உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. நேரம் இருக்கும்போது வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_11.html
Recent Updates Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ranjani135
-
mokrish
நதிபோல ஓடிக்கொண்டிரு
திரைப்படத்தில் பாடல்கள் அவசியமா? இசையும் கவிதையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையற்ற இடையூறா? சுஜாதா ‘டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தார்.
பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே சரியான கேள்வி. ஒரு திறமையான கலைஞன் பாடல்களை கதையில் அழகாக நெய்துவிட முடியும். மகாநதி என்று படத்தின் டைட்டில். கதையின் பாத்திரங்களுக்கு கிருஷ்ணா, காவிரி, யமுனா, பரணி என்று நதிகளின் பெயர். கதை திருநாகேஸ்வரத்தில் தொடங்கி சென்னை, கொல்கத்தா என்று அலைந்து சென்னையில் முடியும். இதில் பாடல்களை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும்?
வாலி ஸ்ரீரங்கத்துக்காரர். காவிரி நதியை ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்குகிறார். படத்தின் பெரும்பான்மையான பாடல்களில் கதையின் ஒட்டத்தோடு காவிரி பற்றிய reference. ராஜா ஒரு அற்புதமான இசை இழை தருகிறார். திரைக்கதையுடன் கைகோத்து வலம் வரும் பாடல்கள்.
முதலில் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் பாடல் கங்கையின் மேலான காவிரியின் பெருமை சொல்லும் பாடல் (பாடியவர்கள் சித்ரா & குழுவினர்)
http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடிநம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
அடுத்து விதிவசத்தால் சொந்த மண்ணை விட்டு விலகி சென்னை வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, பிரிந்து போகும் குழந்தையை ஒரு தாய் வழி அனுப்புவது போல காவிரி நதி நாயகனை வாழ்த்தும் வரிகள் (பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்)
http://www.youtube.com/watch?v=D2PyGX_K6IQ
அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி
காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்
ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்
தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி
சென்னையில் அவனுக்கு நிறைய சோதனைகள். செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம். ஆனால் அவன் தளரவில்லை என்ற வரிகளிலும் காவிரி ! (பாடியவர் கமல்ஹாசன்)
http://www.youtube.com/watch?v=VAzrswll0oQ
தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது
காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி
காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி
அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்
அன்னாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்
அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி
எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி
நதியில் விழுந்த இலை போல திக்கு திசை தெரியாமல் ஓடி பல சோகம் கண்டு ஒருவழியாக வெளிவரும் நிலையில் ஒரு அற்புதமான பாடல் (பாடியவர் கமல்ஹாசன்)
http://www.youtube.com/watch?v=2H6CaBpol80
எங்கேயோ திக்கு திசை எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்
காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி
இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்தி பூவே இத்துடன் சோகம் சென்றதடி
ஒவ்வொரு பாடலிலும் காவிரி பற்றி ஒரு குறிப்பு. முதல் பாடலில் வளம் தரும் மகாநதி. அடுத்த பாடலில் வாழ்த்தி வழியனுப்பும் தாய் போல என்கிறார். இன்னொரு பாடலில் காவிரி மடியில் வாழ்ந்தவர் வீழ்வதில்லை என்கிறார். காவிரி தீரம் விட்டு வந்து பட்ட சோகம் சொல்கிறார். ஆனால் எல்லா பாடல்களிலும் முடிவில் ஒரு நல்ல வாக்கு. ஒரு பாசிடிவ் கருத்து. கதை சொல்லலில் பாடலையும் இணைக்கும் நயம்.
நதியிடம் நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நதி இலக்கை மறப்பதேயில்லை. கழிவுப் பொருட்களைக் கலந்தாலும், எல்லா தடைகளையும் மீறி ஓடிக்கொண்டேயிருக்கும். In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance என்று சொல்வார்கள். வாழ்க்கையும் அப்படியேதான்.
அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன்
மோகனகிருஷ்ணன்
365/365
-
amas32
வாழ்த்துகள் மோகனகிருஷ்ணன், ராகவன், சொக்கன். #365 வேள்வியை பிராமாதமாக முடித்ததற்கு பாராட்டுகள் 🙂
மகாநதி படத்தில் இந்த நதி பற்றிய thread இருப்பது நீங்கள் சுட்டிக் காட்டும் வரை நான் கவனித்தது இல்லை. மிக்க நன்றி. படம் முழுதும் நதியையும் கதையோடு ஓடவிட்டதில் வாலியின் திறமை மிளிர்கிறது. தஞ்சை திருச்சி மாவட்ட மக்களுக்குக் காவேரியைப் பற்றி பேசும்போது பெருமை பிடிபடாது 🙂
ரிதம் படத்தில் நதியே நதியே காதல் நதியே பாடலும் சிறந்த கருத்தைச் சொல்லும் பாடல்.
உங்கள் மூவருக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடி அமைகிறேன் :-))
amas32
-
uma chelvan
excellent post !!!
தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது
செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது
In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance………………………Beautiful Wordings both in Tamil and English.
Godd Luck !!!!
-
krish
excellant
-
-
G.Ra ஜிரா
விண்ணெங்கும் காத்தாடிகள்
புண்ணாகவராளி இராகத்தில் ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா என்ற பாடலை ரெக்கார்ட் பிளேட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு உள்ளமுருக முருகனைப் பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.
ஆறுதலைக் கூட ஆறுதலைச்சாமி தான் தர வேண்டுமோ? அதென்ன அவ்வளவு எளிதாகக் கிடைக்காத ஒன்றா?
யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உழைப்போ அதிர்ஷ்டமோ பணத்தைக் கொடுத்து விடுகிறது. அந்தப் பணம் இருந்தால் உணவு உடை உறைவிடம் என்று பலவற்றை வாங்க முடிகிறது. பணத்தைப் பார்த்து காதலும் கூட வந்துவிடுகிறது. ஆனால் மனதுக்குத் தேவையான ஆறுதல்!!!!!!
ஆறுதல் எல்லோரிடமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ஆறுதலளிக்க எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பு வேண்டும்.
அப்படி ஆறுதல் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர் தான் மலைச்சாமித் தேவர். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. மச்சு வீடு. நிலம் நீச்சு. எட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து. பெரிய கவுரவம் தான். ஆனால் நிம்மதி மட்டும் தான் இல்லை.
