர்கள்
    கண் மலர்ந்த பொன் மலர்கள்
    ஒன்று பாவை கூந்தலிலே
    ஒன்று பாதை ஓரத்திலே

    சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

    இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.

    வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
    வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
    எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்

    நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.

    பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
    என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
    அடி கண்டவளும் வந்து கைய வைக்க
    அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல

    இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.

    முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.

    கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
    என்னும் போதே உள்ளம் பந்தாடுதே

    அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.

    ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
    கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்

    இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.

    ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
    பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி

    பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.

    எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – உனது மலர் கொடியிலே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பாதகாணிக்கை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZks

    பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
    படம் – எங்க வீட்டுப் பிள்ளை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

    பாடல் – அடி போடி பைத்தியக்காரி
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தாமரை நெஞ்சம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

    பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேனும் பாலும்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

    பாடல் – காலம் காலமாய் பெண் தானே
    வரிகள் – கங்கையமரன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
    இசை – கங்கையமரன்
    படம் – கற்பூரதீபம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20

    பாடல் – மல்லிகையே மல்லிகையே
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – நினைத்தேன் வந்தாய்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

    பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தேவியின் திருமணம்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

    பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – இருமலர்கள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

    பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
    இசை – வி.குமார்
    படம் – இருகோடுகள்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

    பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
    இசை – தேனிசைத் தென்றல் தேவா
    படம் – பஞ்சதந்திரம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

    பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
    வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
    பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
    இசை – சி.இராமச்சந்திரா
    படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

    பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
    வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A

    அன்புடன்,
    ஜிரா

    361/365

     
    • prabakar 6:42 am on November 29, 2013 Permalink | Reply

      படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

    • Uma Chelvan 7:33 am on November 29, 2013 Permalink | Reply

      இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .

      என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
      நான் சொல்லி காதல் விடவில்லையே !!
      மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!

      ஒ வெண் நிலா …..இரு வானிலா !!

    • kamala chandramani 8:31 am on November 29, 2013 Permalink | Reply

      பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.

    • umakrishh 9:56 am on November 29, 2013 Permalink | Reply

      நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..

    • rajinirams 10:05 am on November 29, 2013 Permalink | Reply

      ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.

    • பாலராஜன்கீதா 11:55 am on November 29, 2013 Permalink | Reply

      கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂

    • amas32 7:13 pm on November 29, 2013 Permalink | Reply

      இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂

      இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂

      amas32

    • ராஜேஷ் 1:29 am on December 4, 2013 Permalink | Reply

      பாடல் – மல்லிகையே மல்லிகையே
      வரிகள் – கவிஞர் வைரமுத்து
      பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
      இசை – தேனிசைத் தென்றல் தேவா
      படம் – நினைத்தேன் வந்தாய்

      வரிகள் பழநிபாரதி

    • santhosh 10:47 am on August 8, 2021 Permalink | Reply

      hi sir ,
      I would like to talk with u for some ideas, kindly if u wish pls contact me-9585504287

  • G.Ra ஜிரா 9:13 pm on November 22, 2013 Permalink | Reply  

    மாற்றங்கள் 

    சிறுவயதில் நான் சேட்டைக்காரன். பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். வாயைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்… தூத்துக்குடியில் நான் கதறினால் விளாத்திகுளத்தில் எதிரொலிக்கும்.

    ஊருக்குப் போகும் போதெல்லாம் சொந்தக்காரர்களிடம் கெட்ட பெயரை பெட்டி பெட்டியாக சம்பாதித்துக் கொண்டு வருவேன்.

    வளர வளர நடத்தையில் மாற்றம் வந்தது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபின். பலவித அனுபவங்களிலும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ன சிந்தனையிலும் மனம் கட்டுப்பட்டது. சிந்தனைகள் அமைதிப்படுத்தின. மாற்றம் தவிர்க்கவே முடியாததானது. ஒரு திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற போது என்னுடைய அத்தை ஒருவர் “பையன் எப்பிடி மாறிப் போயிட்டான்! அவரஞ்சிக் கொடியா மாறிட்டான்!” என்றார்.

    மாற்றம் என்பதுதான் மாற்றமில்லாத தத்துவம். இந்த மாற்றத்தை திரைப்படக் கவிஞர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். மடமடவென்று காதல் பாடல்கள் கண் முன்னே வந்தன. அவற்றில் நான்கு பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

    வழக்கம் போலவே கவியரசர் முன்னால் வந்து நிற்கிறார். பணமா பாசமா திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலைத்தான் பார்க்கப் போகிறோம்.

    அவளொரு கல்லூரி மாணவி. செல்வந்தரின் செல்வமகள். திமிரும் அதிகம் தான். காரிலேயே கல்லூரி சென்று திரும்புகின்றவள் தவிர்க்க முடியாமல் ரயிலில் ஒருநாள் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயிலில்தான் அவள் அவனைப் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் அவனைப் பார்த்ததாலேயே அவளுடைய திமிர் கரைந்து ஓடுகிறது. உள்ளத்தில் காதல் வந்த பிறகு அங்கு திமிருக்கு இடமில்லை. வீட்டுக்கு வந்து அவனை நினைத்துப் பாடுகிறாள்.

    மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
    காரிகையின் உள்ளம் காண வருவாரோ!

    மாறிய உள்ளம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மாற்றியவனே வரவேண்டும். கதைப்படி வந்தான். நல்வாழ்வு தந்தான்.

    மாற்றத்தின் தோற்றத்தை அடுத்ததாகச் சொல்ல வருகின்றவர் கவிஞர் வாலி. சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலிலும் ஒரு பெண் வருகிறாள். ஆம். இளம்பெண்ணே தான். அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினாள். அதை மன்மதனும் நோக்கினான். காதல் அம்பு விட்டான்.

    மன்மதன் அம்பு விட்டான் என்று நமக்குத் தெரிகிறது. அவளுக்குத் தெரியவில்லையே. அவள் நெஞ்சுக்குள் உண்டான குழைவு எப்படி வந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. அதையே பாட்டாகப் பாடுகிறாள்.

    எங்கிருந்தோ ஆசைகள்
    எண்ணத்திலே ஓசைகள்
    என்னென்று சொல்லத் தெரியாமலே
    நான் ஏன் இன்று மாறினேன்!

    பெண்மை தானாக மாறுவதும் உண்டு. வலுக்கட்டாயமாக மாற்றப்படுவதும் உண்டு. அன்பும் அடக்கமும் நிறைந்தவள் அவள். அவளை ருசிக்க விரும்பிய ஒருவன் அவளுக்குத் தெரியாமல் மதுவைக் குடிக்க வைத்தான். மது மதியை மயக்கியது. மயங்குவது புரிந்தது அவளுக்கு. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை. தானா இப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்து பாடுகிறாள் அவள்.

    நானே நானா யாரோதானா
    மெல்ல மெல்ல மாறினேனா
    தன்னைத் தானே மறந்தேனே
    என்னை நானே கேட்கிறேன்

    இதுவும் கவிஞர் வாலியின் கைவண்ணம் தான். அடுத்து கவிஞர் வைரமுத்து காட்டும் மாற்றத்தை அவரது வைரவரிகளில் பார்க்கலாம். இதுவரை பார்த்த அதே காட்சிதான். நேற்று வரைக்கும் இல்லாத காதல் இன்று அவளுக்கு வந்து விட்டது.

    நேற்று இல்லாத மாற்றம் என்னது
    காற்று என் காதில் ஏதோ சொன்னது
    இதுதான் காதல் என்பதா!
    இளமை பொங்கிவிட்டதா!
    இதயம் சிந்திவிட்டதா! சொல் மனமே!

    இப்படி பெண்களின் மனது குழந்தைத்தனத்திலிருந்து காதலுக்கு மாறுவதைச் சொல்ல எத்தனையெத்தனை பாடல்கள்.

