ஒரே ஜீவன்
- படம்: நாயகன்
- பாடல்: நீ ஒரு காதல் சங்கீதம்
- எழுதியவர்: புலமைப்பித்தன்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
- Link: http://www.youtube.com/watch?v=E2NA3TzvQsM
வானம்பாடி பறவைகள் ரெண்டு, ஊர்வலம் எங்கோ போகிறது,
’காதல்’, ‘காதல்’ எனும் ஒரு கீதம், பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் பொழிகிறது,
எங்களின் ஜீவன் நனைகிறது!
ஊர்வலம் சென்ற வானம்பாடிப் பறவைகள் இரண்டு, பன்மை, அப்படியானால், ‘போகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? ‘போகிறது’ என்பது தவறல்லவா?
’எங்களின் ஜீவன்’ என்று சொல்லும்போதே, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் (பன்மை) என்பது புரிகிறது. அப்படியானால், ‘நனைகின்றன’ என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்? நனைகிறது என்பது தவறல்லவா?
இந்த வரிகளை எழுதியவர் சாதாரண கவிஞர் அல்ல, புலமைப் பித்தன், அதுவும் ”புலவர்” புலமைப் பித்தன். மெட்டுக்குப் பொருந்தவேண்டும் என்பதற்காக அவர் இலக்கண சுத்தமற்ற வரிகளை எழுதியிருப்பாரா?
கவிதை இருக்கட்டும், கொஞ்சம் லோக்கலாக வருவோம். தினமும் காலை எழுந்தவுடன் பல் தேய்க்கிறோம். ஒரு பல்லா, முப்பத்திரண்டு பற்களா? ‘பற்களைத் தேய்க்கிறோம்’ என்று பன்மையில் சொல்லாமல் ஒருமையில் சொல்வது ஏன்?
‘சொந்தக் காலில் நிற்கிறேன்’ என்று சபதம் செய்கிறார் ஒருவர். ஒற்றைக் காலில் நிற்க அவர் என்ன கொக்கா? அவருக்கு இரண்டு கால்கள் உள்ளனவே, அவர் ஏன் ‘சொந்தக் கால்களில் நிற்கிறேன்’ என்று சொல்வதில்லை?
‘கண்ணால் பார்த்தேன்’ என்று சாட்சி சொல்கிறார் இன்னொருவர். ஏன் ஒருமை? ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பார்த்தாரா?
தமிழில் ஒன்றாகச் செயல்படும் விஷயங்களைச் சொல்லும்போது, பன்மை அவசியமில்லை. இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், முப்பத்திரண்டு பற்கள் என்றாலும், பேசும்போதும் எழுதும்போதும் ‘கண்ணால் பார்த்தேன்’, ‘கையால் சமைத்தேன்’, ‘பல்லால் சிரித்தேன்’ என்று ஒருமையில் சொல்லலாம்.
அதுபோல, இந்தப் பாடலில் வரும் காதல் ஜோடி ஒன்றாக இணைந்துவிட்ட தருணம். ‘எங்களின் ஜீவன் நனைகிறது’ என்று ஒருமையில் சொல்லி அவர்கள் ஒன்று கலந்துவிட்டதைச் சொல்லிவிடுகிறார் புலமைப்பித்தன்.
கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது!
***
என். சொக்கன் …
01 08 2013
243/365
Mahendiran 11:11 am on August 1, 2013 Permalink |
Arumai, naNbarE!
amas32 11:19 am on August 1, 2013 Permalink |
அருமை! இந்த 4 வரி நோட்டில் எழுதும் உங்கள் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. பாடலில் ஒரு சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து அதன் விளக்கத்தை ரத்தினச் சுருக்கமாக சொல்லி மகிழ்விக்கிறீர்கள்! நன்றி 🙂
amas32
Azhagan 11:45 am on August 1, 2013 Permalink |
இன்னைக்கு ஏன் இவ்வளோ புளோவா வருதுன்னு உங்களுக்கே தெரியலயோ
Vaishnavi 1:05 pm on August 1, 2013 Permalink |
Arumai nanbarae…..
GiRa ஜிரா 2:35 pm on August 1, 2013 Permalink |
”கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது”ன்னு முடிச்சிங்க பாருங்க. அங்க நிக்கிறிங்க நீங்க 🙂
புலவர் புலமைப்பித்தன் பாடல்களையா எடுத்துப் பாத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப எளிமையா அழகா பாடல்களை எழுதியிருக்காரு. சுயவிற்பனை தெரியாதவர் போல.
tcsprasan 2:44 pm on August 1, 2013 Permalink |
அருமை 🙂
app_engine 5:19 pm on August 1, 2013 Permalink |
நல்ல சுவை 🙂
இனிய, எளிய விளக்கம்!
kamala chandramani 9:20 pm on August 1, 2013 Permalink |
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இனிய இசையில் ஜீவனை நனைக்கும்! எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.
பாலா அறம்வளர்த்தான் 10:58 pm on August 1, 2013 Permalink |
உங்களுக்கு முன்பே அனுப்பியதுதான் – சும்மா இங்கேயும் 🙂
‘வதனமே சந்திர பிம்பமோ’ என்று MKT காலம் முதல் இன்று வரை வந்த காதல் டூயட் பாடல்களில் பெண்களின் கண், கூந்தல், பல் என்று அங்கங்களை வர்ணிக்கும் வரிகள் இல்லாத காதல் பாடல் எதாவது இருக்குமா தெரியவில்லை. சமீபத்தில், பாடலாசிரியர் புலமைப் பித்தன் சொன்னது:
‘நாயகன்’ படத்தில் வரும் இந்த பாடலுக்கு பாடல் எழுத புலமைப்பித்தனை கூப்பிட்ட போது இளையராஜா – “ரகுபதி ராகவ ராஜாராம் மாதிரியான புனிதமான ட்யூன் இது. காதல் பாட்டுத்தான்.. ஆனால் உடல் அங்கங்களை வர்ணித்து ஒரு வரி கூட வராமல் எழுதித் தர முடியுமா? ” என்று கேட்டாராம். அப்படி எழுதிய பாட்டுத்தான் இது. இந்த பாடல் ‘ஷ்யாம்’ என்றொரு ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது.
‘நாயகன்’ படத்தில் இந்த பாடல் வரும் காட்சியை நினைத்துப் பாருங்கள். ஹீரோ ஹீரோயினை விபச்சார விடுதியில் பார்த்து, இரக்கம்/காதல் கொண்டு அவளை மீட்டு, காதலித்து, கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெரும் வரை காட்சிகள் அமைந்திருக்கும் (Including few highly romantic scenes). இந்த உறவு உடல் கவர்ச்சியினால் அல்ல என்பதை, ராஜா ட்யூன், வரிகள் என்று எல்லாவற்றிலும் சொல்லி ‘audience’ ஐ வேறு நிலைக்கு கொண்டு போகிறார்.
I’ve absolutely no idea whether there is any other music director who thinks like this 🙂
Ravi_aa 4:08 pm on August 2, 2013 Permalink |
Like in English à pair of specs ?
rajinirams 4:48 pm on August 4, 2013 Permalink |
சூப்பர்.கை(களைத்) தட்டி வரவேற்கவேண்டிய வரி இது-செம பஞ்ச்:-))