குமரிப் பெண்ணும் குழந்தைப் பெண்ணும்
காற்றின் வகைகள் பற்றி நண்பர் @ragavanG எழுதிய பதிவில் ‘குழந்தைகள் கூட குமரியும் ஆட’ என்ற வரியைப் படித்தவுடன் இந்த குழந்தை / குமரி வார்த்தைகள் ஜோடியாக மற்ற பாடல்களிலும் வந்திருக்கிறதே என்று தோன்றியது. அப்புறம் நண்பர் @narraju எழுதிய அம்மானை பதிவில் கதாநாயகியை ஒரு குழந்தையாக பாவித்துக் காதலன் ‘பிள்ளைத் தமிழ்’ பாடுவது பற்றி படித்தவுடன் ஒரு சின்ன ஆராய்ச்சி.
குழந்தை , குமரி ஒன்றாக வருவது முதல் எழுத்து ஒன்றி வரும் மோனை நயத்துக்காக மட்டும்தானா? அல்லது பெண்ணின் வெவ்வேறு நிலைகள் சொல்ல எழுதியதா? அல்லது வேறு பொருள் சொன்னதுண்டா?
வைரமுத்து இதை வர்ணனை / காதல் / சிறுமி குமரியாகும் மாற்றம் என்ற வட்டத்தில் பல பாடல்களில் உபயோகிக்கிறார். சிவாஜி படத்தில் வரும் வாஜி வாஜி என் ஜீவன் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் ஹரிஹரன், மதுஸ்ரீ ) http://www.youtube.com/watch?v=M7Et_8BgKFU
அடடடா குமரியின் வளங்கள், குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
என்று ஒரு வரி. அலைபாயுதே படத்தில் காதல் சடுகுடு பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர்கள் SPB சரண், நவீன் ) http://www.youtube.com/watch?v=rmxs7b9Y5HE
ஓஹோ.. பழகும் போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கையறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே
என்று வரிகள். தாஜ்மஹால் படத்தில் சொட்ட சொட்ட நனையுது (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் சுஜாதா ) https://www.youtube.com/watch?v=VsWo2pVYSnQ
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
என்ற வரிகள் – இப்படி சிறு வட்டத்தில் சுழல்கிறார்.
கண்ணதாசன் பார்வை வேறு. கை கொடுத்த தெய்வம் படத்தில் வரும் ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன், பாடியவர் டி எம் சௌந்தரராஜன் ) http://www.youtube.com/watch?v=NG7YOfSz8-A
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
என்று ஒரு வெகுளிப்பெண் பற்றி சொல்வது போல அழகான வரிகள். அரங்கேற்றம் படத்தில் வரும் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்ற பாடலில் (இசை வி குமார் பாடியவர் பி சுசீலா) வரும் கண்ணதாசனின் வரிகள் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ள constraints என்ன என்று சொல்கிறது.
குழந்தையிலே சிரிச்சதுதான் இந்த சிரிப்பு
அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு
அக்னி சாட்சி என்ற படத்தில் வாலியின் வரிகளை MSV இசையில் SPB பாடும் கனாக் காணும் கண்கள் மெல்ல என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=rPuFA8wSEwU
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!
நாயகி பெரும் மனக்குழப்பத்தில் இருக்கும்போது நாயகன் அவளை அமைதிப்படுத்த பாடும் ஒரு தாலாட்டு. வாலிக்கு ஜே!
அதே இரண்டு வார்த்தைகள். ஆனால் வேறு வேறு கோணங்கள். பார்வைகள். Interesting!
மோகனகிருஷ்ணன்
165/365
amas32 11:19 am on May 15, 2013 Permalink |
What a beautiful collage you create by picking lines from various songs! குழந்தை வளர்ந்து குமரியாகிறாள். அதனால் குமரிக்குள் சிறு குழந்தை இன்னும் ஒளிந்துகொண்டு இருப்பது ஆச்சர்யம் இல்லை. அதுவே குமரிக்குள் அதிகக் குழந்தைத்தனம் இருந்தால் மன வளர்சிக் குன்றியவராகக் கருதிவிடுவோம். சரியான விகிதாச்சாரத்தில் இருந்தாலே ரசிக்க முடியும். குழந்தையாக இருக்கும்போதே குமரியாக நடந்துகொண்டாலும் பிஞ்சில பழுத்துவிட்டது என்ற அவப் பெயர் தான் மிஞ்சும்.
ஆனாலும் கவிஞர்களுக்கு எப்பவுமே poetic liberty உண்டு, இந்த மாதிரி எழுத 🙂
அருமையான பதிவு!
amas32
vaduvurkumar 11:28 am on May 15, 2013 Permalink |
நல்ல ஆராய்ச்சி.
ராஜூ 7:44 pm on May 15, 2013 Permalink |
உங்களுக்கு சும்மா டக்கு டக்குன்னு வந்து விழுகுதுங்க வரிகள்! கலக்கல்.
rajnirams 10:56 am on May 16, 2013 Permalink |
அருமை.ரிதம் படத்தில் நதியே நதியே பாடலின் வரிகளும் அருமையாக இருக்கும்.”சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி ,பெற்றால் தாயல்லோ”.நன்றி.
GiRa ஜிரா 11:02 pm on May 16, 2013 Permalink |
குமரியோ குமரனோ… ஒருவர் மடியில் ஒருவர் விழும் போது குழந்தைதான்.
நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி – கவிஞர் வாலி