    அதெல்லாம் சரி. வாலிபத்துக்கு வந்த பின் குழந்தைத்தனத்துக்கு நாம் ஏங்குவதேயில்லையா. வாழ்க்கையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உயர்ந்தாலும் குழந்தைப் பருவத்தின் குற்றமில்லா குதூகலங்கள் எப்போதும் நம்மோடு வருவதில்லை. ஏனென்றால் மனதோடு சேர்ந்து அறிவும் மாறிவிடுகிறதே. இந்த ஏக்கத்தை அழகாக ஒரு பாட்டில் வைத்தார் கவிஞர் சிநேகன்.

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
    அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
    படம் – பணமா பாசமா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wlSTmduxnyA

    பாடல் – எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – சந்திரோதயம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=DM_m7xWYTHc

    பாடல் – நானே நானா யாரோதானா
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Hh6lAvR12cA

    பாடல் – நேற்று இல்லாத மாற்றம்
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர் – சுஜாதா
    இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
    படம் – புதியமுகம்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=9_geeVUdWwc

    பாடல் – அவரவர் வாழ்க்கையில்
    வரிகள் – சினேகன்
    பாடியவர் – பரத்வாஜ்
    இசை – பரத்வாஜ்
    படம் – பாண்டவர் பூமி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=yHW1mPvAM3Q

    அன்புடன்,
    ஜிரா

    355/365

     
    • amas32 9:29 pm on November 22, 2013 Permalink | Reply

      //மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
      காரிகையின் உள்ளம் காண வருவாரோ!//
      அருமையான ஒரு பாடலை நினைவு படுத்தியதற்கு எக்கச்சக்க நன்றி :-))

      பெண்ணின் மனம் மாறுகிறது. அவள் அறியாமலேயே அவளுள் மாற்றம் ஏற்பட்டுவிடும். இது இயற்கை நடத்தும் ஒரு அதிசயம். இதை வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் ரசிகர்கள், புத்திசாலிகள். அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் வாழும் கலையை மாற்றியமைத்தால் வெற்றி நமதே.

      எல்லா பாடல்களுமே அருமை ஜிரா 🙂

      amas32

    • rajinirams 1:02 am on November 23, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு-பொருத்தமான நல்ல “மாற்ற”பாடல்கள். சில காதலர்கள் “காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்றும் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்,ஆனாலும் அன்பு “மாறாதம்மா” என அன்புடன் இருப்பர்.பின்னாளில் “தாலாட்டு மாறி”போனதே என்று பாடாமலிருந்தால் நல்லது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ஆனால்”மாறி”விட்டான் எனக்கூறும் கவியரசர் “மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது” என்று எழுதியுள்ளார். நன்றி:-)

    • Uma Chelvan 3:26 am on November 23, 2013 Permalink | Reply

      மிக மிக நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு. அதிலும் மிகவும் அருமையான “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்” என்ற பாடல் வேறு. கேட்கவும் வேண்டுமா? ……Mr. Rajinirams கமெண்ட்ஸ் எல்லாமே படிக்க மிகவும் நன்று. இவ்வளவு பாடல்களை தெரிந்து வைத்ருகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    • rajinirams 9:02 pm on November 23, 2013 Permalink | Reply

      uma chelvan நன்றி:-)

  • mokrish 7:41 am on November 20, 2013 Permalink | Reply  

    எங்கே அவன் என்றே மனம் 

    சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity  இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject  காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில்  ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து  பிறந்தவை என்கிறார்.

    காலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  

    http://www.inbaminge.com/t/k/Kalangalil%20Aval%20Vasantham/Paadum%20Vande.eng.html

    பாடும் வண்டே பார்த்ததுண்டா
    மாலை அணிந்த என் மாப்பிள்ளை
    ஏண்டி தோழி என்ன செய்தாய்
    எங்கு மறைத்தாய்
    கண்ணன் எங்கே எங்கே எங்கே

    முதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்

    வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
    வண்ணச்சேலை வாங்கி கொடுத்தார்
    கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
    கோவில் வழியைப் பார்த்துக்கிடந்தேன்
    ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
    உண்மை சொல்வாயடி எந்தன்

    எந்தன் கண்ணாளன்
    வந்தார் இங்கே எங்கே எங்கே

    அடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள்  ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று  பிரிவுக்காலம் சொல்கிறாள்.

    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
    தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
    ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
    அவரின்றி கூவுது ஆயிரம் கோழி
    கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
    இன்று வந்தானடி

    எந்தன் கண்ணாளன்
    வந்தார் இங்கே எங்கே எங்கே

    வண்டு, தோழி என்று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.

    மோகனகிருஷ்ணன்

    352/365

     
    • Uma Chelvan 10:26 am on November 20, 2013 Permalink | Reply

      எங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-

      அவனை கண்டால் வரச் சொல்லடி
      அன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி
      தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
      தனியே நிற்பேன் எனச் சொல்லடி

      இருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.!! Just look at Manoramma’s expression for that particular lines. She is in total shock. :))

    • amas32 9:30 pm on November 20, 2013 Permalink | Reply

      இது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂

      amas32

      • Uma Chelvan 12:15 am on November 21, 2013 Permalink | Reply

        நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ ?

  • என். சொக்கன் 9:17 pm on November 10, 2013 Permalink | Reply  

    யானோ கவிஞன்? 

    • படம்: நினைத்தாலே இனிக்கும்
    • பாடல்: பாரதி கண்ணம்மா
    • எழுதியவர்: கண்ணதாசன்
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
    • Link: http://www.youtube.com/watch?v=Q9XrLMK8nbM

    பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா, கேளடி பொன்னம்மா,

    அதிசய மலர் முகம், தினசரி பல ரகம்,

    ஆயினும் என்னம்மா? தேன்மொழி சொல்லம்மா!

    கண்ணதாசன் அவர்களின் உதவியாளராக இருந்த இராம. கண்ணப்பன் எழுதிய ‘அர்த்தமுள்ள அநுபவங்கள்’ (’அநுபவம்’ என்றுதான் எழுதியிருக்கிறார்கள், ’அனுபவம்’ என்றல்ல) என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன்.  அதில் கண்ணதாசன் பாரதியைப்பற்றிச் சொல்லும் பகுதி மிகவும் உணர்ச்சிகரமானது:

    ‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!’

    ‘அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’

    கண்ணதாசன் சொன்னால் ஆச்சா? நாம் இப்போதும் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!

    ***

    என். சொக்கன் …

    10 11 2013

    343/365

     

     
    • bganesh55 6:59 am on November 11, 2013 Permalink | Reply

      அதானே… கண்ணதாசனின் வரிகளின் எளிமை திரைத் துறைக்கும், கருப்பொருளின் அடரத்தி அவர் கவிதைகளிலும் வெளிப்பட்டதை மற(று)க்க முடியுமா என்ன? பாரதி ஒரு சிகரம் எனில் கண்ணதாசனும்…!

    • amas32 8:47 am on November 11, 2013 Permalink | Reply

      சூப்பர்! எனக்குக் கண்ணதாசனை மிஞ்சி எவரும் இல்லை என்று தோன்றும். தனிப்பட்ட டேஸ்ட், ஈர்ப்பு என்று நினைக்கிறேன் 🙂

      amas32

    • Uma Chelvan 9:45 am on November 11, 2013 Permalink | Reply

      என்ன ஒரு அருமையான பாடல். அதிசய மலர் முகம் என்றது போல், பாரதி ஒரு ரோஜா என்றால் ( மலர்களின் ராஜா அழகிய ரோஜா ) கண்ணதாசனும் ஒரு மல்லிகைதான். இரு வேறு நிறம், இரு வேறு மணம். இரண்டுமே சிறந்தது அதனதன் குணத்தில் !!!இங்கே MSV யையும் மறந்து விடக்கூடாது . நிஜமாகவே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள். இந்த பாடலை தந்தற்கு MSV குதான் உண்மையில் கோவில் கட்டி இருக்க வேண்டும் !!!