”பதிவிரதை ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்” என்று ஔவையார் சொன்னது மலைச்சாமித் தேவருக்கு நன்றாகவே பொருந்தும். என்ன செய்வது? கவியரசர் சொன்னது போல இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று.
சோகத்துக்கு ஒரு இயல்புண்டு. யாரிடமாவது சொல்லிவிட்டால் அது குறைந்துவிடும். ஆனால் ஊரெல்லாம் வந்து நியாயம் கேட்கும் தலைக்கட்டு யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?
அதற்கு ஒரே வழி உள்ளத்து உணர்வுகளை பாட்டாக்கி காற்றோடு காற்றாய் கலந்து விடுவதான். அந்த வழியில்தான் மலைச்சாமித் தேவரும் போனார்.
பூங்காத்து திரும்புமா
ஏம் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய்மடி கெடைக்குமாஅவர் பாட்டுக்கும் ஒரு எதிர்ப்பாட்டு வருகிறது. அதுவும் தேடிக் கொண்டிருந்த ஆறுதலைத் தாங்கிக் கொண்டு.
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமாபாடியது ஆளோ அசரீரியோ… இப்படியான ஆறுதலைக் கேட்பதற்கு இரண்டு காதுகள் இருந்தால்… இல்லை இல்லை. ஒரு காது இருந்தாலே போதுமே. வேதனைப் பட்ட உள்ளம் உள்ளதையெல்லாம் கொட்டி அழுதிடுமே!
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கலவேதனை இல்லாத மனம் ஏது? வாதை இல்லாத உடல் ஏது? குறையே இல்லாத மனிதர் தான் யார்? அதைப் புரிய வைத்தால் அவர் மனம் தெளியும் என்று நம்பினாள் அவள்.
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லதனக்காகப் பாடும் அந்தக் குரல் யார் குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்துகிறது. அது பாட்டிலேயே கேள்வியாகவும் வருகிறது.
யாரது போறது?
ஆனால் அவள் கெட்டிக்காரி. அவளா முகத்தைக் காட்டுவாள்?குயில் பாடலாம். தன் முகம் காட்டுமா?
இப்படி வரிவரியாகச் சோகத்தை அவர் சொல்லவும் ஆறுதலை இவள் சொல்லவும் பாட்டு தொடர்கிறது.
எப்போதும் இல்லாத ஒரு மகிழ்ச்சி. என்றைக்குமே தோன்றியிருக்காத ஒரு நிம்மதி. அனுபவித்தேயிருக்காத ஒரு இன்பம். மலைச்சாமித் தேவருக்கு மட்டுமல்ல… அவளுக்கும் தான். சுகராகம் சோகம் என்றால் ஆறுதல் ஆனந்தம் தான்.
மறுபடியும் ஆசை உந்தக் கேட்டு விடுகிறார் தேவர். அந்தப் பெண்ணும் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவள் குரல் மட்டுமல்ல பெயரும் குயில்தான்.
இந்தச் சின்னப் பெண்ணா பெரிய சோகத்துக்கு மருந்து தடவிய குயில் என்று அவர் உள்ளம் வியக்கிறது. குரலில் என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கேட்கிறார்.
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டுச் சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததேஎங்கேயோ இருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு உள்ளங்களுக்குள் ஒரு இணைப்பு கொண்டு வருவதற்கு எத்தனையெத்தனையோ காட்சிகளும் நிகழ்ச்சிகளும் தேவை. அதிலும் சில தவறாகப் போய்விடுவதும் உண்டு.
அப்படியெல்லாம் ஆகாமல் சோகத்துக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்து மனக்காயங்களை ஆற்றி இரண்டு உள்ளங்களுக்கு இடையே பாலம் போட்ட இந்தப் பாடல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பாடல்கள் அழகிய அபத்தமாம். அப்படிச் சொல்வதுதான் அசிங்கமான அபத்தம். எத்தனையோ பக்கங்களில் பேசியிருக்க வேண்டிய வசனத்தை இருபது வரிகளில் கவிதையாக்கி சோக நெஞ்சங்களுக்கெல்லாம் ஆறுதல் தந்த பாடலுக்கு நன்றி பல. இந்தப் பாடல் இல்லாமல் முதல் மரியாதை என்ற படமே இல்லை.
நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழ் திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையெத்தனை பாடல்கள்! எத்தனையெத்தனை கவிஞர்கள் புலவர்கள் பாடலாசிரியர்கள்! எத்தனையெத்தனை இசையமைப்பாளர்கள்! அவர்கள் உருவாக்கித் தந்த பல பாடல்கள் படத்தோடு காணாமல் போகாமல் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.
தெலுங்கில் “எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனம்” என்று சொல்வார்கள். நமது தமிழில் சொன்னால், “எத்தனையோ பெரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.” நமக்காக ஆயிரமாயிரம் பாடல்களை உருவாக்கிய அந்தப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
பாடல் – பூங்காற்று திரும்புமா
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
இசை – இசைஞானி இளையராஜா
படம் – முதல் மரியாதை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-9kaLJZhJIEஅன்புடன்,
ஜிரா364/365
-
Uma Chelvan
மிகவும் நல்ல பதிவு. படிப்பு, பணம், புகழ், வசதி, வாய்ப்புகள் என்று எல்லாம் வந்த பின்பும் மனித மனம் வேண்டுவது அன்பும் ஆறுதலும் தான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும்…….பக்தியாய் இறைவனிடம், அன்பாய் மனைவியிடம், பாசமாய் மகள், மகனிடம், நேசமாய் உறவுகளிடம், உரிமையாய் நட்பிடம்……… அனைவர்க்கும் அன்பையும் ஆறுதலையும் அந்த ஆறுமுகன் அருளட்டும்.
அறுமுகனை வேண்டி ஆரதனை செய்தால் அருகினில் ஓடி வருவான் .அன்பு பெருகியே அருள் தருவான்.!!!
-
Uma Chelvan
மிகவும் நன்றி ” 4 வரி நோட்” குழுவினர்க்கு. ஓர் ” சங்கீத மும்மூர்த்திகள்”. போல நிறைய பாடல்களை பற்றிய அருமையான கருத்துக்கள். நிறைய புது விஷயங்கள் கற்று / தெரிந்து கொண்டேன். “யாம் அறிந்த மொழிகளிலே..தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதி!!. கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல், பாரதியை போல்…….. ராஜாவை போல் என்னுமிடத்தில் நிறுத்த விழைகிறேன்/ விரும்புகிறேன்.
