காளமேகமும் காளிதாசனும் கண்ணதாசனும்
ஒரு கதை சொல்லப் போகிறேன். நடந்த கதையோ. கற்பனைக் கதையோ. ஆனால் கருத்துள்ள கதை.
புலவர்களைப் போற்றும் புரவலர்களும் இருந்த காலம் உண்டு. திருமலைராயன் அவையிலும் அறுபத்துநான்கு புலவர்கள் இருந்தனர். தண்டிகைப் புலவர்கள் என்று அவர்களுக்குப் பெயர். அவர்களின் புலமைக் கிணற்றில்தான் திருமலைராயன் தமிழ்த் தாகத்தை தீர்த்துக் கொண்டிருந்தான்.
அந்தக் கிணறுகளுக்கும் ஆணவம் வந்துவிட்டது. சுற்றிலும் தாளமேள ஆட்கள். பல்லக்குத் தூக்கிகள். கட்டியக்காரர்கள். போகையிலும் வருகையிலும் வாழ்த்தொலிகள்.
அந்த நிலையில் அந்த ஊருக்கு வந்தார் காளமேகப்புலவர். தண்டிகைப் புலவர்கள் நகர்வலம் வந்த வேளை அது. அவர்களைப் புகழ்ந்து காளமேகத்தையும் கூவச் சொன்னார்கள். “வருங்கால ஜனாதிபதி அதிமதுரக்கவிராயர் வாழ்க” என்று கூவியிருக்கலாம் காளமேகம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அவர்களின் செய்கை தவறு என்று பாடினார்.
அந்தச் செய்தி அரசனுக்கு வேறுவிதமாகப் போனது. காளமேகப்புலவரின் மேல் ஒரு வெறுப்பு உண்டானது. அதனால் அரசவைக்கு வந்த காளமேகத்தை ஒழுங்காக வரவேற்கவில்லை. இருக்கை கொடுக்கவில்லை.
அப்போது காளமேகம் கலைமகளை மனதில் நினைத்து வணங்கினார். திருமலைராயனின் இருக்கை வளர்ந்து காளமேகத்துக்கும் இடம் கொடுத்தது.
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாசனம் வைத்த தாய்
கலைமகளின் அருளால் அரியாசனத்தில் அரசரோடு அரசனாகச் சரியாசனம் பெற்றார் காளமேகம்.. அது அவருடைய பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னது.
இந்தப் பாடலைக் கவியரசர் கண்ணதாசன் ரசித்துப் படித்திருக்க வேண்டும். அதனால்தான் அதைச் சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.
மகாகவி காளிதாஸ் என்றொரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காளிதாசராக நடித்து வெளிவந்த படம். அந்தப் படத்தில் ஒரு காட்சி. மடையனாக இருந்த இடையன் ஒருவனுக்குக் காளியின் அருளால் கல்லாத கல்வியும் சித்திக்கிறது.
ஞானம் சித்தித்த காளிதாசனின் எண்ணத்தில் பெருமை உண்டாகிறது. அது காளியின் அருளின் அருமை என்று உணர்கிறார். அந்த அருளினால்தான் புவியரசருக்குச் சமமாகக் கவியரசராய் ஆக முடிந்தது என்று புரிந்து கொள்கிறார். உடனே பாடல் வருகிறது.
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா.. யார் தருவார் இந்த அரியாசனம்
புவியரசருக்கு இணை கற்றறிந்த கவியரசர் என்று கண்ணதாசன் சொல்வது மிகப் பொருத்தம்.
பாடல் – யார் தருவார் இந்த அரியாசனம்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
படம் – மகாகவி காளிதாஸ்
பாடலின் சுட்டி – http://youtu.be/Hoi4gwSbFas
அன்புடன்,
ஜிரா
157/365
rajinirams 12:47 pm on May 7, 2013 Permalink |
பாடலும் விளக்கமும் அருமை. சிவாஜிக்கு இந்திராகாந்தி எம்பி பதவி கொடுத்த அன்று மாலை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் முதல் பாடல் இதுதான்:-))
anonymous 7:52 am on May 8, 2013 Permalink |
இந்திரா காந்தி வாழ்க:)
மாமேதை சிவாஜியை மதிச்சி, இந்த ஒன்னே ஒன்னாச்சும் செஞ்சாங்களே!
