எங்கே அவன் என்றே மனம்
சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில் ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்கிறார்.
காலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.
http://www.inbaminge.com/t/k/Kalangalil%20Aval%20Vasantham/Paadum%20Vande.eng.html
பாடும் வண்டே பார்த்ததுண்டா
மாலை அணிந்த என் மாப்பிள்ளை
ஏண்டி தோழி என்ன செய்தாய்
எங்கு மறைத்தாய்
கண்ணன் எங்கே எங்கே எங்கே
முதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்
வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
வண்ணச்சேலை வாங்கி கொடுத்தார்
கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
கோவில் வழியைப் பார்த்துக்கிடந்தேன்
ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
உண்மை சொல்வாயடி எந்தன்
எந்தன் கண்ணாளன்
வந்தார் இங்கே எங்கே எங்கே
அடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள் ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று பிரிவுக்காலம் சொல்கிறாள்.
ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
அவரின்றி கூவுது ஆயிரம் கோழி
கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
இன்று வந்தானடி
எந்தன் கண்ணாளன்
வந்தார் இங்கே எங்கே எங்கே
வண்டு, தோழி என்று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.
மோகனகிருஷ்ணன்
352/365
Uma Chelvan 10:26 am on November 20, 2013 Permalink |
எங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-
அவனை கண்டால் வரச் சொல்லடி
அன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி
தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
தனியே நிற்பேன் எனச் சொல்லடி
இருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.!! Just look at Manoramma’s expression for that particular lines. She is in total shock. :))
amas32 9:30 pm on November 20, 2013 Permalink |
இது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂
amas32
Uma Chelvan 12:15 am on November 21, 2013 Permalink |
நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ ?