கண்ணன் பிறந்தான்
இன்று கண்ணன் பிறந்த நாள். ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமி திதி பார்த்துக் கண்ணன் வந்த நாள்.
அந்த ஒரு நாள் இரவில் நடந்த சம்பவங்கள், பல திருப்பங்கள் கொண்ட ஒரு த்ரில்லர். கடும் மழை பெய்ய, அருகிலிருந்த யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோட, இருள் சூழ்ந்த ஒரு சிறைச்சாலைக்குள், குழந்தை ஒன்று பிறந்தது. இரவோடு இரவாக, தந்தையாகிய வாசுதேவர் அக்குழந்தையை ஒரு கூடையில் வைத்து, அதைத் தமது தலை மேல் சுமந்து கழுத்தளவு நீர் ஓடிய யமுனை ஆற்றைக் கடந்து, அக்கரை சென்று நந்தகோபரிடம் ஒப்படைத்தார்.
ஒப்பற்ற தேவகியின் மகனாகப் பிறந்து அந்த இரவிலேயே மற்றோர் ஒப்பற்ற பெண்ணாகிய யசோதையிடம் வந்து வளர்ந்தாய்.என்று சொல்லும் ஆண்டாள் பாசுர வரிகள்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்-
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
யசோதைக்கு அடித்தது மிகப்பெரிய ஜாக்பாட். அந்த மாயன் கோபாலகிருஷ்ணனை, ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்டும் பெரும்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது. இதை பாபநாசம் சிவன் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=efsqGgf2KUg
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
என்ற வரிகளில் சொல்கிறார்.
பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். இந்த core கருத்தை கண்ணதாசன் அன்னை என்ற படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் (இசை ஆர். சுதர்சனம், பாடியவர் பானுமதி)
http://www.youtube.com/watch?v=wigeyu943kM
பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா
வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார்
பத்து மாத பந்தம் என்ற படத்தில் ‘இரண்டு தாய்க்கு ஒரு மகள்’ என்ற பாடலில் இதே கருத்தை மறுபடியும் சொல்கிறார். (இசை சங்கர் கணேஷ் பாடியவர் பானுமதி)
ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
கண்ணனும் உனைப்போலே பிள்ளை தானம்மா
பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா
படத்தின் காட்சிக்கு ஏற்ற வரிகள். பாடல் வரிகளில் கண்ணன் கதையும் ஆண்டாள் பாசுரமும் அடுக்கி எழுதுகிறார்.
மோகனகிருஷ்ணன்
271/365
pvramaswamy 11:57 am on August 29, 2013 Permalink |
All song selections superbly blend with excellent description. Great
Nagarajan 1:42 pm on August 29, 2013 Permalink |
annai – music by R Sudarsanam and not by KVM
rajinirams 3:06 pm on August 29, 2013 Permalink |
கிருஷ்ண ஜெயந்திக்கான பதிவு தாங்கள் இடுவதும் நல்ல பொருத்தமே:-)) தேவகி மகனாய் பிறந்து யசோதையிடம் வளர்ந்த கண்ணன் நிலையை வைத்து உருக்கமான பாடல்கள் கொண்ட நல்ல பதிவு. (பாடலின் சூழல் தெரியாது என்றாலும்) புகுந்த வீடு படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண்ணன் பிறந்த வேளையிலே தேவகி இருந்தாள் காவலிலே” பாடலும் அருமையான பாடல். நன்றி.
Kennedynj 4:34 pm on August 29, 2013 Permalink |
wonderful research Mohan. Can feel your enjoying the old epics. Thanks for passing the benefit of your readings to us. These writings keeps us enlightened.
amas32 4:44 pm on August 29, 2013 Permalink |
யசோதை பிரசவித்தாள். குழந்தை மாறியது அவள் தவறல்லவே. ஆனால் பிரசவித்த தேவகி குழந்தையைப் பிரிந்து அந்த தெய்வக் குழந்தையின் பால பருவத்தை அனுபவிக்காமல் போனது அவளுக்குப் பெரும் இழப்பு தான்.
பல சமயம் நாம் யசோதை குழந்தை பாக்கியம் இல்லாதவள், அவளுக்கு ஓசியில் குழந்தை பாக்கியம் கிடைத்த மாதிரி எண்ணுவோம்.
அவளின் பாக்கியம் இறைவனை சீராட்டிப் பாலூட்டி வளர்த்து, நெஞ்சார அணைத்து, அவன் செய்யும் தவறுகளையும் தண்டிக்கும் பேற்றினைப் பெற்றது தான்.
யசோதா – கிருஷ்ணன் உறவு என்னை மிகவும் நெகிழச் செய்யும்.
அற்புதப் பாடல்கள் மோகன கிருஷ்ணா! நன்றி 🙂
amas32