-
rajinirams
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை-கவியரசரின் நெஞ்சை வருடும் வரிகள் போலவே கவிஞர் வைரமுத்துவின் முதல் மரியாதை வரிகள்- ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா,ஏங்காதே அத உலகம் தாங்காதே-அடுக்குமா சூரியன் கருக்குமா. அருமையான பாடலின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு.
-
Uma Chelvan
காதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும் ( December Music Season)
ராகத்தைச் சொல்லி விட்டுப் பாடுவது !!
இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால், பாடி முடித்ததும், ஒரு வரி அதே ராகத்தில் பிரபலமாகி இருக்கு திரைப்பட இசைப் பாடலை பாடிக் கோடி காட்டி விட்டுத் தொடரலாம். கரகோஷம் அள்ளும்.
வெகுஜன இசையையும், சம்பிரதாய் இசையையும் இணைத்துப் பாலம் போட்டுக் கொண்டே இருக்கும் இளையராஜா போன்ற இசை மேதைகளுக்கு சபா சங்கீதம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும்.
EraMurukan Ramasami
-
amas32
பூங்காத்து திரும்புமா அற்புதமான ஒரு பாடல். கேட்டு முடித்த பிறகும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.
//அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டுச் சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே//அருமையான வரிகள்.
amas32
-
Sudharsan
Nalla Pathivu. 4varinote arumayana muyarchi.
Siru Thirutham:
“பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட” .
-
-
என். சொக்கன்
விருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்
முன்பெல்லாம் நம் தமிழ் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு நாயகர்கள் அறிவுரைக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் நிறைய இடம் பெறும். அந்தப் பாடல்களில் உள்ள நற்கருத்துகள் பல பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணிபோல பதிந்து நல்வாழ்விற்கு வழிவகுக்கும் ஆற்றல் கொண்டவை. அது போன்று பல பாடல்கள் வந்திருந்தாலும் என்றும் மனதில் நிற்கும் சில பாடல் வரிகள்:“பாலுட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்-அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்துணையாக கொண்டு நீ நடைபோடு இன்று-உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று”கிளி போல பேசு இளங்குயில் போல பாடு-மலர் போல சிரித்து நீ குறள் போல வாழுமனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்-மெய்யான அன்பே தெய்வீகமாகும்”: இது காவியக்கவிஞர் வாலியின் எளிமையான சக்தி மிகுந்த வரிகள் கொண்ட “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”பாடல்.அடுத்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளை பாருங்கள்:“அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை-தருமம் செய்யுங்கள்அன்பே தெய்வம் என்றார் பெரியோர் -அன்புடன் வாழுங்கள்யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே”!எப்படிப்பட்ட வரிகள் பாருங்கள், “தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள்”பாடல்.
அடுத்து கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள்-குழந்தைகளுக்கு யானை,குரங்கு”கதையை கூறி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்-திணை விதைத்தவன் திணை அறுப்பான்,நன்மை ஒன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது-அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது-தீமை செய்வதை விட்டு விட்டு நன்மை செய்வதை தொடருங்கள்”என்று எளிமையாக அறிவுறுத்தும் “ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்”..புதிய இயக்குனர்களும் தங்கள் படங்களில் இது போன்ற நல்ல கருத்துக்களை தங்கள் படங்களில் புகுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியாக அமையும். நன்றிபதிவில் இடம் பெற்ற பாடல்கள்:பாடல்: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளேபடம் ” நம் நாடுஎழுதியவர்: கவிஞர் வாலிஇசை : கே.வி. மகாதேவன்பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்சுட்டி : http://youtu.be/Th9bUtTIRGYபாடல்: தங்கங்களே நாளை தலைவர்களேபடம் : என்னைப்போல் ஒருவன்எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்சுட்டி: http://youtu.be/6FQEFdXE3Ioபாடல்: ராஜா சின்ன ரோஜாவோடுபடம்: ராஜா சின்ன ரோஜாஎழுதியவர்: கவிஞர் வைரமுத்துஇசை: சந்திரபோஸ்பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்சுட்டி: http://youtu.be/w9O4sdhxwosநா. ரஜினி ராமச்சந்திரன்
பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டரில் என்னைப் பின்தொடர: @rajinirams
-
என். சொக்கன்
விருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்
சமீபத்தில் ஓர் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசனின் வசனம் என் கவனத்தை ஈர்த்தது.
“ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி”
கவியரசு கண்ணதாசனின் ஓர் மிகச் சிறப்பான அம்சம் எல்லா மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கு – இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதில்லை. மதத்தின் பரந்த அறிவுமுதிர்ச்சி மற்றைய மத நூல்களையும் படிப்பதனால் ஏற்படுகிற தெளிவு. அவருடைய கொள்கையில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு சிற்றாறு.. சிற்றாறுகள் சேர்ந்து உருகவாக்குவது ஒரு மகா நதி.
நாஸ்திகனாக இருந்து கண்ணனின் தாசனாக மாறிய முத்தையா தனது பாடல்களில் காட்சிக்கு தகுந்தவாறு மற்றைய மத கோட்பாடுகளையும் தாரளமாக அள்ளித் தெளிப்பது வழக்கம். இந்த வகையில் மேலே குறிப்பிட்ட வசனம் கிறிஸ்தவ விவிலிய நூலில் (Holy Bible) இருந்து எடுக்கப்பட்டது.
இயேசு நாதருக்கும் ஓர் பெரிய பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவம், மேற்கோளின் சுருக்கமான பின்னணி: (லூக்கா 18:18-25)
பணக்காரன்: இயேசு நாதரே! நான் நித்திய வாழ்வை (Eternal life) பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்”
இயேசு நாதர்: நீ பத்துக் கட்டளைகளையும் கடைப் பிடிக்கிறாயா?
பணக்காரன்: ஓ! நான் சிறுவயது முதல் இந்த கட்டளைகளை கடைப்பிடிக்கிறேன்
இயேசு நாதர்: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு. உனக்கு உள்ள எல்லா ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்கு கொடு அப்போது உனக்கு பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாகும். அதற்கு பின் என்னைப் பின் பற்றி வா!
இதைக்கேட்ட அந்த செல்வந்தன் மிகவும் துக்கமடைந்ததைப் பார்த்த இயேசு “ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.
