வளைகாப்பு அலங்காரம்
- படம்: எஜமான்
- பாடல்: ராக்கு முத்து ராக்கு
- எழுதியவர்: வாலி
- இசை: இளையராஜா
- பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
- Link: http://www.youtube.com/watch?v=tEL9mdhD7ZA
அடி ராக்கு முத்து ராக்கு, புது
ராக்குடியைச் சூட்டு!
வளை காப்பு தங்கக் காப்பு, இவ
கைப்பிடிச்சுப் பூட்டு!
இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், அந்த ஆறாவது வார்த்தை(ராக்குடி)க்கு என்ன அர்த்தம் என்று ஒருமுறைகூட யோசித்ததில்லை.
‘ராக்குடி’ என்றால் என்ன? ராத்திரி நேரத்தில் கும்பலாக உட்கார்ந்து தண்ணி போடுவதா?
அடுத்த வார்த்தை ‘சூட்டு’ என்று இருக்கிறது. ஆகவே, ’ராக்குடி’ என்பது ஒரு மலர் அல்லது நகையாகதான் இருக்கவேண்டும் என்று தோன்றிய்து.
அதுவும், ‘சூடு’ என்று சொல்லாமல், ‘சூட்டு’ என்று பாடுகிறார் SPB. ஆக, இந்தப் பாடலின் தொடக்கத்தில் விளிக்கப்படும் ‘முத்து ராக்கு’ என்ற பெண் அந்த நகையை / மலரைச் சூடிக்கொள்ளப்போவதில்லை, இன்னொருவருக்கு, அதாவது, இந்தப் பாடல் அமைப்பின்படி வளைகாப்பு கொண்டாடும் கதாநாயகிக்கு அதைச் சூட்டிவிடப்போகிறார்.
’பெண்களுக்கு வளைகாப்பின்போது ராக்குடி என்ற நகையை அணிவிப்பார்களா?’ என் மனைவியிடம் கேட்டேன்.
‘ஆமாம், கல்யாணம், வளைகாப்பு, பரதநாட்டியம் மாதிரி நிகழ்ச்சியிலெல்லாம் ராக்குடின்னு ஒரு நகையைத் தலையில அணிஞ்சுக்குவாங்க’ என்றார் அவர். கூடவே, ’இதுகூட தெரியாதா உனக்கு?’ என்று கேவலமாகப் பார்த்தார்.
‘ம்ஹூம், தெரியாதே, உன்கிட்ட அந்த ராக்குடி இருந்தா கொஞ்சம் காண்பித்து உதவு’ என்றேன்.
‘என்கிட்ட இல்லை’ என்றார் அவர். ‘வேணும்ன்னா கடைக்குப் போய்ப் புதுசா ஒண்ணு வாங்கலாம்.’
ராக்குடியின் விலை என்னவாக இருக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாததால், நைஸாக எஸ்கேப் ஆகி வந்து இணையத்தில் தேட ஆரம்பித்தேன். ’பெண்கள் தலையை வாரியபின் கூந்தலினூடே திருகி அணியும் வட்ட வடிவமான அணிகலன்’ என்று விளக்கம் கிடைத்தது.
பின்னர், நண்பர் திருமதி சுஷிமா சேகர் ( @amas32 ) இந்த நகையின் புகைப்படத்தை அனுப்பி உதவினார். அதனை இங்கே பார்க்கலாம்: https://4varinote.wordpress.com/?attachment_id=70
நான் விசாரித்தவரையில், ராக்குடி ஒரு புராதன நகை. அதை மிகப் பொருத்தமாகவும் மெட்டுக்கு இசைவாகவும் இந்தப் பாடலில் அழகுறப் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.
அப்புறம் ஒரு விஷயம், இந்தப் பாடல் ஆர். வி. உதயகுமார் எழுதியதாக கேஸட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், பாடல் வரிகள், வார்த்தைத் தேர்வுகளைக் கவனிக்கும்போது இது நிச்சயம் வாலியாகதான் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
இதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, ’எஜமான்’ திரைப்படத்தின் வீடியோவை இணையத்தில் தேடிப் பிடித்தேன். நான் நினைத்தபடி, ‘ராக்கு முத்து ராக்கு’வை எழுதியது வாலிதான், கேஸட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என உறுதிப்படுத்திக்கொண்டேன். அதற்கான சான்று இங்கே: https://4varinote.wordpress.com/?attachment_id=69
***
என். சொக்கன் …
08 12 2012
007/365
BaalHanuman 9:46 am on December 8, 2012 Permalink |
நிஜமாகவே உங்களுக்கு ராக்குடி தெரியாதா ?
