உத்தரவின்றி உள்ளே வா
- படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
- பாடல்: முன்பே வா
- எழுதியவர்: வாலி
- இசை: ஏ. ஆர். ரஹ்மான்
- பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
- Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g
நீ நீ மழையில் ஆட,
நான் நான் நனைந்தே வாட,
என் நாளத்தில் உன் ரத்தம்,
நாடிக்குள் உன் சத்தம்!
பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.
’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.
அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!
விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:
உயிர் உருகிய அந்த நாள் சுகம்,
அதை நினைக்கையில்,
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)
***
நாளங்கள் ஊடே
உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)
***
ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்
புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)
***
மேளங்கள் முழங்குதுங்க, ரத்த
நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)
***
ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?
***
என். சொக்கன் …
18 11 2013
351/365
Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink |
நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை
மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!
amas32 8:37 pm on November 19, 2013 Permalink |
எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!
//என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!
ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂
amas32
rajinirams 11:28 am on November 20, 2013 Permalink |
நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.
நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink |
”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”
வைரமுத்து
படம்: க.கொ.க.கொ
பாடல்: ஸ்மை யாயி..