இந்த சிறு சம்பாஷனை புதிய ஏற்பாட்டில் உள்ள முதல் 3 சுவிசேடகங்களும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் இதை camel and the eye of the needle என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். நடக்கமுடியாத சம்பவத்தை விவரிப்பதற்கு இந்த வசனம் ஓர் எடுத்துக்காட்டு. கவியரசு கண்ணதாசன் இதை பண ஆசையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
இப்போது இந்த திரைப் பாடலை கேட்டுப் பாருங்கள். அர்த்தம் புரியும்.
திரைப்படம்: பணத்தோட்டம்(1963)
பாடல்: குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்( மனத்தோடம் போதுமென்று)
இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்
பாடலின் சுட்டி: http://www.youtube.com/watch?v=M1YnOtuff1c
பிற்குறிப்பு: விவிலிய நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு (New Testament) கிரேக்க மூல மொழியில் இருந்து தமிழுக்கு முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் இதன் மூன்றாவது புத்தகத்தை (லூக்கா சுவிசேடகம் – Gospel of Luke) தன்னுடைய பாணியில் யேசு காவியம் எனும் தலைப்பில் படைத்தது குறிபிடத்தக்கது.
சபா- தம்பி
சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கி, தொடர்ந்து எழுதிவருகிறார்.
Twitter: @SabaThambi-
kamala chandramani
மனிதனுக்கு காசு மீதுள்ள ஆசையைக் கண்ணதாசன் எத்தனை அழகாகச் சொல்லியுள்ளார்! விவிலிய நூலில் சொல்லியுள்ளவற்றை விளக்கியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. அனைவருக்கும் தெரியாத, இயேசுவுக்கும், பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவத்தை எழுதியதற்கு நன்றி.
-
amas32
ஒரே நாலு வரி நோட்டில் ஒவ்வொரு பதிவாளரும் திரைப்பாடல்களின் நாலு வரிகளைக் கையாளும் விதம் அத்தனை வித்தியாசமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஆனால் சொல்ல வரும் கருத்துக்கள் அத்தனையும் அருமை.
நீங்கள் பாடல் வரிகளுக்கும் விவிலயக் கருத்துக்கும் உள்ள கனெக்ஷன் பற்றி சொல்லியிருப்பது அருமை 🙂
amas32
-
Saba-Thambi
நன்றி kamala chandramani, amas32
உங்கள் பின்னோட்டங்கள் எப்போதுமே உற்சாகமுள்ளவை.
-
-
என். சொக்கன்
இசைத் தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை
- படம்: காதல் மன்னன்
- பாடல்: மெட்டுத் தேடி
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்
- Link: http://www.youtube.com/watch?v=N0XuO3alLV8
மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டுஅந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டுஅதைக் கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா?இல்லை விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா?மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?
இசைக்கு வரிகள் மேன்மை தருகின்றனவா? அல்லது வரிகளுக்கு இசையால் பெருமையா?
தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் : கவிஞர் இணையை முன்வைத்துக் கேட்டால், கண்ணதாசனுக்கு விஸ்வநாதன் ஆதாரமா? அல்லது விஸ்வநாதனுக்குக் கண்ணதாசனா?
இக்கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கவேண்டுமா? பட்டிமன்றம் பாணியில் “இரண்டும்” என்று சொல்லமுடியாதா?
தமிழில் இசை கொண்டாடப்பட்ட அளவு கவிதை கொண்டாடப்படவில்லை என்பது என் ஆதங்கம். குறிப்பாக திரைப்பாடல் வரிகள்!
மானே, தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?
மற்ற கலைகளைப்போலவே இங்கும் பொழுதுபோக்கு உண்டு, உன்னதம் உண்டு, மொக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் ரசிக்கும் மனம் இருக்கவேண்டுவதில்லை, வடிகட்டி வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம், எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!
தமிழின் அத்துணை திரைப் பாடலாசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன் 🙂
***
என். சொக்கன் …
30 11 2013
363/365
-
rajinirams
அருமை.”மானே,தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?” -உண்மையான வரிகள்.
தமிழ் திரையுலகில் மெட்டுக்கு பாட்டும் சரி,பாட்டுக்கு மெட்டும் சரி பாடல் வரிகளை விழுங்காத இசைக்கு எப்போதும் வெற்றி தான்.இதை தான் வாலி ஓரிரு முறை மேடையில் “தங்க தட்டில் வைத்த சிங்க பால்”என்று சொல்லியிருக்கிறார்.மெட்டுக்கு பாட்டு இல்ல துட்டுக்கு தான் பாட்டு என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.ஆனால் இது வரை என்னை ஆச்சர்யப்படுத்தியது கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக பாரதியாரின் பாடல்களுக்கு (“மெட்டுக்கு எழுதியது போலவே தோன்ற வைக்கும் “) இசையமைத்த திரு ஜி.ராமநாதன் அவர்கள் தான்.உண்மையிலேயே இசை மேதை. மேலும் பல இசையமைப்பாளர்களும் பாடல் வரிகள் வரும்போது அடக்கி வாசித்து பாடலுக்கும் கவிஞருக்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்கள்.
பல நல்ல நல்ல பாடல்களை “நாலு வரி நோட்டில்” கொண்டு வந்து பரவசப்படுத்திய தங்களுக்கும் திரு ஜி.ராகவன்,திரு மோகனகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட amas32, Uma Chelvan இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.-
Uma Chelvan
Thank you very ,much Mr. Rajinirams.!
-
-
amas32
//ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!//
This is the crux of 4varinote!
தினம் ஒரு பா #365 முடிந்தபோது ஒரு வெற்றிடம் தோன்றியது. நீங்கள் #4varinote ஆரம்பித்தப் பொழுதும் முதலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு வரவில்லை. ஆனால் நீங்கள் செய்த இந்தப் பணி மகத்தானது. இப்பொழுது இருக்கும் கவிஞர்களை ரசிக்க சொல்லி கொடுத்தீர்கள். சங்ககாலப் பாடல்கள் ஒரு வகை என்றால் இன்றைய திரைப்பாடல்கள் இன்னொரு வகை.
மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள் 🙂
amas32
-
என். சொக்கன்
விருந்தினர் பதிவு: நான் கண்ணாடிப் பொருளல்லவா!
பாடல் : கண்ணாமூச்சி ஏனடா
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை: எ.ஆர்.ரஹ்மான்
பாடகர் : சித்ரா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காதோ ?
உன் இதழ் கொண்டு வாய்
மூட வா என் கண்ணா…உன் இமைக் கொண்டு விழி
மூட வா என் கண்ணா…உன் உடல் தான்
என் உடையல்லவா….!காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.
இது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனைக் ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.
“எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.
நெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா? வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ? கடைசி வரை காதல் நிலைக்குமா? திருமணம் கைகூடுமா? நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.
இதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது.
//உன் உடல் தான்என் உடையல்லவா….!//நானே உன் உடையாக வேண்டும் -என்று சங்கத் தமிழ் வரிகள் நேரடியாக இல்லை!ஆனால், நள வெண்பாவில் ஒன்று உள்ளது!—ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று—-அதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.
மிக அருமையான இசை. சித்ரா தன் தேன் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடியிருகிறார். அதற்கேற்பத் திரைப்படத்தில் ஐச்வர்யா ராயின் நடனமும், முக்கியமாக அஜித்தும் தபுவும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாணியில் காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் பாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது.youtube link for the song : http://www.youtube.com/watch?v=5ftMtHBgKTcநள வெண்பா உதவி KRSசுஷிமா சேகர்
பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂
சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/
-
rajinirams
அருமையான பதிவு.”வைர”வரிகளுக்கு பட்டை தீட்டியது போன்ற அருமையான விளக்கம்,உடல் தான் உடையல்லவா என்ற அற்புதமான வரிகளை நளவெண்பா வரிகளுடன் எடுத்துக்காட்டி நல்ல பதிவை தந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். “உன் இமை கொண்டு விழி மூடவா” வரிகள் வாலியின் வரிகளை நினைவு படுத்தும்- இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ-இருக்கின்ற சுகம் வாங்க தடை போடவோ,மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ….
-
amas32
மிக்க நன்றி. You are a connoisseur of 4varinote. So any appreciation from you is a big honour, thank you 🙂
amas32
-
-
B.MURUGAN
அருமை, யாராவது சிலாகித்து சொல்லும்போதுதான் அந்த பாடலின, பாடல் வரிகளின் மகத்துவம் புரிகிறது
-
amas32
நன்றி 🙂
amas32
-
-
umakrishh
ஹா..பெண்ணின் மனதை உணர்ந்து எழுதிய,பாடியவங்களுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக உணர்ந்து எழுதி இருக்கீங்க 🙂
//காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.//
முற்றிலும் உண்மை :))
இப்படத்தில் எங்கே எனது கவிதையும் நல்லதொரு உருக்கமான பாடல்-
amas32
உண்மை தான் உமா, நன்றி 🙂
amas32
-
-
kamala chandramani
அருமையான பதிவு. வாழ்த்துகள்.
-
amas32
Thank you ma 🙂
amas32
-
-
pvramaswamy
Excellent choice of song. The lyrics, tune, singing style, and, all very well picturised. Aishwaya Rai, apart from her being the “Miss World”, was a model too. That is very visible in graceful movements in this song (and the songs in ‘iruvar’). You have a superb taste. I wanted to write about this song, but avoided, as I could be accused of being carried away… Yeah, I went to you tube once again! 🙂
Now about your writing. Good style, good flow. Direct. As usual. You seem to have a thin layer of suspicion about the ‘ரொம்பவே பாவம்’ men. Luckily you have not been elected as the Chairma… sorry Chairperson of Indian Women’s Fedration! 😉
-
amas32
Thank you PVR 🙂 So happy to see your comment 🙂 This song is got a wholesomeness like the Thillaana Mohanambal’s மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன, ஆனால் இக்காலத்திற்குடையது. நன்றி!
amas32
-
to_pvr
Yes.
-
-
-
Uma Chelvan
Excellent write up !!!
உங்க postம் commentsம் எப்பொழுதுமே மிகவும் நன்றாக இருக்கும். படிக்கும் காலத்தில், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் நல்ல மாணவியாக இருந்து இருபீங்கனு நினைக்கிறேன். Though I don’t have an account, I regularly follow you in Twitter, மிகவும் மென்மையான போக்கு, அனைவரயும் மனம் திறந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் ……..God Bless you and My best wishes for your Kids especially for your Daughter for a bright and Beautiful Future…
“A Happy person is not a person in a certain set of circumstances, but rather a person with a certain set of Attitudes “……….Hugh Downs
-
amas32
Thank You Uma Chelvan. I always wondered who you were as you are not on twitter. Happy to know you through this blog site. Your comments are always very distinctive and your song links a welcome and picturesque interlude 🙂 Thank you so much for your kind words. I wish you the very best in everything. I have a great admiration for doctors and their yeomen service.
amas32
-
Uma Chelvan
Thank you very much amas 32. With my busy schedule (if you look at the time, I post my comments are mostly around 2:00 AM) I cannot cope with the speed of twitter, might be easier after a while ??:). I am on Facebook, not active now a days though. Finally I found a “Niche” here. Thank you very much for your appreciation on my comments. Couple of times, I was baffled by twitter people ‘s comments. I know how to easily ignore/avoid people, some times unwanted/ unnecessary comments will make you to look inside. It is Very nice know you too.!!!!!!:) . .
-
-
-
Saba-Thambi
அருமையான பதிவு!
-
amas32
நன்றி 🙂
amas32
-
-
என். சொக்கன்
விருந்தினர் பதிவு: யானைக் குட்டிகள்
பாரதிக்குப் பின் வந்தவர்களில், (இதுவரை) கண்ணதாசனே நான் விரும்பும் மகா கவிஞன். அப்படியிருக்கையில், நான் இந்தக் குறிப்பைப் படிக்க நேர்ந்தது.
பாரதியைப்பற்றிக் கண்ணதாசன்:
‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே! அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’
(from அர்த்தமுள்ள அநுபவங்கள் : இராம. கண்ணப்பன் : நர்மதா பதிப்பகம் வெளியீடு)
இதைப் படித்ததும், பாரதி பற்றி என் ஒரு மனம் கர்வப்பட்டாலும், இன்னொரு மனம் கண்ணதாசனுக்காக மிக நெகிழ்ந்தது.
காலத்தில் அழியாத
காவியம் தரவந்த
மாபெரும் கவி மன்னனே – உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்… *a
என்று, அவன் எழுதிய வரிகளாலேயே வருடிகொடுத்தும், தட்டிக்கொடுத்தும் தேற்ற விழைந்தது.
சினிமா நல்லதாகவோ அல்லாததாகவோ, எப்படியோ இருந்து போகட்டும். ஆனால் ஒரு சிறந்த கவிஞன்,
நிரந்தரமானவன், அழிவதில்லை – எந்த
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை *b
என்ற மிக உன்னதமான இடத்திலேயே கண்ணதாசன் இருந்துவருவதைச் சுட்டிக்காட்டத் தோன்றியது.
