சரியோ? தவறோ?
- படம்: தெய்வத்தாய்
- பாடல்: ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
- எழுதியவர்: வாலி
- இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
- பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
- Link: http://www.youtube.com/watch?v=uegEKABaaSo
கொடி மின்னல் போல் ஒரு பார்வை,
மானோ மீனோ என்றிருந்தேன்!
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை,
குழலோ யாழோ என்றிருந்தேன்!
இந்தப் பாட்டைத் திருவள்ளுவர் எழுதியிருந்தால், ‘மான் இனிது, மீன் இனிது என்பர் தம் காதலியர் கூர்மைக் கண் பாராதவர்’ என்று தொடங்கியிருப்பார்.
அது நிற்க. இணையத்தில் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டிருந்தேன். ‘இந்தத் திட்டம் வருகிற நவம்பரிலோ அல்லது டிசம்பரிலோ அமலுக்கு வரும்’ என்று எழுதியிருந்தார்கள்.
தமிழில் ஓகாரம், ‘ஆவது’ என்ற சொல்லில் முடியும் இரு சொற்களை அடுத்தடுத்து எழுதும்போது, இடையில் ‘அல்லது’ என்று சேர்க்கவேண்டியதில்லை. காரணம், அந்த ஓகாரம் / ‘ஆவது’ என்பதிலேயே ‘அல்லது’ என்பதும் இருக்கிறது.
அதாவது, ‘மானோ மீனோ’ என்று சொன்னாலே, மானோ அல்லது மீனோ என்றுதான் அர்த்தம். ஒருவேளை அந்த ஓகாரம் இல்லாவிட்டால் ‘மான் அல்லது மீன்’ என்று எழுதலாம்.
அதேபோல், ‘இன்றைக்காவது அல்லது நாளைக்காவது’ என்று எழுதவேண்டியதில்லை. ‘இன்றைக்கு அல்லது நாளைக்கு’ என்று எழுதலாம், ‘இன்றைக்காவது நாளைக்காவது’ என்று எழுதலாம், ‘இன்றைக்கோ நாளைக்கோ’ என்று எழுதலாம்.
எதற்கு அநாவசியமாக அல்லதைச் சேர்க்கவேண்டும்? நல்லதைச் சேர்த்தால் போதுமே!
***
என். சொக்கன் …
03 10 2013
306/365
Uma Chelvan 7:27 am on October 4, 2013 Permalink |
எதற்கு அநாவசியமாக அல்லதைச் சேர்க்கவேண்டும்? நல்லதைச் சேர்த்தால் போதுமே!
மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க Mr. சொக்கன்.
எத்தனை ஜென்மம் எனக்கு அளித்தாலும்
இசை ஞானமும் நல்ஒழுக்கமும் வேண்டும் -அத்தனயும் நீ
எனக்கு அளித்தாலும் என் அருகினில் இருந்து ஆண்டிட வேண்டும் !!!!
வாணி வாகதீஸ்வரி, வரமருள்வாய் !!!!
நாளைக்கு முதல் நாள் நவராத்திரி…..கலைமகளின் கருணையும் கண்ணனின் வருகையும் என்றும் நல்லதே கொண்டுவரும் !!!
பாடியவர் – கே ஜே. யேசுதாஸ்
ராகம்- வாகதீஸ்வரி
Uma Chelvan 8:05 am on October 4, 2013 Permalink |
சொல்ல மறந்த கதை படத்தில் ராஜா ஒரு பாடலில் ( title song , எல்லா பாடலும் அவரே எழுதி இருக்கார்) படிச்ச படிப்பினால் நல்ல பண்பு வளரனும் என்று சொல்லி இருப்பார்.
இதே படத்லில் வேறு ஒரு பாடலும் நன்றாக இருக்கும்…………குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும்,கண்ண திறக்குது , கண்ணன் கண்ணு பட தேனை சுரக்குது ……….எவ்வளவு வித்தியாசம் முதல் பாடலுக்கும் இந்த பாடலுக்கும் ??
Saba-Thambi 3:13 pm on October 4, 2013 Permalink |
நவீன திருவள்ளுவர் வாழ்க!