—–
சொல்லப் போனா, இதைக் கண்ணதாசன் எழுதுனதே, எம்.ஜி.ஆரை மனசில் வச்சித் தான்;
அவரே பழைய விகடன் பேட்டிகளில் சொல்லியும் இருக்காரு; (ஆ.வி பொக்கிஷம் – விகடன் பிரசுரம்)
1960 -இல் திமுக-வில் இருந்து கவிஞர் விலகிட்டாரு; ஈ.வெ.கி சம்பத் அவர்களுடன்
ஆனா, சில மாதங்கள்/ஆண்டுகளில், சம்பத், தன்னோட கட்சியைக் கலைச்சிட்டு, காங்கிரசில் ஐக்கியம் ஆகி விடவே…
கண்ணதாசன் “தனி மரமா” நின்னாரு;
அப்போ வந்தது தான், “அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேர்க்கும் நாள் பார்க்கச் சொல்லடி”
= “சிவகாமி மகனான காமராசரை” உள்ளுறையா வச்சி:))
—–
1963 -இல் காங்கிரசில் சேர்ந்தாரு கவிஞர்;
ஆனா அவர் “Open” குணத்துக்கு, அதெல்லாம் சரிப்பட்டு வரலை;
பேர் வாங்கணும்/ சான்ஸ் கிடைக்கணும் -ன்னு தமிழ்க் கொள்கையை மாத்திப் பேசுதல்/ நயந்து போதல்
= இதெல்லாம் கண்ணதாசனால் பண்ண முடியுமா????:)))
anonymous 7:58 am on May 8, 2013 Permalink |
அப்போ எம்.ஜி.ஆர், காங்கிரசுக்கு மாற்றுக் கட்சியில் இருந்தாலும்…
தொடர்ந்து, கண்ணதாசன் தான், தன் படங்களில், எழுத வேணும் -ன்னு கேட்டுக்கிட்டாராம்;
Super Hit – “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும், வாய்ப்பு கவிஞருக்கு!
அதுக்கு அப்பறம் வந்த படம் – மகாகவி காளிதாஸ்;
கட்சி பேதம் பார்க்காமல் செய்த நன்றிக்கு – “யார் தருவார் இந்த அரியாசனம்” -ன்னு பாட்டு எழுதி, மனசில் உள்ளதைக் கொட்டிய கவிஞர்:)
(குறிப்பு:
ஆனா, அதுக்காக, மறுபடியும் அங்கேயே போய் கட்சி மாறிடலை நம்ம கவிஞர்;
கொள்கை உறுதி;
ஆனா, கருத்து வேறு, மனிதம் வேறு)
GiRa ஜிரா 8:11 am on May 9, 2013 Permalink |
அருமையான தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙂
kamala chandramani 1:45 pm on May 7, 2013 Permalink |
அற்புதமான பாடல்! கவிஞர் கலைமகள் அருள் பெற்றவர் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
GiRa ஜிரா 8:11 am on May 9, 2013 Permalink |
உண்மைதான். அவருடைய கவிதைகளைக் கேட்டவருக்கும் படித்தவருக்கும் அந்தச் சந்தேகம் சிறிதும் இருக்காது என்பதே உண்மை.
amas32 9:01 pm on May 7, 2013 Permalink |
சுவாரசியமாக ஒரு கட்டுரையை எழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமே போட்டுவிடலாம் நீங்க! கதையைச் சொல்லி அதனை பாட்டோடு இணைக்கும் லாவகம் அருமை.
இந்த மாதிரி பாடல்கள் நம் மனத்தில் நிற்பதற்கு முக்கிய காரணம் இசை/குரல்.
யார் தருவார் இந்த அரியாசனம் என்ற முதல் வரியைப் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே காதில் பாடல் ஒழிக்க ஆரம்பித்து விடுகிறது. இப்பொழுது வரும் பாடல்ல்களில் நல்ல கருத்துள்ள வரிகள் இருப்பினும் இசையால் மூழ்கடிக்கப் படுவது சோகமே.
அகந்தை கூடாது. எதையும் இறைவன் பரிசாக எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
amas32
GiRa ஜிரா 8:14 am on May 9, 2013 Permalink |
வரிகளுக்குத் தோதான இசை என்பதெல்லாம் இப்பல்லாம் கனவுதான்.
எப்பவும் அகந்தை கூடாது. இந்தக் கதையிலே கூட திருமலைராயன் அதற்குப் பிறகும் திருந்தவேயில்லை. கடும் போட்டியெல்லாம் வைக்கிறார். காளமேகம் வெற்றியும் பெறுகிறார். முத்து மூட்டை ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறான். வாங்கி வரும் வழியில் திறந்து பார்த்தால் அத்தனையும் ஆமணக்கு முத்துகள். ஆத்திரத்தில் சபித்து விடுகிறார் காளமேகம். மண் மாரி பொழிந்து ஊர் இன்றும் மணல் மேடாகக் கிடக்கிறது
anonymous 8:06 am on May 8, 2013 Permalink |
“யார் தருவார் இந்த அரியாசனம்?”
அரி ஆசனத்துக்காக, தமிழ் ஆசனத்தைத் துறக்காத “வீறு” உள்ளம் = 1) கம்பன் 2) கண்ணதாசன்;
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? -ன்னு, மன்னனையே கேட்டவன் கம்பன்!