என்ன இப்படி ஒரு வெள்ளந்தி மனிதராக இருக்கிறீர்கள் 🙂
ஹய்யோ… ஹய்யோ…
என். சொக்கன் 9:47 am on December 8, 2012 Permalink |
Nope. Learnt 2 days back 🙂
msathia 10:14 am on December 8, 2012 Permalink
அது ராக்கடி. வடமொழிச்சொல். ராக்குடி, ராக்கொடி என்றும் வழங்கப்படுகிறது.
GiRa ஜிரா 2:58 pm on December 8, 2012 Permalink |
சூடாமணின்னு சொல்லியிருந்தா அவர் டக்குன்னு கண்டுபிடிச்சிருப்பாரு. ராக்கொடின்னு ஹிந்திப் பேரைச் சொன்னதால குழம்பிட்டாரு. 🙂
என். சொக்கன் 3:08 pm on December 8, 2012 Permalink
ராமன் / சீதை இடையே அனுமன்வழியாகத் தூது சென்ற அந்த சூடாமணியா? அது சூளாமணி அல்லவோ? ரெண்டும் ஒண்ணுதானே? :-S
amas32 (@amas32) 10:33 am on December 8, 2012 Permalink |
//‘ராக்குடி’ என்றால் என்ன? ராத்திரி நேரத்தில் கும்பலாக உட்கார்ந்து தண்ணி போடுவதா?// I now understand how a man thinks :-))
நான் அனுப்பிய புகைப்படத்தை உபயோகப்படுத்தியதற்கு நன்றி 🙂
பாடலை உன்னிப்பாகக் கவனித்து உள்ளீர்கள். பின்னலுக்கு மேலே முதலில் one strand முடியை ராக்குடியின் பின் உள்ள ஓட்டையில் நுழைத்து மேல் தலையில் பொருந்துமாறு அதை வைத்து பின் மொத்த முடியும் அழுந்தப் பின்னப்படும். ஒரு வளையம் மல்லிச்ச்சரம், அதன் பின்னே ஒருவளையம் கனகாம்பரம் என்று ராகுடியை சுற்றி மலர் அலங்காரம் செய்யப் படும். அது செய்பவர்களின் கற்பனா சக்தியையும் நேர்த்தியையும் பொருத்தது. இந்த அணிகலனை மட்டும் எந்தப் பெண்ணாலும் தானே சூடிக் கொள்ள முடியாது. வேறு ஒருவர் தான் சூட்டி விட முடியும் 🙂
amas32
என். சொக்கன் 10:59 am on December 8, 2012 Permalink |
//இந்த அணிகலனை மட்டும் எந்தப் பெண்ணாலும் தானே சூடிக் கொள்ள முடியாது. வேறு ஒருவர் தான் சூட்டி விட முடியும்//
That’s Valee. Keen observation he does and uses the right words (Choottu instead of Choodu)
@rmdeva 10:42 am on December 8, 2012 Permalink |
ராக்குடிக்கு அர்த்தம் எல்லாம் யோசித்த்தே இல்லை.
இப்போழுதுதான் ராக்குடி என்று நகை இருப்பது தெரியும். மெலொட்டமாக் நானும் எஜமான் பாடல்கள் அனைத்தும் எழுதியது உதயகுமார் என்று நினைத்திருந்தேன்.
NIRANJAN 11:11 am on December 8, 2012 Permalink |
ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும் போதும் ராக்குடி என்றால் என்ன என்று தெரியாமல் விழிப்பேன். இன்று சொக்கன் அவர்களின் விளக்கம் கேட்டு ஐயம் நீங்கப் பெற்றேன்.
இன்னொரு ஐயம்.
அடி ராக்கு முத்து ராக்கு என்பது கதா நாயகியைப் பெயர் சொல்லி அழைப்பது தானா ? அவள் பெயர் வைத்தீஸ்வரி(மீனா) அல்லவா , ஏன் ராக்கு முத்து ராக்கு என்கிறார் வானவராயன் (ரஜினி) ?
என். சொக்கன் 12:16 pm on December 8, 2012 Permalink |
He calls some other girl to help his wife wear this jewel
Kannabiran Ravi Shankar (KRS) 10:17 pm on December 8, 2012 Permalink |
actually ராக்கு is ராக்கொடி jewel only – short form of villagers:)
her friend is as beautiful as the jewel; so, அதே பேரை வச்சிட்டாங்க போல:) = முத்து ராக்கு!
