உரிமை உன்னிடத்தில் இல்லை
போன வாரம் #BooksOnToast பற்றி ஒரு செய்தி படித்தவுடன் நாமும் சில புத்தகங்களை நன்கொடையாகத் தரலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த பழைய ஆங்கில fiction நாவல்களை எடுத்து அடுக்கும்போது ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய To Cut a Long Story Short சிறுகதைத்தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் Death Speaks என்று ஒரு சிறிய சிறுகதை. 12 -13 வரிகள்தான். இங்கே படியுங்கள் http://am-kicking.blogspot.in/2005/11/death-speaks.html?m=1.
அட்டகாசமான ட்விஸ்ட் இது Somerset Maugham எழுதிய Sheppey நாடகத்தில் வரும் ஒரு The Appointment in Samarra என்பதன் தழுவல் என்று ஆர்ச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை கண்ணதாசன் பாடல் வரிகளை அடுக்கி reconstruct பண்ணலாம் என்று amateur முயற்சி.
வேலையாள் (பாடல் யாருக்காக இது படம் வசந்த மாளிகை இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)
http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8
மரணம் என்னும் தூது வந்தது , அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
வணிகன் (பாடல் என்ன நினைத்து படம் நெஞ்சில் ஓர் ஆலயம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)
http://www.youtube.com/watch?v=NV9Gz3jYnlU
மாயப்பறவை ஒன்று வானில் பறந்து வந்து
வாவென்று அழைத்ததை கேட்டாயோ
பறவை பறந்து செல்ல விடுவேனோ?
அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?
தேவதை (பாடல் போனால் போகட்டும் பாலும் பழமும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)
http://www.youtube.com/watch?v=DnxZnuXlWBo
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
மும்பையில் 1993ல் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மதியம் 1.30 மணிக்கு வெடித்தது. அதில் உயிர் தப்பிய ஒருவர், உடனே மும்பையை விட்டு கிளம்பலாம் என்று ஏர் இந்தியா அலுவலகம் சென்று அங்கு குண்டு வெடித்தபோது பலியானார் என்று ஒரு செய்தி படித்த ஞாபகம். சுஜாதாவின் ‘விபா’ என்ற சிறுகதையில் இதேபோல் ஒரு கடைசி வரி ட்விஸ்ட்.
நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது என்று தோன்றுகிறது.
மோகனகிருஷ்ணன்
359/365
Uma Chelvan 11:20 am on November 27, 2013 Permalink |
#மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே#
விளக்கம் : “அனுகூலயஸ்ய சங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியான இப்பாசுரத்தில் சாதிக்கிறார். நிலையற்ற இந்த உலகவாழ்கையை நிஜம் எனக்கொள்ளும், நம்பும் இந்த உலகத்தாரோடு நான் கூடுவதில்லை, ஐயனே-நிஷ்காரண- அரங்கனே உன்னையே அழைக்கின்றேன். என்மேல் அன்பு கொண்டுள்ள பெருமாளிடத்தில் பற்று கொண்டேன். வேண்டேன் இந்த நிலையற்ற வாழ்கையை விண்ணகர் மேயவனே என்று திருமங்கை ஆழ்வார் சாதித்தது போல.
amas32 6:59 pm on November 27, 2013 Permalink |
Jeffrey Archerன் அந்தக் கதை நானும் படித்திருக்கிறேன் 🙂 பாட்டினால் கதை கோத்துவிட்ட அழகு அபாரம் 🙂
விதி வலியது என்று ஒரு கதா காலட்சேபப் பாடல் முடியும், அது தான் நினைவுக்கு வருகிறது 🙂
amas32
kamala chandramani 8:56 am on November 28, 2013 Permalink |
”நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது.” உண்மை.