கொடிதிலும் கொடிது, இளமையில் வறுமை என்று ஔவையார் சொல்லுவதை எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் சரியாகவும் அழகாகவும் காட்டும் கண்ணதாசனின் பாடல் இது:
செல்வர்கள் இல்லத்தில்
சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
இதில், ‘பொன்வண்ணம்’ என்பதற்கு, தங்கநிறத்தில் என்று பொருள் கொள்ளக்கூடாது. அது செல்வந்தர் இருப்பிடம். மாளிகை. எனவே, அவர்கள் வீட்டுக் குழந்தை, ‘பொன்னாலான அழகிய’ கிண்ணத்தில் பால் குடிக்கிறது. சரி, அங்கே ஏழை வீட்டில் என்ன நடக்கிறது?
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
தரித்திரம் தாண்டவமாடுகிறது. காசே கிடையாது. வீட்டில் ஒரு பிடி அரிசிகூட இல்லை. உப்பு வாங்கவும் துட்டு கிடையாது. துயரத்தில் பொங்கிய அழுகையால், கலயத்தில் விழுந்த கண்ணீரில் இருந்த உப்பு மட்டுமே, இனாமாகக் கிடைத்த தண்ணீரில் கலந்ததாம். ஒரு சின்ன வரியில் – கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி – மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டிய சாகசம் கண்ணதாசனுக்கு மட்டுமே சொந்தம்!
கண்ணதாசன் பாடல் இன்னும் தொடர்கிறது..
மாணிக்க தேர் போல
மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாடும்
கண்ணாடி வளையல்களும் காகித பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும் என்று எடுத்துக்கொண்ட காட்சியை நிலை நிறுத்துகிறது!!
இந்த இரண்டு வரிகளுக்கும் முத்தாய்ப்பாக, இன்னும் இரண்டு வரிகள்.
கண்ணுறங்கு, கண்ணுறங்கு – பொன்னுலகம்
கண்ணில் காணும்வரை கண்ணுறங்கு, கண்ணுறங்கு
இதுவா பன்றி குட்டிபோல இருக்கு… மனசு ஆறமாட்டேங்குது!
மிகப்பரவலான தலைப்புகள் என்றாலும் அழகாகவும் ஆழமாகவும் –நுனிப்புல் மேயாமல் என்று பொருள் கொள்க- எழுத, வெகுச்சிலரால் மட்டுமே முடியும். அதிலும் கவிதை என்று வந்தால் அத்தகையவர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்துவிடும். அதனால் தான், என்னளவில், பாரதிக்குப்பின் (இன்றுவரை) கண்ணதாசன் மட்டுமே என்று சொல்கிறேன்.
பாரதியார் 39 வயது மட்டுமே வாழ்ந்தார் – அதுவும், தான் கனவுகண்ட சுதந்திர இந்தியாவைக் காணாமல் 1921-இலேயே மறைந்தார். ஆனால், தன் ஐம்பத்திநாலு வயதில், 1981-இல் மறைந்த கண்ணதாசன், சுதந்திர இந்தியாவின் மாற்றங்களை மட்டுமல்லாது, உலகளாவிய விஞ்ஞா ன வளர்ச்சியையும், ஏனைய தாக்கங்களையும் கண்டவர்.
ஆகவே, “பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே! அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது” என்று கண்ணதாசன் சொல்லுவதன் உள்ளர்த்தம் வேறாயிருக்க வேண்டும். முகத்துக்கு நேரேவரும் மிகைப்புகழ்ச்சியால் நெளிபவர்கள், அதைக் கடப்பதற்காக, தனக்கிணையான அல்லது தன்னிலும் மேலான ஒரு மேதையின் பெயரை உபயோகிப்பது என்பது, இது முதல் தடவையல்ல. எனவே இதை நாம் இப்படியே விட்டுவிடலாம். 🙂
சினிமாப் பாடல்களில் தமிழின் சிறப்பைப்பற்றி சொல்லுவதும், அதைப் பற்றிச்செல்லுவதும் அடிக்கடி நடப்பது தான். அதில் எல்லார் மனதையும் சொக்கவைப்பவர் கண்ணதாசன்.
சந்தம் நிறைந்த தமிழ் -சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ் -வெல்லும், வெல்லும்…
இந்த தேசம் முற்றும் ஆண்ட கதை -சொல்லும், சொல்லும்…
இந்த வரிகளைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும், எனக்கு திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியில், ‘பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே’ நினைவுக்கு வந்துவிடும். யார் அந்த ஒய்யாரி, அவள் பந்தாடினதில் என்ன விசேஷம் என்று பார்க்க, இங்கேசெல்லவும்.
கண்ணதாசன் பாடலில்,
செவ்வரியோடிய கண்களிரண்டினில் சேலோடு வேலாட – இரு
கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட…
என்ற வரிகள் ரசிக்கப் பட்டாலும், அதிகம் பேசப்பட்டது கீழேயுள்ள வரிகள் தாம்.
தோட்டத்திலே தென்னையிரண்டு முற்றித்திரண்டு பக்கம் உருண்டு,
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து – அதைத்
தொடவோடிய விழியோடொரு விழி மோதிய கணமே – எனைத்
ஆனால், இவனுக்கும் முன்னால் எழுதிய பாரதி ஏற்கனவே இதையெல்லாம் எழுதிவிட்டான். இதோ, எந்தநேரமும் நின் மையலேறுதடீ – குறவள்ளி சிறுகள்ளி.. என்ற பாடலைக் கேளுங்கள். இந்த பாரதியார் பாடலுக்கு எல்.வைத்யநாதன் இசையமைத்துள்ளார். முழுப்பாடலும் கேட்டால் பிரமிப்பாயிருக்கும்.