முத்தால் செஞ்ச ராக்கு/ ராக்கொடி
மணி ராக்கு, பவழப் பில்லை எல்லாம் உண்டு
ராக்கு-பில்லை is the combination
ராக்கு = moon; பில்லை = sun (இராக்கொடி / பகற்கொடி)
ராக்கு முத்து ராக்கு
= எலே முத்து ராக்கு, வந்து ராக்கொடியை இவளுக்குச் சூட்டு is what kavignar vaali gestures:)
= ஒரு ராக்கொடியே வந்து ராக்கொடி சூட்டினா எப்பிடி இருக்கும்?:)
GiRa ஜிரா 6:25 pm on December 8, 2012 Permalink |
பரதநாட்டியம் படிக்கிற குழந்தைகளுக்கு டெம்பிள் செட் நகைகள் வாங்குவார்கள். பழைய பாணி நகைகள் பித்தளையில் விலைகுறைந்த கற்கள் வைத்து வரும். வசதி படைத்தவர்கள் தங்க நகைகளையே வாங்குவார்களாக இருக்கும்.
அதில் தலையில் சூடும்/சூட்டும் அணிதான் சூடாமணி. சூளாமணி என்பது பழைய பெயராக இருந்திருக்குமோ என்றொரு எண்ணம். கொஞ்சம் ஆராய வேண்டும்.
சந்திரப்பிரபையும் சூரியப்பிரபையும் தலையுச்சியின் முன்பகுதியில் சூட்டப்பட வேண்டியவை. ராக்குடி உச்சந்தலைக்குச் சற்றுப் பின்னே. அதிலிருந்து ஜடையலரங்காரம் தொடங்கும்.
குழந்தைகளுக்கு அரங்கேற்றம் செய்யும் போது இதெல்லாம் நீங்க வாங்க வேண்டியிருக்கும். பெங்களூரில் மல்லேஷ்வரத்தில் கிடைக்கிறது. 🙂
rajesh N 8:53 pm on December 8, 2012 Permalink |
super sir
Kannabiran Ravi Shankar (KRS) 9:15 pm on December 8, 2012 Permalink |
//இதுகூட தெரியாதா உனக்கு?’ என்று கேவலமாகப் பார்த்தார்//
படிக்கும் போதே, காட்சியைக் கற்பனை செஞ்சிப் பார்த்தேன்: குபீர்-ன்னு சிரித்து விட்டேன்:)))))
அண்ணியார் கேட்ட கேள்வி அப்படி:)
அண்ணியாருக்குக் கம்ப ராமாயண வாசிப்பும் உண்டா என்ன? அதான் போல, அப்படிக் கேட்டிருக்காங்க!
இராக்கொடி என்று நாட்டு வழக்குப் பேரு
ஆனா அதன் அச்சு அசல் பேரு = “சூடா மணி”
அது என்ன “சூடா” மணி? = சூடவே மாட்டாங்களா?
சூடாமல், கையில் வச்சி அழகு பாக்கவா, அம்புட்டு காசு குடுத்து வாங்குறது?
amas அம்மா சொல்லி இருக்காங்க பாருங்க அற்புதமா! self effort not possible; only others’ effort
தான் சூட முடியாத அணி = “சூடா” மணி
பிறர் சூட்டும் அணி = சூட்டும் மணி vs “சூடா” மணி
பேரே அப்படித் தான் வருது, பாத்தீங்களா?
கம்மல், மூக்குத்தி, ஒட்டியாணம், கொலுசு, மோதிரம்… = எல்லாம் தானே போட்டுக்கலாம்
ஆரம்/ கோவை = கழுத்தை ஒட்டினாப் போலச் சிறுசா இருந்தாலும், u can reach out to the screw at the back, with some effort & put yourself
ஆனா, தானே போட்டுக் கொள்ள முடியாதவை
தாலி = அவன் தான் கட்டணும்
“சூடா” மணி = அவன் அம்மா முடிச்சி விடுவாங்க!
சீதையின் சூடாமணி = தசரதன்/கோசலை குடுத்த சீதனம்! – திருமணத்தின் போது!
Kannabiran Ravi Shankar (KRS) 9:32 pm on December 8, 2012 Permalink |
தன்னிடம் உள்ள சொற்ப நகைகளில், கம்மலைக் கழட்டிக் குடுத்து இருக்கலாம்;
ஆனா, கணவன் வீட்டில் போட்ட = சூடாமணி;
அதை ஆடையில் முடிச்சி வச்சிருக்கா; அதையே குடுக்குறா!
இராகவன் பால்/ அவன் மரபின் பால், தனக்குள்ள உறுதி
= அதைக் காட்டவே “சூடா”மணி குடுக்கும் சீதை!
சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்; மெய்ப்புகழ் கொண்டாள்
-ன்னு கம்பன் வரிகள், முன்ன பின்ன மாறி இருந்தா மன்னிக்கவும், ஏதோ ஞாகபத்தில் இருந்து எழுதறேன்
————-
சீதையாச்சும்… ஒரு முறை தான் தீக்குளிச்சா 😦
ஆனா, இந்தச் “சூடா”மணி ரெண்டு முறை தீக்குளிச்சுதாம் 😦
இராகவன் சுட்ட சொல்லால், அந்தப் பேதைக்குப் பலர் முன்னிலையில் = தீக்குளிப்பு
ஆனா “சூடா”மணி மட்டும் = இரு முறை, தீக்குளிப்பு!
1) அனுமன், அதை ஆடையில் முடிச்சி எடுத்துக்கிட்டு போனான்;
அப்போ வாலில் வைத்த தீ, பின்னர் அவன் ஊரில் வைத்த தீ
இவ்வளவு தீக்கும் நடுவில், அவன் தாவித் தாவிச் செல்ல, “சூடா”மணியோ தீயுள் முங்கி முங்கி எழுந்து சென்றது
2) இராகவன் வென்ற பின், அணிகலன்கள் குடுத்து அனுப்புறான்; மாட்டிக்கிட்டு வரச் சொல்லி…
அவளுக்கோ தான் பட்ட அதே கோலத்தில் வரத் தான் ஆசை; ஆனாலும் இராகவனுக்கு ஒத்திசைந்து வருகிறாள்;
அப்போ, அந்தச் “சூடா”மணியும், பிறர் உதவியால் சூட்டிக் கிட்டுத் தான் வரா – கண்ணவன்/ கணவன் வீட்டுச் சீதனம்!
அப்போ, அவளோடு சேர்ந்து, ரெண்டாம் முறையாவும் தீயுள் முங்கி எழுந்தது, அவள் “சூடா”மணி!
இதுவே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைக் காட்டிலும்,
சூடாமல் சூட்டிய ’சூடா”மணி மாண்பு!
Kannabiran Ravi Shankar (KRS) 10:03 pm on December 8, 2012 Permalink |
சூளாமணி -ன்னு ஐஞ்சிறுங் காப்பியமே இருக்கு!
சூடாமணி நிகண்டு -ன்னு தமிழ் இலக்கணம்!
ஐம்பெரும் – தமிழ்க் காப்பியங்களின் பெயர்களே, நகைகள் பேரில் தான் அமைஞ்சிருக்கும்;
1. சிலம்பு – அதிகாரம் (காற் சிலம்பு)
2. மணி – மேகலை (ஒட்டியாணம்)
3. சீவக – சிந்தாமணி (தலையணி)
4. வளை – யாபதி (வளையல்)
5. குண்டல – கேசி ( காதணி)
அதே போல், சூளா – மணி -ன்னு ஐஞ்சிறுங் காப்பியம்
= தலையில் சூடா மணி, பிறர் சூட்டும் மணி
amas அம்மா சொன்னது போல், you have to extrude your hair via a small hole in the சூடாமணி
even with a mirror, you cannot do it yourself – so tiny & minute:)
itz a girlie thingie, u gotto have good relationship with other girlz, for this decoration:))
————-
“சூடா”மணி = started to come in different shapes – fashion! Like Sun & Moon circles
@ இராக் கொடி = Moon Circle
@ பகற் கொடி = Sun Circle
தோழி கோதைக்கு (ஆண்டாள்), ஊரிலே… முத்துக்குறி உற்சவம், இராக்கொடி உற்சவம் -ன்னு நடத்துவாங்க!
அதுல பாத்தா, amas அம்மா சொன்னது புரிஞ்சீரும்; எப்படி இராக் கொடியைத் தலையில் வச்சிக் கட்டுறாங்க-ன்னு; Here are some pics:
1) முடியைச் சிலுப்பி, சிக்கெடுத்து, இழை எடுத்தல்
= http://www.pbase.com/svami/image/91766824
2) இராக் கொடி சூட்டுதல்
= http://www.flickr.com/photos/pramanam/5357554958/in/set-72157625703775315/
Kannabiran Ravi Shankar (KRS) 10:03 pm on December 8, 2012 Permalink |
3) கோதை in இராக் கொடி (சந்திரப் பிரபை) & பகற் கொடி (சூரியப் பிரபை)
= http://www.flickr.com/photos/pramanam/5357555994/in/set-72157625703775315
Both sides of the head
= http://www.flickr.com/photos/pramanam/5404508049/in/set-72157625821606119