    • rajinirams 10:09 am on November 11, 2013 Permalink | Reply

      தன்னடக்கம் காரணமாக கண்ணதாசன் அவ்வாறு கூறியிருந்தாலும் அவர் பல காவிய பாடல்கள் படைத்த கவியரசர் ஆயிற்றே-அதனால் தான் “நீ தாடியில்லாத தாகூர் -மீசையில்லாத “பாரதி”என்று கவிஞர் வாலி அவருக்கு இரங்கற்பா பாடினார்.

  • G.Ra ஜிரா 9:27 pm on October 21, 2013 Permalink | Reply  

    பக்திப் பயணங்கள் 

    வெளிநாட்டுக்கு காதல் பாட்டுகள் பாட ஒரு கூட்டம் போனால் பக்திப் பாடல்கள் பாடவும் ஒரு கூட்டம் போயிருக்கிறது.

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இறையருட் கலைச்செல்வர் என்று அழைக்கப்பட்ட கே.சங்கர் இயக்கிய திரைப்படங்களில் வெளிநாட்டிலுள்ள கோயில்களும் வரும். படத்தின் பாத்திரங்கள் அந்தக் கோயில்களுக்குச் சென்று அழுது தொழுது உருகி மருகிப் பாடுவார்கள்.

    அதைத் தொடக்கி வைத்தது செந்தமிழ்த் தெய்வமான முருகக் கடவுள்தான். ஆம். வருவான் வடிவேலன் படத்தில்தான் முதன்முதலில் இலங்கையிலும் மலேசியாவிலும் இருக்கும் முருகன் கோயில்கள் பிரபலமாயின.

    இலங்கையின் கதிர்காமம் மிகவும் தொன்மையான முருகன் கோயில். இன்று தமிழ் அடையாளங்களை இழந்து சிங்கள அடையாளங்கள் கூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். நினைக்க வருத்தமாக இருக்கிறது.

    கதிர்காம யாத்திரை என்பது மிகப்பிரபலம். கலைமணி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலில் கதிர்காம யாத்திரை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தில் இந்தக் காட்சி இடம் பெறவில்லை. அது குறையல்ல. படத்துக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொடுத்தார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

    கதிர்காமத்திலிருக்கும் மாணிக்க கங்கையில் மோகனா, சிக்கல் சண்முக சுந்தரம், மோகனாவின் தாயார் வடிவாம்பாள், முத்துராக்கு அண்ணன், நட்டுவனார் முத்துக்குமார சுவாமி, வரதன் என்று எல்லாரும் முழுகி எழும் போது வடிவாம்பாளின் கையில் மட்டும் ரேகை ஓடும் மரகதக் கல் கிடைக்கும். மற்றவர்களை விட அந்த அம்மையார் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    அந்தக் கோயிலில் படமாக்கப் பட்ட பாடல்தான் வருவான் வடிவேன் திரைப்படத்தில் இடம் பெற்ற “நீயின்றி யாருமில்லை விழிகாட்டு” என்ற கண்ணதாசன் பாடல்.

    கண்ணிழந்த கணவனைக் கூட்டிக்கொண்டு யாத்திரை வரும் மனைவி பாடுவதாக அமைந்த பாட்டு.

    நீயின்றி யாருமில்லை விழி காட்டு
    நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளி காட்டு

    பாடலின் இறுதியில் “நாங்கள் கதிர்காமம் வந்ததற்கு பலனில்லையோ” என்று இறைஞ்சுவார்கள். முருகனருளால் கண் கிடைக்கும்.

    இதே கதிர்காமத்தில் இன்னொரு பாடல் எடுக்கப்பட்டது. பைலட் பிரேம்நாத் திரைப்படத்துக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய வாலியின் பாடல் அது.

    குழப்பத்தில் இருக்கும் தந்தை அந்தக் குழப்பம் நீங்க முருகனை நோக்கி காவடி எடுத்துப் பாடுவதாக அமைந்த பாடல் அது.

    முருகன் எனும் திருநாமம்
    முழங்கும் இடம் கதிர்காமம்
    குருபரணே சரணம் உந்தன் சேவடி
    தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி

    அடுத்து நாம் போக இருப்பது மலேசியா. அங்குள்ள பத்துமலை முருகன் கோயில் படிகளில் ஏறப் போகிறோம். தயாரா?

    பத்துமலைத் திரு முத்துக்குமரனை
    பார்த்துக் களித்திருப்போம்
    இந்துக் கடலில் மலேசிய நாட்டில்
    செந்தமிழ் பாடி நிற்போம்

    பத்துமலையில் நடக்கும் தைப்பூசத் திருவிழா மிகப் பெருமை வாய்ந்தது. உலகில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் இந்துத் திருவிழா என்றும் கூறப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்ல… இந்துக்கள் மட்டுமல்ல… சீனர்களும் அயல்நாட்டவர்களும் கூட காவடி எடுத்து வந்து முருகனை வணங்குவார்கள். அதையும் பாட்டில் வைத்தார் கண்ணதாசன்.

    சேவல் கொடியுடை காவலன் பூமியின் சிந்தை கவர்ந்தவண்டி
    உடன் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் மோகத்தை தந்தவண்டி

    இந்தப் பாடலை கண்ணதாசன் ஒருவரே எழுதியிருந்தாலும் பாடியவர்கள் ஆறு பேர். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எம்.எஸ்.விசுவநாதன், எல்.ஆர்.ஈசுவரி என்று ஆறு பேரும் பாடக் கேட்பதும் பரவசம்.

    இதே பத்துமலையில் இன்னொரு பாடலும் எடுக்கப்பட்டது. “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்துக்காக. இதுவும் இயக்குனர் கே.சங்கர் இயக்கி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த திரைப்படம் தான்.

    கணவனை இன்னொருத்தியிடம் திருட்டுக் கொடுத்த பெண் வேண்டிக் கொண்டு காவடி ஏந்தி மலையேறுவதாக அமைந்த பாடல்.

    வந்தேன் முருகா பத்துமலை
    நீ உணராயோ என் பக்தி நிலை

    பாடலைப் பாடிய நாயகியின் கோரிக்கையை பத்துமலை முருகன் நிறைவேற்றி வைப்பதாக காட்சி அமையும்.

    சமீபத்தில் பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி பத்துமலையில் படம் பிடிக்கப்பட்டாலும் அது பக்திப் பாடல் அல்ல.

    தமிழன் எங்கு போனாலும் பக்தியையும் மூட்டை கட்டிக் கொண்டு போகிறான் என்பதற்கு இந்தப் பாடல்களே சாட்சி. அதே போல தமிழன் உலகெங்கும் எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையெத்தனை கோயில்களைக் கட்டினாலும் தமிழ்க் கோயில் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவை முருகன் கோயில்கள் மட்டுமே என்பது அசைக்க முடியாத உண்மை.

    அதுவுமில்லாமல் இந்தப் பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்த பெருமை எம்.எஸ்.விசுவநாதன் என்னும் முருக பக்தருக்கே கிடைத்திருப்பதும் சிறப்பு.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

    பாடல் – நீயின்றி யாருமில்லை விழி காட்டு
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – வருவான் வடிவேலன்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/v/Varuvaan%20Vadivelan/Neeyndri%20Yaarumullai.vid.html

    பாடல் – முருகனெனும் திருநாமம்
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – டி.எம்.சௌந்தரராஜன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – பைலட் பிரேம்நாத்
    பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/p/Pilot%20Premnath/Murugenendra%20Thirunamam.vid.html

    பாடல் – பத்துமலைத் திரு முத்துக்குமரனை
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், பெங்களூர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எஸ்.விசுவநாதன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – வருவான் வடிவேலன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=ZipRNDiFkjk

    பாடல் – வந்தேன் முருகா பத்துமலை
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – யாமிருக்க பயமேன்
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    அன்புடன்,
    ஜிரா

    323/365

     
    • rajinirams 3:39 pm on October 22, 2013 Permalink | Reply

      கதிர்காமம் முருகன்-பத்துமலை முத்துக்குமரன் பாடல்களை கொண்ட பக்தி பரவசமூட்டும் முத்தான பதிவு.

