யானோ கவிஞன்?
- படம்: நினைத்தாலே இனிக்கும்
- பாடல்: பாரதி கண்ணம்மா
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
- Link: http://www.youtube.com/watch?v=Q9XrLMK8nbM
பாரதி கண்ணம்மா, நீயடி சின்னம்மா, கேளடி பொன்னம்மா,
அதிசய மலர் முகம், தினசரி பல ரகம்,
ஆயினும் என்னம்மா? தேன்மொழி சொல்லம்மா!
கண்ணதாசன் அவர்களின் உதவியாளராக இருந்த இராம. கண்ணப்பன் எழுதிய ‘அர்த்தமுள்ள அநுபவங்கள்’ (’அநுபவம்’ என்றுதான் எழுதியிருக்கிறார்கள், ’அனுபவம்’ என்றல்ல) என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் கண்ணதாசன் பாரதியைப்பற்றிச் சொல்லும் பகுதி மிகவும் உணர்ச்சிகரமானது:
‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!’
‘அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’
கண்ணதாசன் சொன்னால் ஆச்சா? நாம் இப்போதும் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்!
***
என். சொக்கன் …
10 11 2013
343/365
bganesh55 6:59 am on November 11, 2013 Permalink |
அதானே… கண்ணதாசனின் வரிகளின் எளிமை திரைத் துறைக்கும், கருப்பொருளின் அடரத்தி அவர் கவிதைகளிலும் வெளிப்பட்டதை மற(று)க்க முடியுமா என்ன? பாரதி ஒரு சிகரம் எனில் கண்ணதாசனும்…!
amas32 8:47 am on November 11, 2013 Permalink |
சூப்பர்! எனக்குக் கண்ணதாசனை மிஞ்சி எவரும் இல்லை என்று தோன்றும். தனிப்பட்ட டேஸ்ட், ஈர்ப்பு என்று நினைக்கிறேன் 🙂
amas32
Uma Chelvan 9:45 am on November 11, 2013 Permalink |
என்ன ஒரு அருமையான பாடல். அதிசய மலர் முகம் என்றது போல், பாரதி ஒரு ரோஜா என்றால் ( மலர்களின் ராஜா அழகிய ரோஜா ) கண்ணதாசனும் ஒரு மல்லிகைதான். இரு வேறு நிறம், இரு வேறு மணம். இரண்டுமே சிறந்தது அதனதன் குணத்தில் !!!இங்கே MSV யையும் மறந்து விடக்கூடாது . நிஜமாகவே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள். இந்த பாடலை தந்தற்கு MSV குதான் உண்மையில் கோவில் கட்டி இருக்க வேண்டும் !!!
rajinirams 10:09 am on November 11, 2013 Permalink |
தன்னடக்கம் காரணமாக கண்ணதாசன் அவ்வாறு கூறியிருந்தாலும் அவர் பல காவிய பாடல்கள் படைத்த கவியரசர் ஆயிற்றே-அதனால் தான் “நீ தாடியில்லாத தாகூர் -மீசையில்லாத “பாரதி”என்று கவிஞர் வாலி அவருக்கு இரங்கற்பா பாடினார்.