விருந்தினர் பதிவு : இளமை இதோ இதோ
இளமை இதோ இதோ..
ஒரு முறை தான் வரும் கதைசொல்லக்கூடும் உல்லாசம் எல்லாவும் காட்டும் எனப் பாட்டாக வந்த இளமை அப்பாவிற்கும் வரும்.. பிள்ளைக்கும் வரும் பேரனுக்கும் வரும்…
என்னாபா எய்தறான் இந்த ஆளு என நினைக்க வேண்டாம்..
அப்பா தனது இளமைக்காலத்தில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்..
சலசலவென நீரோடையின் சத்தத்தைப் போல அழகாய் வேகமாய்ப் போகும் இசை.. இடங்களோ அழகுகொஞ்சியிருக்கும் இலங்கை நகரம்.. ஆடிப் பாடும் இருவரோ யங் யங் ஹீரோ ஹீரோயின்.. வெகு வெகு இளமையானவர்கள்..இருவருக்கும் காதல்.. எனில் துள்ளலும் துடிப்பு உண்டு.. எனவே துள்ளல் இசை.. துள்ளல் இசைக்கு துடிப்பாய் எழுதவேண்டும்.. எழுதிவிட்டார்
..
புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம் அதை உள்ளங்கையால் மூடாதே
காதல் வந்தால் கட்டில் மேல் கண்ணீரா கூடாதே
கண்கள் பார்த்து ஐ லவ் யு சொல்லிப்பார் ஓடாதே
பாடல் தெரிந்திருக்குமே ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசைச் சொன்னவர் வைரமுத்து..பாடியவர்கள் எஸ்பிபி அனுபமா..ஆடியவர்கள் வினீத், நிருபமா(க்யூட் பொண்ணு என்ன ஆனார்..தெரியவில்லை)
பையன் அப்பாவை விடப் பழமை வாதி..ஓ எப்படி..
இளமைத்துடிப்பு இருக்கிறது..அதே சமயத்தில் அழகுதமிழ் வார்த்தைகளப் பயன் படுத்த வேண்டும் என்ற அக்கறை ஓடுகிறது.. அப்பா எழுதிய கவிதை வரி போல ரத்தம் புத்தம் புதுசு.
.
அது சரி ஈஈ என்ன பாட்டா.?
.
அந்தப் பெண். கொஞ்சம் நெடு நாள் ஊறியகுலோப் ஜாமூனைப் போல அழகானவள் இனிமையானவள்.. அந்த ஹீரோ இளைஞன்.. அவன் சிரிப்பில் க்ளோஸப் மின்னல்.. பளீர் ரின் வெண்மை..
..காதலிக்கவும் மாட்டேன் என்கிறான்.. ஆனால் அந்தப் பெண்ணின் மீது சின்னதாய் ஈர்ப்பு வருகிறது..எனில் பாடலும் வருகிறது
..
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்
ஹை.. பாட்டு நல்லாயிருக்கே எனக் கேட்டதோடு மறந்து விடுவோம்.. ஆனால் ஒரு வார்த்தை நிரடும்
சுண்டல் தெரியும்..அது என்ன கொண்டல்?
..
கொண்டல் பழந்தமிழ் வார்த்தையாம்.. அதன் அர்த்தம் மேகம்.
.எனில் யோசிக்காது மழையைப் பொழியும் மேகமாய் அவள் மீது பெய்யப் போகிறானாம் அன்பை..சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் எனப் பாடல் வரும்போது ஹீரோ எடுத்துச்செல்லும் டீ கிளாஸ்கள் சற்றே சரிந்து டீ விழுவது டைரக்டோரியல் டச்
..
அவளுக்கோ கண்களின் வழியாகத் தெரியும் ஏக்கத்தை வார்த்தைகளில் காட்டுகிறாள்..அன்பின் ஆலை ஆனாய்
..
ம்ம் மதன் கார்க்கி.. அருமை…. வைரமுத்து பெற்ற வயிற்றில் ப்ரலைன்ஸ் ஐஸ்க்ரீம் கட்டிக் கொள்ளலாம்.. இல்லை.. சாப்பிட்டுக் கொள்ளலாம்!
பாடல் பாடிய உன்னி மேனன், சித்ரா செளமியா அண்ட் இசை சரத்.நடித்திருப்பவர்கள் சித்தார்த் முழியும் முழியுமான நித்யா மேனன்..படம் 180 டிகிரி..
.இது அப்பா அளவுக்கு வேகப்பாடல் இல்லையானாலும் இனிமையாக இருக்கும்..ஏன்.. ராகம் அப்படி.. கரகரப் ப்ரியா.. அப்பா எழுதிய பாடலின் ராகம்.. ம்ம்ம் நீங்கள் சொல்லத்தானே போகிறீர்கள்
சின்னக் கண்ணன்
என்னைப் பற்றி முன்னுரையா? குட்டி பத்து பைசா ஸ்டாம்ப்பின்னால் எழுதிவிடலாம்.. பிறந்து வளர்ந்து நான்கு கழுதைகள் வயதாகிறது.. சின்னதாகத் தமிழ்மீது ஆசை.. எழுதி எழுதிப் பார்க்க, வருவேனா என கோபித்துக்கொண்டிருக்கிறது தமிழ்!
இருபத்தைந்து வருடங்களாக இருந்தது, இருப்பது அன்னிய தேசம்தான், தற்சமயம் ஜாகை மஸ்கட்!
Reply