    • Uma Chelvan 4:38 pm on October 22, 2013 Permalink | Reply

      நாம் மட்டும்மல்ல, ஒரு இடம் விட்டு மறு இடம் செல்லும் எல்லா இனத்தவருமே தம்முடைய மொழி, கலாச்சரம், கலை மற்றும் உணவு பழக்க வழக்கம் களை உடன் எடுத்து செல்கிறார்கள். இது எப்போதுமே நன்மை என்று சொல்ல முடியாது . சில சமயம் தாம் தான் உயரந்தவர் எனற எண்ணமும் கூடவே வருகிறது. Sunday evening நானும் என் பெண் மீனாக்ஷியும் (அவள் இங்கே பிறந்து வளர்ந்தாலும் , நான் மதுரை என்பதால் அந்த பெயர்) திரு. லால்குடி ஜெயராமனின் நினவு நடன நிகழ்சிக்கு சென்று இருந்தோம். இந்த நிகழ்ச்சி அவரின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அவரின் எதிர் பாராத மறைவு இதை ஒரு Homage ஆக மாற்றி விட்டது. நான்கு பாடல்களும் , மங்களமும் அவர் compose செய்த பாடல்கள். மீதம் மூன்று பாடல்கள் பாரதியாரின் கண்ணன் பாடல்கள். அதிலும் அவர் compose செய்த ” செந்தில் வேலவன்” என்ற பத வர்ணம் பார்க்க பார்க்க திகட்டதவை..

      திரு. லால்குடி ஜெயராம் மானின் தில்லானா https://community.worcester.edu/webapps/portal/frameset.jsp

    • Uma Chelvan 7:30 pm on October 22, 2013 Permalink | Reply

      Very sorry I gave a wrong u- tube link……..here we go………..Lalgudi Jayaraman’s Thillana

  • G.Ra ஜிரா 1:18 pm on October 18, 2013 Permalink | Reply  

    சினம் ஏனோ சின்னவளு(னு)க்கு! 

    மெல்லியதோர் உணர்வினை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பூவினும் மெல்லியது. பனியினும் மெல்லியது. நம் கண்கள் காணாத தென்றலிலும் மெல்லியது.

    குழந்தைகளுக்கு வரும் கோவத்தைதான் சொல்கிறேன். சட்டியில் விழுந்த வெண்ணெய் உருகிவிடாமல் எடுப்பது போன்றது கோவம் கொண்ட குழந்தைகளை சமாதானப்படுத்துவது.

    குழந்தைகளே அழகு. அதிலும் கோவம் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் போது பாருங்கள்…. அதை விட அழகு உலகில் இல்லவேயில்லை என்ற முடிவுக்கு வருவீர்கள்.

    அந்தக் குழந்தைகளை எப்படியெல்லாம் பாடி கவிஞர்கள் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள் என்று இன்று பார்க்கப் போகிறோம்.

    எதையும் கண்ணதாசனிடம் இருந்தே தொடங்கிப் பழகிவிட்டோம். இதையும் அவரிடமிருந்தே தொடங்குவோம்.

    தாயிடம் முகம் காட்டாமல் திரும்பி ஓடும் மகளை அழைக்க வேண்டும். திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். எப்படி பாடுவாள் தாய்?

    சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா
    உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா

    அழைத்தால் திரும்பிப் பார்க்குமா கோவம் கொண்ட குழந்தைகள். அவர்களைத் தூக்கி வைத்து புகழ்ந்தால்தானே காது கொஞ்சமாவது கேட்கும்.

    நீ தங்கம் போலே அழகு
    நீ எங்கள் வானில் நிலவு
    இளம் தாமரைப் பூவே விளையாடு
    காவிரி போலே கவி பாடு

    விளையாடச் சொன்னால் போதாதா குழந்தைகளுக்கு? அதுவரை இருந்த கோபமும் அழுகையும் மறைந்து சமாதானம் பிறக்கிறது. சமாதானம் ஆனபிறகு என்னாகும்? அணைத்துக் கொண்டு பாட வேண்டியதுதானே!

    அணைக்கும் அன்பான கைகள்
    அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்
    வரும் நாளை வாழ்விலே உயர் மேன்மை காணலாம்
    நல்ல காலம் தோன்றினால் இந்த உலகை வெல்லலாம்

    கிட்டத்தட்ட ஒரு கதையாகவே பாடலை எழுதியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

    சரி. நாம் அடுத்த குழந்தைக்குப் போவோம். ஏதோவொரு செல்லச் சண்டை. அம்மாவோடு கோவம். கண் நிறைய கண்ணீர். யாரோடும் பேசாமல் ஒதுங்கி நிற்கும் பெண்குழந்தை. எப்படியெல்லாம் கொஞ்சி சமாதானப் படுத்தலாம்? புலவர் புலமைப்பித்தனைக் கேட்போமா

    மண்ணில் வந்த நிலவே
    என் மடியில் பூத்த மலரே
    அன்பு கொண்ட செல்லக்கிளி
    கண்ணில் என்ன கங்கைநதி… சொல்லம்மா….
    நிலவே… மலரே….
    நிலவே மலரே.. மலரின் இதழே… இதழின் அழகே!

    ச்சோ ச்வீட் என்று புலவர் புலமைப்பித்தனைப் பாராட்டத் தோன்றுகிறதல்லவா? அதிலும் அந்தாதி போல “நிலவே மலரே… மலரின் இதழே… இதழின் அழகே” என்று அடுக்குவது அட்டகாசம்.

    அதென்ன பெண் குழந்தைகள் தான் கோவித்துக் கொள்வார்களா? ஆண்குழந்தைகளுக்குக் கோவம் வராதா? அம்மா திரைப்படத்தில் வந்ததே. இந்த முறை சமாதானப்படுத்துவது கவிஞர் வைரமுத்து.

    ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அவளுடைய மகன் தான் அந்தச் சிறுவன். ஆனால் இருவருக்கும் தாங்கள் தாய்-மகன் என்று தெரியாது. அவர்களுக்குள் ஏதோவொரு சண்டை. அதனால் கோவம். கோவத்தின் விளைவாக சோகம். சரி பாட்டைப் பார்க்கலாம்.

    பூமுகம் சிவக்க
    சோகமென்ன நானிருக்க

    குழந்தைகளே மென்மை. அந்த மென்மையான முகம் அழுதால் செக்கச் சிவந்து போய்விடுகிறதே! அதைப் பார்க்கத் தான் முடியுமா? பார்த்துவிட்டு சும்மாயிருக்கத்தான் முடியுமா? எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாவது அந்தப் பூமுகத்தில் புன்னகையை அல்லவா பார்க்கத் துடிக்கும் தாயுள்ளம்!

    தாயின் வடிவில் என்னை நினைத்து விடு
    எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

    எப்போதுமே பிள்ளைகளை அடித்து விட்டு அதற்கு வருத்தப்படுவது தாயாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும் போது மகன் அழும் போது தாய் அழாமல் இருந்தால்தான் அதிசயம். அதைக் கண்டு கண்ணீரைத் துடைக்க மகன் வருவான் என்ற நம்பிக்கைதான் இந்தத் தாயின் நம்பிக்கையும். அதே போல மகனும் வந்தான். கண்ணீரைத் துடைத்தான்.

    எவ்வளவு மென்மையான உணர்வுகள் இவை. இவற்றைப் பாடலிலும் குரலிலும் இசையிலும் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். ஆனால் பாருங்கள்… நாம் பார்த்த மூன்று பாடல்களையுமே பாடியவர் இசையரசி பி.சுசீலா தான். இந்த ஒற்றுமை தற்செயலானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு பாடலிலும் அவர் காட்டியிருக்கும் குழைவும் உணர்வுகளும் போதும் அவர் பெருமையைச் சொல்ல.