அகந்தையால் அல்ல! ஆராத தமிழ் உணர்வால்!
(ஆனா, பாவம், அரசியல் காரணங்களுக்காக, “ஆரிய அடிவருடி” -ன்னு கம்பனைத் தவறாகப் பார்த்து விட்டனர் சில தலைவர்கள்;
கம்பனை “உண்மையா”ப் படிச்சாத் தெரியும் – தேவனோ/ அசுரனோ – அவன் எதையும் ஒளிக்காது/ மறைக்காது சொல்வதை)
—-
அதே போல் தான் கண்ணதாசனும்;
இல்லீன்னா, திருமுருக. வாரியார் கூடவே, துணிஞ்சி சண்டை போடுவாரா நம்ம கவிஞரு?:))
= “யார் தருவார் இந்த அரியாசனம்?”
anonymous 8:31 am on May 8, 2013 Permalink |
திருப்பரங் குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
=கந்தன் கருணை படத்துக்கு, பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகள்!
=ஆனா, வாரியாருக்கு, ஏனோ இதில் ஒப்புதல் இல்லை!:)
—–
எங்கோ ஒரு மலையில் சிரிச்சி,
அது இன்னொரு மலையில், ஹா ஹா ஹா -ன்னு எதிரொலிக்கும் -ன்னா…
அந்தச் சிரிப்பு = பேய்ச் சிரிப்பு / அசுரச் சிரிப்பு
அது முருகன் சிரிப்பு இல்லை -ன்னு வாரியார் சொல்லீற,
பாவம்…. இளங் கவிஞர். பூவை செங்குட்டுவன்;
—–
அதே படத்தில், Experienced கவிஞரான, கண்ணதாசனும் உண்டு;
“மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு” -ன்னு முருகன் முதலிரவுக்குப் பாட்டு எழுதினாரு நம்ம கண்ணதாசன்:) Happy 1st Night da Muruga:))
நேரா, வாரியார் கிட்ட சண்டைக்கே போயிட்டாராம் கண்ணதாசன்;
“ஒரு வளரும் கவிஞரை, நீங்களே இப்படிப் பண்ணலாமா?
அசுரன் சிரிப்புக்கே அம்புட்டுச் சக்தி-ன்னா….
ஒரு அழகிய தெய்வத்தின் சிரிப்பு, அதை விட அதிகமா/ அதே சமயம் அழகாவும் எதிரொலிக்காதா?” -ன்னு பிலுபிலு-ன்னு பிடிச்சிக்கிட்டாரு;
வாரியார் was stunned; didnt know what to tell:)
அவரை, மடேர்-ன்னு, பொதுவில் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க அல்லவா?
—–
வாரியாரின் முகத்தைக் கண்ட கண்ணதாசனுக்கே என்னமோ போல ஆயீருச்சி;
தன் “துணிவை”ச் சற்றே குறைத்துக் கொண்டு…
“சுவாமிகளே, நாங்க Music Director கே.வி. மகாதேவன் கிட்ட குடுக்குற பாட்டு, உம்ம வரைக்கும் எதிரொலிக்குதே…
கே.வி. எம் = தென் மாவட்டம் (கன்னியாகுமரி);
நீங்களோ = வட மாவட்டம் (வேலூர்)
அதே போலத் தான், தெக்கத்தி திருப்பரங் குன்றத்தில் சிரிச்சா = வடக்கத்தி திருத்தணியிலும் எதிரொலிக்கும்”
-ன்னு கலாய்க்க, வாரியாரே ஹா ஹா ஹா-ன்னு சிரிச்சிட்டு, பாட்டுக்கு Okay சொல்லீட்டாராம்:)
—–
இதான் கண்ணதாசன்!
“ஆணவம்” அல்ல! அத்தனை தமிழ் வீறு!
யார் “பெறுவார்” இந்த அரியாசனம்? = கண்ணதாசனின் எழுத்து நேர்மை! வாழி!
anonymous 9:00 am on May 8, 2013 Permalink |
Vaariyar with Kannadasan – Rare pic = http://goo.gl/vbBh7
தன்னை, இப்படிப் பொதுவில் கேள்வி கேட்டு மடக்கிட்டாரே-ன்னு வாரியார் தப்பாவே எடுத்துக்கலையாம்;
*வாரியாருக்கும் = குழந்தைச் சிரிப்பு
*கண்ணதாசனுக்கும் = குழந்தை உள்ளம்
ஒரு தமிழ் உள்ளத்தை, இன்னொரு தமிழ் உள்ளம் அறியாதா என்ன? வாழி இந்த உள்ள நலம்!
amas32 8:14 pm on May 8, 2013 Permalink
Nice 🙂
amas32