தமிழ் என்றும் புதியது, எப்பொழுதும் திகட்டாதது. எனவே, கொஞ்சம் ஜாலியாக காய் வகைகளையும் கண்ணதாசனின் எழுத்தில் காணலாம்:
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை எனைக் காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
தமிழில் நன்றாக எழுதிப் படைப்பதனால், அவன் பேர் இறைவன். இணப்பிலிருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்கள். 🙂
=========
நாலு வரிக்காக எடுத்தாண்ட பாடல்கள்:
- காலத்தில் அழியாத காவியம் தரவந்த: http://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU
- ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு: http://www.youtube.com/watch?v=eCC6tV8sgSM
- பூஞ்சிட்டுக் கன்னங்கள்: http://www.youtube.com/watch?v=zsBG59Y0k04
- சங்கம் வளர்த்த தமிழ் http://www.youtube.com/watch?v=9fPHG8IE-vU
- இந்திரையோ, இவள் சுந்தரியோ http://www.youtube.com/watch?v=u515oyKoO7I
- எந்த நேரமும் http://www.raaga.com/player4/?id=231999&mode=100&rand=0.6847409228794277
- அத்திக்காய் காய் காய் http://www.youtube.com/watch?v=muWBARd3oAk பாட்டில்வரும் வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் அதிகமான அர்த்தமிருப்பதால், இதில் இருக்கும் சப்-டைட்டில், பாடலை முழுமையாக ரசிக்க, உதவும்.
பி. வி. ராமஸ்வாமி
ரீடெய்ல் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவஸ்தர் பி. வி. ராமஸ்வாமி, ’ஜார்ஜ் ஆர்வெல்’லின் புகழ் பெற்ற நாவலான ‘விலங்குப் பண்ணை’யை அருமையான நடையில் தமிழாக்கம் செய்திருக்கிறார், தமிழ் இணையத்தில் நல்ல படைப்புகள் எங்கு தென்பட்டாலும் தேடிச் சென்று பாராட்டுகிற நல்மனத்துக்காரர்.
-
amas32
ஏழ்மை என்னை மிகவும் நெகிழ்த்தும். துலாபாரம் படத்தில் பூஞ்சிட்டு கன்னங்கள் பாடலை எங்கு கேட்டாலும் தானாகக் கண்ணில் நீர் வழியும். கண்ணதாசனின் வரிகளின் வலிமை அவ்வளவு. கண்ணதாசனின் திரைப்பாடல்கள் சொல்லாத கருத்துக்களே இல்லை. அதுவும் அவர் இருந்த காலத்தில் சினிமாவின் இரு ஜாம்பவான்கள் கோலோச்சிய நேரம். சிவாஜியும் எம்ஜியாரும் இவரின் பாடல் வரிகளுக்கு வாயசைத்தேப் பெருமை அடைந்தனர்.
பல நல்ல பாடல்களை தேர்வு செய்து அசை போட்டிருக்கிறீர்கள். என் போன்றோருக்கு நல்லதொரு பாடம். மிக்க நன்றி 🙂
amas32
-
pvramaswamy
Thank you my friend. An acceptable level of appreciating words are always welcome. Thank you. But your generosity extends too much in your last line /என் போன்றோருக்கு …/
-
-
Niranjan Bharathi
நல்ல பதிவு.
பாரதியார் 1927 ஆம் ஆண்டில் இறக்கவில்லை. அவர் இறந்த ஆண்டு 1921.
சுதந்திர இந்தியாவைக் காணாவிடினும் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” என்று பின்னர் வரவிருக்கும் சுதந்திரத்தை முன்னரே கண்டுணர்ந்து பாடிய தீர்க்கதரிசி.
-
pvramaswamy
நன்றி நிரஞ்சன் பாரதி. அவர் மறைந்தது 1921-ல் தான். நான் தப்பாக எழுதிவிட்டேன். என் பிழை, மன்னிக்க. அவர் தீர்க்கதரசியே தான். #பாரதிரப் பாடிய பாரதி!
-
என். சொக்கன்
Corrected
-
pvramaswamy
Thank you.
-
-
-
Badri
’பூஞ்சிட்டு கன்னங்கள்’ பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். அந்த மெட்டையும், சுசீலாவின் குரலையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் அந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும், அழகையும் இன்றுதான் உணர்ந்தேன். நன்றி PVR.
-
pvramaswamy
Thanks a lot Badri. I am happy you enjoyed it again. I hope you liked the other songs tagged also. 🙂
-
-
Saba-Thambi
அருமையான பதிவு! இறந்தும் இறவா கண்ணதாசன் என்றும் வாழ்க!!
-
pvramaswamy
கண்ணதாசன், தமிழின் செல்லப்பிள்ளை. அவர் பேசுவதும் அற்புதமாயிருக்கும். இலக்கியத்தில் காதல் என்று ஒரு யூட்யூபில் தேடினால் கிடைக்கும். இதோ, அவற்றிலிருந்து ஒன்று: http://www.youtube.com/watch?v=s0REHod0O90
வசந்த ஒய்யாரி மேலும் அழகு பெறுகிறாள்.
-
Saba-Thambi
அபாரம்!!! இணையத்திற்கு மிக்க நன்றி.
ரிதமெடிக் சென்ஸை மிகவும் இலகுவாக விளக்குகிறார். A musician and a Physicist would struggle to put the concept across but KD has used simple day to day example and that is an art itself.
-
-
mokrish
இல்லாததுபோல் இருக்குது
கண்ணதாசன் முன்னாள் நாத்திகர்தானே என்று நண்பர் @ncokkan ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். பழ. கருப்பையா ஒரு திறனாய்வு நூலில்.
“கண்ணதாசன் அறியாப் பருவத்தில் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தார். இளமையின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பாளராக மாறிவிடுகிறார். அந்தக் கால கட்டம் முழுவதிலும் அவர் எழுதிய பாடல்களில் கடவுள் ஏற்பு காணப்படவில்லையே தவிர கடவுள் எதிர்ப்பும் காணப்படாதது ஒரு வியப்பே”
என்று தொடங்கி ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் ஒரு இயக்கத்தில் சேர்ந்து அதற்குத் தன்னுடைய உயிரினும் இனிய கொள்கையை முதற்பலியாகக் கொடுத்துவிட்டு வெகுகாலமாக இருட்டறையில் புழுங்கிக் கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்.
இயக்கத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் தீவிர கடவுள் நம்பிக்கை! திரைப்பாடல்களில் அதை அழகாக வெளிப்படுத்தினார். அவ்வப்போது உரிமையுடன் நிந்தாஸ்துதியும் பாடினார்
கண்ணதாசன் சண்முகப்பிரியா என்ற படத்தில் எழுதிய ஒரு பாடல் (இசை சூலமங்கலம் ராஜலட்சுமி & ஜெயலட்சுமி, பாடியவர் டி எம் எஸ்)
இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே
இறைவன் இல்லை என்று சொன்னான் ஒரு மனிதன் இங்கே
என்று தொடங்கி
இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்
நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு மட்டும்தானா? நாத்திகம் என்பது நம்பிக்கையற்று இருப்பதா? யோசித்தால் ஆத்திகர்களைப்போலவே நாத்திகர்களும் ஒரு பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ‘ஒரே தேவன்’ என்றோ இயற்கை என்றோ பெயரிட்டார்கள். ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் பிரபலமான வசனம் “May the Force be with you” குறிப்பது கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி.
