விருந்தினர் பதிவு : உறங்காத நொச்சி 

’கடல்’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ‘ பாடலில் ஒரு வரி:

பட்சி ஒறங்கிருச்சு,

பால் தயிரா தூங்கிருச்சு,

நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு!

அதென்ன ‘நொச்சி மரத்து இலை? வேறு மரங்கள் ஆகாதா?

இதற்கான விடை ‘குறுந்தொகை’யில் உள்ளது. கொல்லன் அழிசி எழுதிய இந்தப் பாடலைப் பாருங்கள்:

கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

‘ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலையில, மயிலுடைய கால்களைப்போல இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்’ என்று தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள்.

ஆனால் இந்தத் தலைவியைப் பொறுத்தவரை, ‘அந்த நொச்சியும் தூங்கிடுச்சு’ என்கிறார் வைரமுத்து. என்னவோர் அழகு!

சுதர்ஷன்

https://twitter.com/SSudha_