    இன்னொரு வகையான குழந்தைகள் உண்டு. ஆம். “நானொரு குழந்தை நீயொரு குழந்தை” என்று கவிஞர் வாலி சொன்ன கணவன் மனையர் தான் அந்தக் குழந்தைகள். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை கோவித்துக் கொண்டால் எப்படி சமாதானப்படுத்துவது?

    பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டுப் பாடலாம்
    இந்த மீசை வெச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா!

    புலமைப் பித்தன் கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். குழந்தைகளுக்கு பொம்மையைக் கொடுத்து அழுகையை அடக்கலாம். காதலர்களுக்குள் அழுகை வரும் போது ஒருவரையொருவர் கொடுத்துத்தான் சமாதானப் படுத்த வேண்டும்.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – பொல்லாதவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=VPM_AqzmZr0

    பாடல் – மண்ணில் வந்த நிலவே
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – நிலவே மலரே
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=UmCcv-4uv7k

    பாடல் – பூமுகம் சிவக்க
    வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து
    பாடியவர் – இசையரசி பி.சுசீலா
    இசை – இன்னிசை வேந்தர்கள் சங்கர் – கணேஷ்
    படம் – அம்மா
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=o70tn84msTs

    பாடல் – பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
    வரிகள் – புலவர் புலமைப் பித்தன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – சந்திரபோஸ்
    படம் – புதிய பாதை
    பாடலின் சுட்டி – http://youtu.be/ae3gVTQwWDk

    அன்புடன்,
    ஜிரா

    320/365

     
    • suri 2:13 pm on October 18, 2013 Permalink | Reply

      if i am not mistaken, nilave malare was written by Pulamaipitthan. Pl check

    • amas32 9:34 pm on October 18, 2013 Permalink | Reply

      என் மகன் சிறுவனாக இருக்கும்போது அவனுடனேயே நான் இருக்க வேண்டும் என்று நினைப்பான். நான் வீட்டு வேலையில் ஈடுப்பட்டிருந்தாலோ தொலைபேசியில் உரையாடினாலோ முணுக்கென்று கோபம் வந்துவிடும். நிறைய இராமாயண மகாபாரதக் கதைகள் கேட்டு வளர்ந்தவன், அதனால் நீ என்னுடன் இல்லையென்றால் நான் சாமியாராகிவிடுவேன் என்று சொல்லி வீட்டின் முன் உள்ளத் தெருவோர நடைபாதையில் போய் சாமியார் மாதிரி உட்கார்ந்து தோம் தோம் என்று உச்சரிக்க ஆரம்பித்து விடுவான். இரண்டரை, மூன்று, வயது ஓம் என்று சொல்ல வராது 🙂

      நீங்கள் சொல்வது உண்மை, குழந்தைகள் கோபித்துக் கொள்வதும் கொள்ளை அழகு 🙂

      amas32

    • rajinirams 11:07 am on October 19, 2013 Permalink | Reply

      கோபம் கொள்ளும் குழந்தைகளையும்,கணவனையும் சமாதானப்படுத்தும் பாடல்களை கொண்ட அருமையான பதிவு-அதுவும் தமிழ் திரையுலகின் தலைசிறந்த “நான்கு”கவிஞர்களை ஒருங்கிணைத்தது சூப்பர். கோபம் கொள்ளும் காதலியை சமாதானப்படுத்தும் ஒரு அருமையான பாடல் கவிஞர் வைரமுத்து அவர்களின் “பொன் மானே கோபம் ஏனோ”-ஒரு கைதியின் டயரி.கோபமான கணவனை மனைவி சமாதனப்படுத்தும் பாடல்-தென்ன மரத்துல தேளு கொட்ட பனைமரத்துல நெறி கட்டும்-வீட்டுக்குள்ள கோபம் வேணாம் கோர்ட்டுக்குள்ள இருக்கட்டும்-சாட்சி-வைரமுத்து.
      இன்னொரு பாடல் எந்த படம் தெரியவில்லை-கோபம் ஏனோ கண்ணே உன் துணைவன் நானல்லவா..அன்பே எந்தன் தவறல்ல….. நன்றி.

  • mokrish 9:30 pm on October 7, 2013 Permalink | Reply  

    அனல் மேலே 

    ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்த அவர்கள் அறிந்த வேறு ஒரு விஷயத்தை ஒப்பிட்டு சொல்லும் உவமை மொழிக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது. இதன் மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களுக்கு விரைவில் சென்று சேரும். உவமைகளை சரியாகப்  பயன்படுத்துவதில் சங்ககாலப் புலவர்கள் சிறந்து விளங்கினர். குறுந்தொகை ஒரு  உவமை களஞ்சியம் என்றே சொல்லலாம்.

    தமிழ் இலக்கியம் முன் வைத்த இரண்டு முக்கியமான விஷயங்கள் பக்தியும் காதலும். இந்த இரண்டுக்கும் பொருந்தும் சில உவமைகள் உண்டு மாணிக்கவாசகர் தழலது கண்ட மெழுகது போல என்கிறார். திருவருட்பாவில்  அலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் என்றும் பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்  துரும்பே எனஅலை கின்றேன் என்றும் வரிகள் உண்டு. நெருப்பில் விழுந்த மெழுகு போல என்றும் கடலில் தத்தளிக்கும் துரும்பு போல என்று விளக்கும்போது  சட்டென்று இதுதான் விஷயம் என்று புலப்படுகிறது.

    பக்தி காதல் இந்த இரண்டும் கவிஞர் வாலிக்கு  Home Ground ல் ஆடுவது போல. மேலே சொன்ன இரண்டு உவமைகளையும் ஒன்றாக கோத்து அதை பக்தி காதல் இரண்டு நிலைகளிலும் சொல்கிறார். பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)

    http://www.youtube.com/watch?v=9a0rNJBS594

    மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

    மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்

    ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்

    என்று பக்தி ரசம் சொல்கிறார். முருகன் மேல் உள்ள பக்தியில் அனல் மேல் விழுந்த மெழுகு போல உருகி கடல் மேல் விழுந்த துரும்பு போல அலைந்த ஒரு பெண்ணின் நிலை

    அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி வாணி ஜெயராம்) இதே உவமைகளை வைத்து காதலில் தவிக்கும் ஆணின் நிலை சொல்கிறார்

    http://www.youtube.com/watch?v=AAQfccjYAlQ

    மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு

    மேனிமீது எழுதும் மடல்தான்  உறவு

    தலையிலிருந்து பாதம் வரையில்

    தழுவி கொள்ளலாம்

    என்று பெண் சொல்ல அதற்கு ஆண் சொல்லும் பதில்

    அதுவரையில் நான்…அனலில் மெழுகோ

    அலைகடலில்தான் அலையும் படகோ

    இரண்டு உவமைகளை இணைத்து பக்திக்கு ஒரு பாடல் காதலுக்கு ஒரு பாடல். அதுதான் வாலி!

    மோகனகிருஷ்ணன்

    310/365

     
    • amas32 9:52 pm on October 7, 2013 Permalink | Reply

      //மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

      மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

      அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்

      ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்//

      என்ன அற்புதமானப் பாடல் இது மோகன்! my most favourite song! பாடலைக் கேட்கும் பொழுதே கண்கள் குளமாகிவிடும் எனக்கு. simple lines, tells everything. காதலாகிக் கசிந்து உருகி… நம்முடைய ஹிந்து மதத்தில் தான் இறைவனையும் நாம் காதலிக்கத் தடை ஏதும் இல்லை.

