இசைத் தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை
- படம்: காதல் மன்னன்
- பாடல்: மெட்டுத் தேடி
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்
- Link: http://www.youtube.com/watch?v=N0XuO3alLV8
மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டுஅந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டுஅதைக் கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா?இல்லை விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா?
மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?
இசைக்கு வரிகள் மேன்மை தருகின்றனவா? அல்லது வரிகளுக்கு இசையால் பெருமையா?
தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் : கவிஞர் இணையை முன்வைத்துக் கேட்டால், கண்ணதாசனுக்கு விஸ்வநாதன் ஆதாரமா? அல்லது விஸ்வநாதனுக்குக் கண்ணதாசனா?
இக்கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கவேண்டுமா? பட்டிமன்றம் பாணியில் “இரண்டும்” என்று சொல்லமுடியாதா?
தமிழில் இசை கொண்டாடப்பட்ட அளவு கவிதை கொண்டாடப்படவில்லை என்பது என் ஆதங்கம். குறிப்பாக திரைப்பாடல் வரிகள்!
மானே, தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?
மற்ற கலைகளைப்போலவே இங்கும் பொழுதுபோக்கு உண்டு, உன்னதம் உண்டு, மொக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் ரசிக்கும் மனம் இருக்கவேண்டுவதில்லை, வடிகட்டி வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம், எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!
தமிழின் அத்துணை திரைப் பாடலாசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன் 🙂
***
என். சொக்கன் …
30 11 2013
363/365
rajinirams 11:00 am on December 1, 2013 Permalink |
அருமை.”மானே,தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?” -உண்மையான வரிகள்.
தமிழ் திரையுலகில் மெட்டுக்கு பாட்டும் சரி,பாட்டுக்கு மெட்டும் சரி பாடல் வரிகளை விழுங்காத இசைக்கு எப்போதும் வெற்றி தான்.இதை தான் வாலி ஓரிரு முறை மேடையில் “தங்க தட்டில் வைத்த சிங்க பால்”என்று சொல்லியிருக்கிறார்.மெட்டுக்கு பாட்டு இல்ல துட்டுக்கு தான் பாட்டு என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.ஆனால் இது வரை என்னை ஆச்சர்யப்படுத்தியது கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக பாரதியாரின் பாடல்களுக்கு (“மெட்டுக்கு எழுதியது போலவே தோன்ற வைக்கும் “) இசையமைத்த திரு ஜி.ராமநாதன் அவர்கள் தான்.உண்மையிலேயே இசை மேதை. மேலும் பல இசையமைப்பாளர்களும் பாடல் வரிகள் வரும்போது அடக்கி வாசித்து பாடலுக்கும் கவிஞருக்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்கள்.
பல நல்ல நல்ல பாடல்களை “நாலு வரி நோட்டில்” கொண்டு வந்து பரவசப்படுத்திய தங்களுக்கும் திரு ஜி.ராகவன்,திரு மோகனகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட amas32, Uma Chelvan இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
Uma Chelvan 3:17 am on December 2, 2013 Permalink |
Thank you very ,much Mr. Rajinirams.!
amas32 7:06 pm on December 2, 2013 Permalink |
//ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!//
This is the crux of 4varinote!
தினம் ஒரு பா #365 முடிந்தபோது ஒரு வெற்றிடம் தோன்றியது. நீங்கள் #4varinote ஆரம்பித்தப் பொழுதும் முதலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு வரவில்லை. ஆனால் நீங்கள் செய்த இந்தப் பணி மகத்தானது. இப்பொழுது இருக்கும் கவிஞர்களை ரசிக்க சொல்லி கொடுத்தீர்கள். சங்ககாலப் பாடல்கள் ஒரு வகை என்றால் இன்றைய திரைப்பாடல்கள் இன்னொரு வகை.
மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள் 🙂
amas32