தங்க மழை தூவும் திருநாளாம்
ஆதிசங்கரர் ஒரு ஏழையின் வீட்டில் யாசகம் வேண்டி நின்றார். அந்த வீட்டில் வறுமை குடிகொண்டிருந்தது. ஆனாலும் அந்த ஏழைப்பெண்மணி தன்னிடமிருந்த நெல்லிக்காயை எந்த தயக்கமும் இல்லாமல் தானம் செய்கிறார். அடுத்த வேளை உணவுக்கு எந்த வழியுமில்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த பெண்மணியின் குணம் கண்டு நெகிழ்ந்த ஆதிசங்கரர் மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார்.
இந்த கனகதாரா ஸ்தோத்திரம் கேட்டு மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். கண்ணதாசன் பொன்மழை என்று இதை தமிழில் எழுதியிருக்கிறார்.
மந்திரம் உரைத்தாற் போதும் –
மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று
மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் –
இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி
இல்லத்தின் நடுவில் சேரும்’
திருமகள் , பொன் மழை என்றவுடன் நாம் எல்லாருக்கும் ஒரு பாடல் நினைவுக்கு வரும். சொர்க்கம் படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய பொன் மகள் வந்தாள் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) பாடலில் பொன்மழை நெடி
http://www.youtube.com/watch?v=4eMmgxr5KbE
பொன் மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
பொன், முத்து, வைரம், செல்வம், வெல்வெட் விரிப்பு, பொருள் கோடி என்று ஒரு லிஸ்ட் போடுகிறார். திருமகள் சம்மதம் தந்துவிட்டாள் என்கிறார்.
வெறும் மந்திரம் சொன்னால் பொன் மழை கிட்டுமா? கதையின் பொருள் அதுவா? இல்லை. கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் தன்னிடமிருந்த நெல்லிக்காயை பகிர்ந்த செயலின் உன்னதம் சொல்ல அந்த செயலுக்கு ஈடாக பொன்னையும் அளவற்ற செல்வத்தையும் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. பகிர்ந்து உண்ணுதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. சரியா?
மோகனகிருஷ்ணன்
340/3657
lotusmoonbell 9:06 pm on November 7, 2013 Permalink |
கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் தன்னிடமிருந்த ஒரே நெல்லிக்கனியைப் பகிர்ந்த உன்னத செயலுக்குதான் பரிசாக தங்க நெல்லிக் கனிகள் பொழிந்தன. நிறையப் பொருள் இருக்க ஒரு துளியைப் பகிர்வதில் என்ன பெருமை இருக்கிறது?
Uma Chelvan 10:20 pm on November 7, 2013 Permalink |
very nice post!! திருமகள் நம் வீடு தேடி வருவது மிகவும் சிறப்பானதுதான். A very beautiful song by young SPB.
rajinirams 1:17 am on November 8, 2013 Permalink |
அங்கம் ஹரே என தொடங்கும் கனகதாரா ஸ்தோத்திரத்தின் மகிமையை கூறி அதற்கு பொருத்தமான பொன்மகள் வந்தாள் பாடலையும் கொண்ட நல்ல பதிவு. காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது,வந்தாள் மகாலஷ்மியே,போட்டது முளைத்தது கோடிக்கனக்கில் போன்ற பாடல் வரிகளும் நினைவு வந்தது.நன்றி.
amas32 7:41 pm on November 9, 2013 Permalink |
இதோட லேடச்டு வெர்ஷன் காசு பணம் துட்டு மணி மணி :-))
நீங்கள் தேர்வு செய்திருக்கும் பொன் மகள் வந்தாள் பாடல் is such a perfect song for Kanagadhaara sthothram!
பணம் பற்றாக்குறையின் போது கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு லட்சத்துக்கு சமம். அந்த சமயத்தில் பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டுக் கொட்டும் போது அந்த மனநிலையை விவரிக்கவும் முடியுமோ?
amas32