      நீங்கள் கம்பேர் பண்ணியிருக்கும் அடுத்தப் பாடல் சூப்பரோ சூப்பர் 🙂

      //அதுவரையில் நான்…அனலில் மெழுகோ

      அலைகடலில்தான் அலையும் படகோ//

      நல்ல பதிவு!

      அனல் மேலே பனித்துளி
      அலைபாயும் ஒரு கிளி
      மரம் தேடும் மழைத்துளி
      இவை தானே இவள் இனி
      பாடலும் சிறிது இந்த எண்ணங்களைத் தான் வெளிப்படுத்துகிறதோ?(வாரணம் ஆயிரம்)

      amas32

    • rajinirams 10:54 am on October 9, 2013 Permalink | Reply

      அனல் மேல் மெழுகானேன்-பக்தி,காதல் இரண்டு நிலைகளிலும் கலக்கிய கவிஞர் வாலியின் திறமையை அழகாக எடுத்துக்காட்டிய அருமையான பதிவு.

  • G.Ra ஜிரா 4:50 pm on September 23, 2013 Permalink | Reply  

    இன்னொரு நேசம் 

    அவனுக்கும் முன்பு திருமணம் ஆகியிருந்தது. அவளுக்கும் திருமணம் ஆகியிருந்தது. மனைவியைப் பறிகொடுத்தவன் அவன். கணவனால் துன்புறுத்தப்பட்டவள் அவள். கையிலோ சிறு குழந்தை.

    ஏதோவொரு நெருக்கம். ஏதோவொரு ஏக்கம். சாப்பிட்டவர்களுக்கு திரும்பத் திரும்பப் பசிக்கும் என்பது உலகவிதியல்லவா! சாப்பிடாமல் இருப்பதும் தவறல்லவா!

    தலைவாழையிலையிருக்கிறது. இலையில் பலவகை உணவுகள் இருக்கின்றன. சாப்பிடும் ஆசையும் இருக்கிறது. நன்றாகச் சாப்பிடும் உடல்வாகும் இருக்கிறது. ஆனாலும் சாப்பாடு அப்படியே இருக்கிறது.

    கண்களில் பசி இருந்தாலும் கைகளில் ஏதோவொரு தயக்கம். ஆனால் இருவரும் பழகப் பழக அந்தத் தயக்கம் உடைகிறது. காதல் புரிகிறது.

    நான் சொல்லிக் கொண்டிருப்பது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் உண்டாகும் பாடல் காட்சி.

    பொதுவாக தமிழ்ச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டாம் காதல் என்பது இரவு முடிந்து பகல் வருவது போல இயல்பானது. ஆனால் பெண்ணுக்கு? வந்துவிட்டதே. அதுவும் எப்படி?

    உயிரிலே எனது உயிரிலே
    ஒரு துளி தீயை உதறினாய்

    தீயை உதறினால் என்னாவகும்? பக்கென்று பற்றிக் கொள்ளும். அப்படித்தான் பற்றி எரிகிறது அவளது உயிர். தீயென்றால் அணைக்கத்தான் வேண்டும். அணைப்பதற்கு அவன் வரவேண்டுமே!

    அவன் வந்தான். ஆனால் அவள் உணர்வினில் வந்தான். ஒவ்வொரு அணுவிலும் கலந்தான். உணர்வில் மட்டும் கலந்தால் போதுமா?

    உணர்விலே எனது உணர்விலே
    அணுவென உடைந்து சிதறினாய்

    பக்கத்தில்தான் அவன் இருக்கிறான். ஆனால் தொடமுடியவில்லை. கடலுக்கும் வானத்துக்கும் இடையே எவ்வளவோ தூரம். ஆனாலும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன. முட்டிக் கொள்கின்றன.

    அருகினில் உள்ள தூரமே
    அலைக்கடல் தீண்டும் வானமே

    சுவாசிப்பதற்கு கூட காற்று வேண்டும். ஆனால் நேசிக்கத்தான் இதயத்தைத் தவிர எதுவுமே தேவையில்லை. அந்த நேசம் கூட ஒருமுறை மட்டும் தான் வரவேண்டுமா? மறுமுறை வரக்கூடாதா? காதல் போயின் சாதல் மட்டும் தானா? ஒருமுறைதான் காதல் வரும் என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? இல்லையென்றால் கண்ணதாசன் சொன்னது போல் மறுபடியும் வருமா?

    நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா!
    நேசமும் ரெண்டு முறை வாராதா!

    காதல் வந்தாலும் கூடவே பண்பாட்டுக் கவலைகளும் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. அவளுக்கும் அந்தக் கவலை உண்டு.

    ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
    பெண்ணாடீ நீ என்று முறைக்குதே
    என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே!

    தாமரை எழுதிய இந்தப் பாடலை படிக்கும் போது எனக்கு இன்னொரு திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. மழலைப்பட்டாளங்கள் படத்தில் வரும் “கௌரி மனோகரியைக் கண்டேன்” என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்.

    அதிலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான். ஆறுகுழந்தைகளுக்குத் தாயான விதவைக்கும் ஆறு குழந்தைகளுக்கு தந்தையான மனைவியை இழந்தவனுக்கும் இடையே காதல் வருகிறது. அந்த நாயகியும் வேட்டையாடு விளையாடு நாயகியைப் போலத்தான் புலம்புகிறாள்.

    பருவங்கள் சென்றாலும் ராதை
    அவள் கவிராஜ சங்கீத மேதை
    கண் முன்பு அழகான ஆண்மை
    நான் கல்லல்ல கனிவான பெண்மை
    பண்பாடு என்பார்கள் சிலரே
    இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
    என் பாடு நான் தானே அறிவேன்
    உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்

    இப்படியாக ஏக்கப் பெருமூச்சு நாயகிகளைக் காதலிக்காத விடாத பண்பாட்டையும் சமூகத்தையும் என்ன சொல்வது! காதலிக்க வேண்டியவர்களை காதலிக்க விடாததாலோ என்னவோ குழந்தைக் காதலும் பொறுப்பற்ற விடலைக் காதலுமே காதல் என்று ஆகிவிட்டது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – உயிரிலே என் உயிரிலே
    வரிகள் – தாமரை
    பாடியவர் – ஸ்ரீநிவாஸ், மகாலஷ்மி ஐயர்
    இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
    படம் – வேட்டையாடு விளையாடு
    பாடலின் சுட்டி – http://youtu.be/vNy2IQ7RD-M

    பாடல் – கௌரி மனோகரியைக் கண்டேன்
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர்கள் – வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மழலைப் பட்டாளம்
    பாடலின் சுட்டி – http://youtu.be/rn7wDu5IOe0

    அன்புடன்,
    ஜிரா

    296/365

     
    • amas32 9:26 pm on September 24, 2013 Permalink | Reply

      தாமரையின் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு பெண்ணினால் பெண்ணின் உணர்வை அழகாகச் சொல்ல முடியும். மேலும் பெண் கவிஞர்களே அரிது.

      ஆனால் கண்ணதாசனும் ஒரு பெண் கவிஞருக்கு ஈடாகவோ அதற்கும் மேலோ நீங்கள் குறிப்பிட்டுள்ளப் பாடலில் உணர்வுகளை விவரித்து இருக்கிறார்!

      //பண்பாடு என்பார்கள் சிலரே
      இந்தப் பெண் பாடு அறிவார்கள் எவரே
      என் பாடு நான் தானே அறிவேன்
      உயர் அன்போடு மனம் போல இணைந்தேன்//

      அற்புதமான வரிகள். கவியரசர் கவியரசர் தான்!

      amas32

    • Uma Chelvan 3:32 am on September 25, 2013 Permalink | Reply

      Nice and decent write up on a complicated subject. Kudos.

    • rajinirams 10:37 am on September 25, 2013 Permalink | Reply

      நீங்கள் எடுத்துக்கொண்ட பதிவும் அதற்கேற்ற பாடல்களும் வித்தியாசம் மட்டுமல்ல,சென்சிடிவான விஷயமும் கூட.மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.கவியரசரின் வரிகள் அற்புதம்,வைதேகி காத்திருந்தாள் படத்தின் வாலியின் வரிகளும் அருமையாக இருக்கும்-“தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது” என்று நாட்டிய பெண் அவர் மொழியில் பாடுவது போலவே எழுதியிருப்பார்.

