நாம் பள்ளிப்பருவத்தில் தமிழ் படிக்கும் போது தமிழாசிரியர் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்திருப்பார்.
உரைநடைப்பகுதி, செய்யுள் பகுதி, இலக்கணப் பகுதி, துணைபாடப் பகுதி என்று நம் தமிழ் பாடத்தைப் பிரித்திருப்பார்கள்.
இதில் பெயர்ச்சொல், வினைச்சொல், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்றெல்லாம் தொடங்கி கடைசியில் புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் வரை போகும்.
என்ன இது, நான்கு வரி நோட்டில் இலக்கணத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா ?
தொடர்பு இருக்கிறது.
ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல வைரமுத்து அவர்களுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை உண்டு. அவர் , நாம் சிறு வயதில் படித்த இலக்கணத்தையெல்லாம் எந்த ஒரு இலக்கணப் பா வகையிலும் சேராத திரையிசைப் பாடல்களில் புகுத்தியிருக்கிறார்.
ராவணன் படத்தில் வருகின்ற , அய்ஷ்வர்யா ராய் பாடுகின்ற கள்வரே கள்வரே என்ற பாடலில் (http://www.youtube.com/watch?v=XQ46R4yRGZ8)
வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே
வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகின்றதா
என்று எழுதுகிறார். என்ன ஒரு அழகான கற்பனை இது.
தமிழில் வலி மிகும் இடங்கள் என்பது ஒற்று மிகும் இடங்கள். வலி மிகா இடங்கள் என்பது ஒற்று மிகா இடங்கள்.
இதே போன்று, ஜீன்ஸ் படத்தில் வருகின்ற கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலில், என்னையும் உன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்வதற்கு அய்ஷ்வர்யா ராய் என்ன பாடுகிறாள் பாருங்கள்(http://www.youtube.com/watch?v=fZXlCdySjcg)
சல சல சல இரட்டைக் கிளவி
தக தக தக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
என்னமாய் இலக்கணத்தோடு காதலைக் கலந்திருக்கிறார் கவிஞர். அத்தனையும் வைர வரிகள் 🙂 🙂
அஜித் நடித்த வரலாறு படத்தில்
இன்னிசை அளபெடையே, அமுதே, இளமையின் நன்கொடையே என்று எழுதுகிறார்.(http://www.youtube.com/watch?v=QNN1chrIfIs)
அளபெடை என்றால் என்ன ?
அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து நான் வாங்கிய “மாணவன் தமிழ் இலக்கணம்” என்ற நூலில்
அளபெடைக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் இது தான் :
செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய 2 மாத்திரை அளவுடைய நெட்டெழுத்துகள் 3 மாத்திரையாக அளவு கூடி ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்ததற்கு அடையாளமாக நெட்டெழுத்திற்கு இனமான குற்றெழுத்து அடுத்து எழுதப்படும். நெடில் , 2 + குறில், 1 = 3 மாத்திரை.இப்படி 3 மாத்திரைகளாக உயிர் அளபெடுப்பதே அளபெடை எனப்படும்(அளபு + எடை = அளவு எடை கூடுதல்).
இதில் இன்னிசை அளபெடை என்றால் என்ன ?
செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் இனிய இசைக்காக குற்றெழுத்துகள் நெட்டெழுத்துகளாக மாறி அளபெடுக்கும். ஈரசைச் சொற்கள் மூவசைச் சொற்களாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை
எ.கா: கெடுப்பதும் என்பது கெடுப்பதூஉம் என்று அளபெடுத்தது.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
இதென்ன பிரமாதம். குரு என்ற படத்தில் மல்லிகா ஷெராவத் துருக்கி ஆடலழகிகளோடு ஆடும் மய்யா மய்யா என்கிற ஐட்டம் பாட்டில் கூட வைரமுத்து தமிழ்ப் பாடத்தை நுழைத்திருக்கிறார். எப்படி ? இப்படி.
திரி குறையட்டும் தெரு விளக்கு, நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு, அந்தக் கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு
(http://www.youtube.com/watch?v=ztFcz9YToNA)
இடம் சுட்டிப் பொருள் விளக்குக என்ற தமிழ் ஒன்றாம் தாளில் வரும். நினைவுக்கு வருகிறதா ? அப்படியென்றால் என்ன ?
விக்கிப்பீடியா கொடுக்கும் விடையைப் பாருங்கள் :-
“இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் (Explaining with reference to Context) என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் (கவிதை, உரைநடை அல்லது நாடகம்) இருந்து சில வரிகள் கொடுக்கப்படும். மாணவர்கள் அந்த வரிகளைக் கண்டு அது எந்த நூலில் இடம் பெற்ற வரிகள், யார் யாரிடம் கூறுவதாய் அமைந்தது மற்றும் அவ்வரிகளின் பொருள் ஆகியவற்றை விளக்க வேண்டும்.”
ஆக. நம் தமிழின் பெருமையைத் துருக்கி அறியச் செய்த பெருமை வைரமுத்துவுக்கு உண்டு 🙂 🙂
வைரமுத்து மட்டுமல்ல. பா விஜய் அவர்களும் ஒரு பாட்டில் இலக்கணத்தை நுழைத்திருக்கிறார்.
மதுர படத்தில் இடம்பெறும் “இலந்தைப் பழம் இலந்தைப் பழம் உனக்குத் தான்” என்ற இரட்டை அய்ட்டம் பாடலில் ,(http://www.youtube.com/watch?v=Bd_j7419p14)
தேமா உனக்குத் தான் புளிமா உனக்குத் தான், மாமா நான் உனக்கே தான் ……… என்று தேஜாஸ்ரீயும், ரக்ஷிதாவும் விஜய்யைப் படுத்தும் இடத்தில் சீர் பிரித்துப் பார்க்கிறார் கவிஞர் யார் சீரும் சிறப்பும் மிக்கவர்கள் என்று 🙂 🙂
தமிழ்த் திரையிசையில் பல பாடலாசிரியர்கள் இலக்கணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து இவ்விருவர் தான் தமிழ்த் திரையிசையில் இலக்கணத்தை ஏற்றியிருக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரிந்து வேறாரேனும் இலக்கணத்தை ஏற்றியிருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்….
நிரஞ்சன் பாரதி
மகாகவி பாரதியாரின் பரம்பரையில் வந்த நிரஞ்சன் பாரதி, கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் இயங்கிவருகிறார். இவர் எழுதிய பிரபலமான பாடல்கள், ‘மங்காத்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘
கண்ணாடி நீ, கண் ஜாடை நான்’, மற்றும் ‘பாகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சிம்பா சம்பா’.
Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink |
நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை
மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!
amas32 8:37 pm on November 19, 2013 Permalink |
எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!
//என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!
ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂
amas32
rajinirams 11:28 am on November 20, 2013 Permalink |
நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.
நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink |
”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”
வைரமுத்து
படம்: க.கொ.க.கொ
பாடல்: ஸ்மை யாயி..