இரு தரப்பிலும் இருந்ததால் ஆத்திக-நாத்திக வாதத்தை மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் வெற்றி வேல் வெல்லுமடா என்ற பாட்டில் வைக்கிறார்.
http://www.youtube.com/watch?v=DvFZurTDX1A
வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா
கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா
என்று இறைவன் பெருமை சொல்லும் அண்ணன். ஆனால் தம்பி நாத்திகவாதி.
இறைவன் ஆளும் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான்
ஒருவர் வாழ ஒருவர் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்
என்ற stock கேள்வி கேட்கிறான்.பக்தியில் உருகும் அண்ணன் ‘குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா ‘ என்று சொன்னால் ‘குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா என்று பாடும் தம்பி. பசியால் குழந்தைகள் வாடும்போது பாலபிஷேகம் எதற்கு என்ற வழக்கமான வாதம்தான்.
ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?
மோகனகிருஷ்ணன்
362/365
-
amas32
//ஆனால் இது ஏன் mutually exclusive ஆக இருக்கவேண்டும்? குமரனையும் கொண்டாடி கோடி குழந்தைகளையும் கொண்டாட முடியுமே? ஆண்டவனை கும்பிட்டால் அன்பு செலுத்த முடியாமல் போகுமா?//
இது தான் என் சித்தாந்தமும். என் மகன், பாடலில் தம்பி கேட்கும் கேள்விகளை தான் என்னையும் கேட்பான். உண்டியலில் போடும் பணத்திற்கு வாசலில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பிடிவாதமாக சாப்பாட்டு பேக்கட் வாங்கிக் கொடுப்பான். சுவாமிக்கு அலங்காரம் இருக்கும் போது இன்னும் ஏன் மலர்கள் வாங்கிப் போகிறாய் என்று கேட்பான். இதே பதில் தான் சொல்லுவேன். அதையும் செய் இதையும் செய்.
அன்பு இருக்கும் இடத்தில் தெய்வ பக்தி இல்லாமல் இருப்பது அரிது. வெளிப்படாமல் இருந்து ஒரு நாள் பிரவாகமாக வெடிக்கும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙂
amas32
-
rajinirams
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்,இறைவன் உலகத்தை படைத்தானா அவன் தான் ஏழ்மையை படைத்தானா-ஏழ்மையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக? பாடல் சூழ் நிலைக்கேற்ப இப்படியும்-கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே, இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்-மனிதன் இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்- இப்படியும் பாடல் எழுதிய கண்ணதாசன் இறைவனுக்கும் பெயரை வைத்தான் பாடலின் இறுதியில்”இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்” என்று முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.முதலில் நாத்திகராக இருந்த கவியரசர் பின் இறைவன் திருவடி சரணடைந்து பக்தியில் திளைத்ததோடு பல பக்தி பாடல்களையும் இலக்கியங்களையும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற காவியத்தையும் தந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
G.Ra ஜிரா
பெண்களின் பண்கள்
தமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.
வழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே
எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா? ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.
ஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே
இன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே
அடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.
ஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது
இன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது
அவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.
அடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.
ஒருத்தி:
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
இன்னொருத்தி
அடி போடி பைத்தியக்காரி
நான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்
இவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.
இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றிவிட்டான்
இப்படியெல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? வேறு யார்? கவியரசரேதான்.
இன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
பாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.
காலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்
காவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்
இரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே!
இவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு
இந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும்? வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா? சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.
அவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
இவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
வள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்!
இன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா?
ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலைத்தானே மணமாலை தேடி
எந்த மங்கை சொந்த மங்கையோ
ஓ எந்த கங்கை தேவ கங்கையோ
போன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே!
இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.
கடவுள் தந்த இருமலர்கள்
கண் மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
சோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.
இந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம்! ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.
வந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்
நல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா? புலியாய்ப் பாய்கிறாள்.
பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல
இவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.
முதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.
கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே
என்னும் போதே உள்ளம் பந்தாடுதே
அடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.
ஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்
இன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.
ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி
பார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.
எது எப்படியோ! காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல!
பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – உனது மலர் கொடியிலே
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
படம் – பாதகாணிக்கை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=grVbM9WJZksபாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
படம் – எங்க வீட்டுப் பிள்ளை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=jlGlD41oxJgபாடல் – அடி போடி பைத்தியக்காரி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தாமரை நெஞ்சம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=gxU3uBgng-Eபாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தேனும் பாலும்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=KzcZFwOZSukபாடல் – காலம் காலமாய் பெண் தானே
வரிகள் – கங்கையமரன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
இசை – கங்கையமரன்
படம் – கற்பூரதீபம்
பாடலின் சுட்டி – http://youtu.be/SeZ6Z5ysm20பாடல் – மல்லிகையே மல்லிகையே
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – நினைத்தேன் வந்தாய்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Nu3uPoeEussபாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தேவியின் திருமணம்
பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.htmlபாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – இருமலர்கள்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwUபாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
இசை – வி.குமார்
படம் – இருகோடுகள்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=hCR7rD4-K7cபாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – பஞ்சதந்திரம்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=sErsh9Kg7bkபாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
இசை – சி.இராமச்சந்திரா
படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A
அன்புடன்,
ஜிரா
361/365
-
prabakar
படம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
-
Uma Chelvan
இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே.!!! நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .
என்னை கேட்டு காதல் வரவில்லையே ,
நான் சொல்லி காதல் விடவில்லையே !!
மறந்தாலும் காதல் மறக்காதம்மா !!ஒ வெண் நிலா …..இரு வானிலா !!
-
kamala chandramani
பன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக? என்ன ஆராய்ச்சி? நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள் ஜி.ரா.
-
umakrishh
நல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..
-
rajinirams
ஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.
-
பாலராஜன்கீதா
கந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂
-
amas32
இந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு! அற்புதம் 🙂
இத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂
amas32
-
ராஜேஷ்
பாடல் – மல்லிகையே மல்லிகையே
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – நினைத்தேன் வந்தாய்வரிகள் பழநிபாரதி
mokrish 1:02 pm on April 6, 2015 Permalink |
நன்றி