  • G.Ra ஜிரா 7:55 pm on September 8, 2013 Permalink | Reply  

    வேறிடம் 

    பிறந்த இடம் ஒன்றிருக்க அங்கிருந்து பிடுங்கியெடுத்து வேறொரு இடத்தில் வளரவிடுவது நியாயமா?

    எதையென்று கேட்கின்றீர்களா? செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வமாக நாம் கொண்டாடும் பிள்ளைச் செல்வத்தைதான் சொல்கிறேன்.

    பெற்ற குழந்தையை அப்படியே எடுத்துக் கொடுத்துவிட எந்த சராசரித் தாயும் சம்மதிக்க மாட்டாள். அது ஒரு பெரும் துன்பம். அப்படிக் குடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். குடுத்த பிறகு அவர்கள் கடைசி வரை முழுமையாக உரிமையைச் சொல்லிக்கொள்ள முடியாத நிலையே உண்டாகியிருக்கிறது.

    அன்பைத்தேடி என்றொரு படம். அந்தப் படத்தின் நாயகி ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழந்தை அவளுக்கல்ல. அவளது கணவன் தவறுதலாகத் தொலைத்து விட்ட அக்காவின் குழந்தைக்கு மாற்றாக கொடுப்பதற்காக இந்தக் குழந்தையை பெறப் போகிறாள்.

    கொடுக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவளைச் சுடுகிறது. அந்தச் சூட்டில் சொற்கள் பாடலாகி மாறி அழுகையோடு கலந்து வருகிறது.

    சிப்பியிலே முத்து – அது சிப்பிக்கென்ன சொந்தம்
    தென்னையிலே இளநீர் – அது தென்னைக்கென்ன சொந்தம்
    ஓங்கி வரும் முல்லை – அது ஒரு கொடியின் பிள்ளை
    எடுத்துக் கொண்டு போனால் – அது கொடிக்குச் சொந்தமில்லை

    அவள் சொல்கின்ற ஒவ்வொன்றும் அவளுடைய நிலையை உணர்த்துகின்றன. எந்தச் சிப்பியாலும் முத்தை எடுக்கின்றவர்களைத் தடுக்க முடியாது. அதே நிலைதான் தென்னைக்கும் முல்லைக் கொடிக்கும். அப்படியொரு கையறு நிலையில்தான் அவள் இருக்கிறாள்.

    அவளைப் போலவே பழங்கதைகளில் துன்பப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. அவர்களையும் பாட்டில் சொல்கிறாள்.

    கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை
    கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

    எவ்வளவு சத்தியமான வரிகள்! வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசனைத் தவிர யார் எழுதியிருக்க முடியும்!

    இதே போல பணம் படைத்தவன் படத்தில் இன்னொரு பாடல் உண்டு. பிரிந்து போன குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காக தன் குழந்தையை தம்பி குழந்தையாக நடிக்கக் கொடுக்கிறான் அண்ணன். அதற்கு அவன் மனைவியும் உடந்தை. கொடுத்ததுதான் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு நிம்மதியாக இருந்தார்களா?

    மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
    மன்னவன் மட்டும் அங்கிருக்க
    காணிக்கையாக யார் கொடுத்தார்
    அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் (அவன்)
    அது கடமை என்றே நான் கொடுத்தேன் (அவள்)

    வாலி எழுதிய அருமையான பாடல் இது. ஒரு குடும்பம் ஒன்றாக வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் கொடுத்த காணிக்கைதான். ஆனால் பெற்ற குழந்தையின் பிரிவு வாட்டுகிறதே!

    கொடியில் பிறந்த மலரை
    கொடி புயலின் கைகளில் தருமோ!
    மடியில் தவழ்ந்த மகனை
    தாய் மறக்கும் காலம் வருமோ!

    யோசித்துக் கொடுத்தாலும் யோசிக்காமல் கொடுத்தாலும் இப்படிப் புலம்புவதை தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளால் பிரிந்த குடும்பம் அவள் பெற்ற மகனால் சேரும் என்று நம்புகிறாள்.

    இன்று நாளை மாறும்
    நம் இதயம் ஒன்று சேரும்
    சென்ற மகனும் வருவான்
    முத்தம் சிந்தை குளிரத் தருவான்!

    அவள் எண்ணம் கதையில் பலித்து அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்ந்தார்கள்.

    பெற்றவர்கள் நிலை இப்படியிருக்க… அப்படிக் கொடுக்கப்பட்ட பிள்ளையின் நிலை எப்படியிருக்கும்? அதை பணக்காரன் படப்பாடலில் மு.மேத்தா எழுதியிருக்கிறார்.

    பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
    பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா
    பிள்ளையின் மனது பித்தாச்சு இங்க பெத்தவ மனசு கல்லாச்சு
    இன்னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு போன வில்லாச்சு

    தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகள் உண்மையான பெற்றோர்கள் மீது ஒரு நெருடலான அன்பையே காட்டுவார்கள் என்பதை இந்தப் பாடலில் மு.மேத்தா சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

    முருகனால் வேண்டுமானால் பார்வதி மீதும் கார்த்திகைப் பெண்கள் மீதும் சமமாக அன்பு காட்ட முடியலாம். ஆனால் மனிதர்களுக்கு அந்த அளவுக்கு வலிமையான உள்ளம் இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – சிப்பியிலே முத்து
    வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – அன்பைத் தேடி
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=PuD5y0kY4RY

    பாடல் – மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
    வரிகள் – கவிஞர் வாலி
    பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈசுவரி
    இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
    படம் – பணம் படைத்தவன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=8C-A5-Rja1o

    பாடல் – பெத்து எடுத்தவதான்
    வரிகள் – மு.மேத்தா
    பாடியவர் – மலேசியா வாசுதேவன்
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – வேலைக்காரன்
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=xUeBwu4RDAQ

    அன்புடன்,
    ஜிரா

    281/365

     
    • Murugesan 11:59 pm on September 8, 2013 Permalink | Reply

      Nalla pathivu nandri jira

    • amas32 10:45 am on September 9, 2013 Permalink | Reply

      பிரிவின் துயரம் டிகிரி மட்டுமே வேறுபடும். அனைத்துப் பிரிவுகளும் சோகத்தைத் தருவது தான். பெண் புகுந்த வீடு செல்வதும் வளர்ந்த பயிரை பிடுங்கி வேறிடம் நடுவது போல் தான். அங்கே அன்பென்னும் நீரூற்றி, அறமென்னும் உரமிட்டு வளர்த்தால் திரும்ப நடப்பட்ட பெண்ணென்னும் பயிர் செழித்தோங்கி வளரும்.

      ஆனால் நீங்கள் இந்தப் பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது இளந்தளிர் பற்றியது. என் தோழியின் அக்கா தன் முதல் குழந்தையை குழந்தையில்லா தன நாத்தனாருக்குப் பெற்று ஈன்றாள். எவ்வளவு பெரிய தியாகம் இது! தத்துப் பற்றிய ஒரு உண்மை சம்பவத்தின் என் பதிவின் சுட்டி இங்கே http://amas32.wordpress.com/2013/07/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

      amas32

    • uma chelvan 11:33 am on September 9, 2013 Permalink | Reply

      The Movie “Kulama Gunama” based on the same concept!!

    • rajinirams 9:31 am on September 10, 2013 Permalink | Reply

      அருமை-நல்ல நெகிழ்ச்சியான பதிவு. மூன்று பாடல்களுமே சூழ்நிலைக்கேற்ப அருமையாக எழுதப்பட்ட பாடல்கள்.”கோட்டை கட்டும் ராஜாவுக்கு பிள்ளை இல்லையாம்,குப்பை தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்”-தாயும் இன்றி தந்தை இன்றி வாழும் பிள்ளை எங்கே செல்லும் சொல்லுங்களேன் என்ற பட்டாக்கத்தி பைரவனின் கவியரசர் வரிகளும்,சின்ன தாயவள் தந்த ராசாவே “முள்ளில்”தோன்றிய சின்ன ரோசாவே என்ற வாலியின் வரிகளும் இதே போன்று மனதை கணக்க வைக்கும் அற்புத வரிகளே. நன்றி.

  • G.Ra ஜிரா 9:57 pm on August 24, 2013 Permalink | Reply  

    கை, செய் 

    கை என்னும் உறுப்புக்கு தெலுங்கில் செய் என்றே பெயர். வேலைகளை எல்லாம் செய்வதனால் அது செய் என்றழைக்கப்படுகிறது. பழைய தமிழ்ப் பெயர்தான். தமிழில் வழக்கொழிந்து தெலுங்கில் மட்டும் நிலைத்து விட்ட பெயர்.

    அந்தக் கையை நிறைய தமிழ்ப் பாடல்களில் காணலாம் என்றாலும் இந்தக் கட்டுரையில் மூன்று பாடல்களை மட்டும் எடுத்துப் பார்க்க நினைக்கிறேன்.

    முதலில் புலமைப்பித்தன் எழுதிய வரிகளைப் பார்க்கலாம்.

    எதுகை அது உனது இருகை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
    ஒருகை உடல் தழுவ மறுகை குழல் தழுவ இன்பம் தேடட்டுமே
    (பாடல் – அமுதத் தமிழில். படம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இசை-எம்.எஸ்.வி)

    எதுகை பொருந்தி வரும். தொடர்ந்து வரும். நயமும் தரும். அப்படி அவன் கைகள் அவள் பெண்மைக்குப் பொருந்தியும் தொடர்ந்தும் நயமாகவும் வரட்டும் என்று விரும்புகிறாள். அவ்வாறாக ஒரு கை உடலையும் மறுகை குழலையும் தழுவும் போது அங்கு தவழும் இன்பத்துக்கு குறைவேது?

    அடுத்தது கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பார்ப்போம். பாடலுக்கான காட்சியை முதலில் சொல்லி விடுகிறேன். அவள் பெயர் பத்மாவதி. அவள் அலர் அமர் திருமகளின் வடிவம். அவள் மணக்க விரும்புவது ஸ்ரீநிவாசனை. அந்த ஸ்ரீநிவாசனே ஒரு குறத்தியாக வந்து பத்மாவதிக்கு குறி சொல்லி ஆடிப் பாடும் பாடல் இது. அதற்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்களேன்.

    மங்கை தண்கை மலர்க்கை
    அந்த மலர்மகள் வழங்கும் திருக்கை
    பங்கய மலரே இருக்கை
    அந்த பாற்கடல் நாயகன் துணைக்கை
    (படம் – தெய்வத் திருமணங்கள், இசை – எம்.எஸ்.விசுவநாதன்)

    அவளுடைய பெயரிலேயே குளிர்ந்த தாமரை இருக்கிறது. பத்மாவதியல்லவா. அந்த மங்கையின் கையும் குளிர்ந்த மலர்க்கையாம். அலைமகள் அள்ளி வழங்கும் செல்வம் நிறைந்த கை. அவளுடைய இருக்கை பங்கய மலர். அவளுக்கு பாற்கடல் பரந்தாமனே துணைக்கை.

    ஏன் இத்தனை கைகள்? குறத்தி கை பார்த்துதானே குறி சொல்ல முடியும்!

    இதையெல்லாம் விட என்னை ஆச்சரியப்படுத்தியது டி.ராஜேந்தரின் வரிகள். அவர் கைக்கு உவமை சொன்னது போல வேறு யாரும் சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

    அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது
    (பாடல் – மோகம் வந்து தாகம் வந்து, படம் – உயிருள்ளவரை உஷா, இசை – டி.ராஜேந்தர்)

    ஐந்து விரல்களை ஐந்து தலைகளாக்கி கையை நாகம் என்று உவமித்தது நல்ல கற்பனை. மோகம் கொண்ட வேளையில் அவளுடைய கை ஐந்துதலை நாகம் போல நெளிவதாகச் சொல்வதும் பொருத்தம் தானே!

    இதுவரை திரையிலக்கியம் பார்த்தோம். இனி பழந்தமிழ் இலக்கியம் கொஞ்சம் பார்க்கலாமா?

    கை என்ற சொல் ஒரு அகவுணர்வைக் குறிக்கும். அந்த உணர்வு நிலைக்கு கைந்நிலை என்று பெயர்.

    அதென்ன கைந்நிலை?

    காமம் பாடாய்ப் படுத்தும் உடல் வாதையைக் கூடல் கொண்டு தீர்க்க யாரும் இல்லாத நிலை கைந்நிலை.

    அந்த நிலையில் வருந்திடும் பெண்களைத்தான் சமூகம் கைம்பெண் என்று அழைக்கிறது.

    அந்த உணர்வுநிலையை முன்னிறுத்தி சங்கம் மருவிய காலத்தில் ஒரு நூல் எழுந்தது. பதினென் கீழ்க்கணக்கு வரிசையில் கடைசியாக வைக்கப்பட்ட அந்த நூலின் பெயரே கைந்நிலை என்பதுதான்.

    இந்த நூலை இயற்றியவர் பெயர் புல்லங்காடர். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்து திணைகளிலும் கைந்நிலையை முன்னிறுத்தி எழுந்த ஒரே நூல் கைந்நிலை மட்டுமே எனலாம். அந்த நூலில் ஒரு அழகான பாடலைப் பார்க்கலாமா?

    நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக்
    கேச மணிந்த கிளரெழிலோ ளாக
    முடியுங்கொ லென்று முனிவா னொருவன்
    வடிவேல்கை யேந்தி வரும்

    புன்னை மரத்து நன்மலரையும்
    வேங்கை மரத்தின் பூவினையும்
    சூடிக் கொண்ட கிளர் எழில் கூந்தலாள் நான்
    பிரிவாற்றாமை துன்பம் வருத்துவதால்
    அழிந்து போய்விடுவேனோ என்று அஞ்சி
    எதற்கும் அஞ்சாதவனாய் தன்னுயிரை வெறுத்து
    கையில் வேலேந்தி காட்டு விலங்குகளைத் தாண்டி
    இரவில் வருவான்! இன்பம் தருவான்!

    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
    பாடல் – அமுதத் தமிழில் எழுதும் கவிதை
    வரிகள் – புலவர் புலமைப்பித்தன்
    பாடியவர்கள் – ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்
    பாடலின் சுட்டி – http://youtu.be/RDARFimmHLg

    பாடல் – மங்கை தண்கை மலர்க்கை
    வரிகள் – கவியரசு கண்ணதாசன்
    பாடியவர் – வாணி ஜெயராம்
    இசை – திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விசுவநாதன்
    படம் – தெய்வத் திருமணங்கள் (ஸ்ரீநிவாச கல்யாணம்)
    பாடலின் சுட்டி – கிடைக்கவில்லை

    பாடல் – மோகம் வந்து தாகம் வந்து
    பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    வரிகள், இசை – டி.ராஜேந்தர்
    படம் – உயிருள்ளவரை உஷா
    பாடலின் சுட்டி – http://youtu.be/1S3XGSA4qTk

    அன்புடன்,
    ஜிரா

    266/365

     
    • rajinirams 9:01 pm on August 26, 2013 Permalink | Reply

      “கை” தட்டி பாராட்ட வேண்டிய நல்ல பதிவு. முக்கியமான மற்ற இரண்டு பாடல்கள்-ஹோ ஹோ ஹோ -கை கை மலர் கை, இது நாட்டை காக்கும் கை:-))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel