காற்றில் வரும் கீதமே
அந்தி மஞ்சள் மாலை அல்லது இரவு நேரம். தனிமையில் ஒரு பெண். தூரத்திலிருந்து கேட்கும் புல்லாங்குழல் இசை. இதுதான் காட்சி. ஒரு பெண்ணின் மனதில் காற்றில் மிதந்து வரும் இந்த இசை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
முதலில் பிரிவின் சோகத்தில் இருக்கும் ஒரு பெண். அவள் எதையும் ரசிக்கும் மன நிலையில் இல்லை. அவளுக்கு இந்த இசை இன்பத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற அவளை அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது.
சிறு குழல் ஓசை, செறிதோடி! வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு
அந்த இசை இனிமையானதுதான். ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற என்னை அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது. யாரோ வேலால் என்னைத் தாக்குவதுபோல் துயரம் தருகிறது என்று அவள் வருந்துகிறாள். (நூல்: ஐந்திணை ஐம்பது பாடியவர்: மாறன் பொறையனார் http://365paa.wordpress.com/2012/02/08/217/)
இன்னொரு பெண் காதலனை நினைத்து அந்த குழலிசையில் மயங்கிய நிலையில் இருக்கிறாள். ஸ்ரீ கிருஷ்ணகானம் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் எழுதிய அலைபாயுதே கண்ணா என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=2OTM3yXVvk8 அவள் அலைபாயும் நிலை சொல்லுகிறார்
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே
இவளும் மாலை என்னை வாட்டுது என்பதை தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே என்று பாடுகிறாள். அவன் இல்லாவிட்டாலும் இந்த இசை அவளுக்கு ஒருவித மயக்கம் கொடுக்கிறது. இது நியாயமா என்று உரிமையுடன் கேட்கிறாள்
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே
அடுத்து பெண். மிகுந்த சோகத்தில் இருக்கிறாள். பிரிவின் கொடுமை தாளாமல் அவள் இருக்கும்போது கேட்கும் குழலிசைப்பற்றி அவள் என்ன சொல்கிறாள்? இந்த இசைதான் என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். அலைபாயுதே படத்தில் வைரமுத்து எழுதிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் ஸ்வர்ணலதா). https://www.youtube.com/watch?v=yzIenDQdtVc
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
ஸ்ரீ வெங்கடக கவி கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே என்றால் வைரமுத்து கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் என்கிறார். அவர் நிலவு சுடுகிறது என்றால் இவர் இரக்கம் இல்லாத இரவு உறக்கம் இல்லாத இரவைப்பற்றி சொல்கிறார்.
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன? அவர்கள் படத்தில் இப்படியோர் தாலாட்டு பாடவா (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் எஸ் ஜானகி ) என்ற பாடலில்https://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg அவர் சொல்வதைப்பாருங்கள். அவள் கண்ணனை நினைத்தாள் ஏதோ தலையெழுத்து மன்னனை மணந்தாள். ஆனால் கண்ணன் நினைவு அந்த குழலோசையாக அவளை தொடர்கிறது. கடைசி வரியில் சட்டென்று அவளின் யதார்த்த நிலை – அந்த குழலோசையை தன குழந்தைக்கு தாலாட்டாக்குகிறாள்
கண்ணனவன் கையினிலே குழலிருந்தது அந்தக்
கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது
இன்றுவரை அந்த குழல் பாடுகின்றது அந்த
இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது
ஸ்ரீ வெங்கடக கவி இன்னொரு பாடலில் குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி சகியே என்றும் சொல்கிறார் http://mp3take.com/download/24266acbf25b7e07/06-kuzhaloothi-manamellam-www-punchapaadam-com-mp3/
அதே குழல் இசை. பெண்ணின் context ஐ பொருத்து என்னென்ன பாதிப்புகள் ? ஒரு பெண் வேலால் தாக்குவது போல் இருக்கிறது என்கிறாள். இன்னொரு பெண் கண்கள் சொருகி மயங்குகிறாள். வேறொரு பெண் இதுவே எனக்கு / என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். ஒரு பெண் தன் குழந்தையை தாலாட்டுகிறாள். இன்னொரு பெண் இந்த இசை இருந்தால் போதும் எனக்கு குறை ஒன்றும் இல்லை என்கிறாள். வெவ்வேறு பார்வைகள்.
மோகனகிருஷ்ணன்
190/365
Jeyakumar 12:40 pm on June 9, 2013 Permalink |
நல்ல தொகுப்பு.. காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ.. பாடல் எப்பொதைக்குமான எனது ஃபேவரிட்..
Kannabiran Ravi Shankar (KRS) 2:19 pm on June 9, 2013 Permalink |
//குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன?//
கண்ணன் என்றாலே ஆண்டாள் தான்? ஆண்டாள் கற்பனை என்ன?:))
——–
குழலை எத்தனையோ பேரு பாடி இருக்காங்க!
-புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே
-அலை பாயுதே…. வேணு கானமதில்… அலை பாயுதே
-குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்…
-குழல் இனிது யாழ் இனிது என்ப (திருக்குறள்)
-அவன் வாயில், தீங்குழல் கேளோமோ தோழி? (சிலம்பு)
——–
கண்ணனுக்கு மட்டும் தான் குழலா?
அட, முருகனே குழல் வாசிச்சானாம்…
நக்கீரர் பாடுவாரு; குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
ஆனா குழல் மட்டுமே வாசிக்கலை; முழவு, பல்லியம், Drums, Trumpet – இதெல்லாம் கூட முருகன் வாசிச்சானாம்:)
முல்லை நிலத்து ஆயர்களின் இசைக்கருவி! அதனால் கண்ணனுக்கு மட்டும் சிறப்பாய் ஆகி வந்தது;
*குழல் = இயற்கை
*யாழ் = செயற்கை
காட்டு மூங்கிலில், வண்டு துளையிட, காற்று அடிச்சி, இயற்கையாய் எழுந்த இசை;
அதான் குழல் இனிது -ன்னு குழலை முதலில் சொன்னாரு வள்ளுவர்!
——–
//வெவ்வேறு பார்வைகள்//
Yes! குழல் இசையால் = ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பார்வை:)
ஆண்டாளின் பார்வை என்னவோ???
Too shocking, இம்புட்டு பாடின ஆண்டாள், குழல்-“இசையை” மட்டும் ஏனோ பாடவே இல்ல:)
Kannabiran Ravi Shankar (KRS) 2:27 pm on June 9, 2013 Permalink |
“குழல்” -ன்னா, கூந்தல் -ன்னும் இன்னோரு பொருள் இருக்கு!
*வாச நறுங் “குழல்” ஆய்ச்சியர் மத்தினால்
*கொத்தலர் பூங் “குழல்” நப்பின்னை கொங்கை மேல்
-ன்னு, குழல்-கூந்தலைப் பாடுற ஆண்டாள், குழல்-இசையைப் பற்றி மட்டும் வாயைத் தொறக்கவே மாட்டேங்குறா; ஏனாம்?:)
போடீ, நீ பாடலீன்னா என்ன?
ஒனக்குப் பின்னால் வந்த மீரா பாடிட்டுப் போறா; என்ன, அது இந்திக் கவிதை!
அப்போ தமிழில்??
anonymous 2:56 pm on June 9, 2013 Permalink |
குழல் “இசையை”த் தான் பாடலையே தவிர…
குழல் “Romance” ஐ பாடுறா, இந்தப் பொண்ணு – That too openly – Dirty Girl:)))
இவளுக்கு, அவனையே நினைச்சி நினைச்சி, dehydration வந்துருச்சாம்!
என்ன சொல்லுறா தெரியுமா?
அவன் ஊதின “குழலில் உள்ள எச்சிலை”, இவ முகம்/ உடம்பில் எல்லாம் பூசச் சொல்லுறா;
வறண்ட போன தேகம், வளர்ச்சி அடைஞ்சீருமாம்… ச்ச்சீய்ய்ய்:)
***நெடு மால் ஊதி வருகின்ற
குழலின் தொளை வாய் நீர் கொண்டு
குளிர முகத்துத் தடவீரே***
அமுத வாயில் ஊறிய,
குழல் நீர் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பை நீக்கீரே
—–
அது மட்டுமா?
அவன் உள்ளாடை கொண்டாந்து, இவளுக்கு வீசினா, அவன் மணமே இவளுக்குத் துளசீ மணமாம்:)
காரேறு உழக்க உழக்குண்டு (Search for yourself, the meaning of this; me too vekkam:))
—–
இந்தக் குழல் பாசுரமே = அவளோட last romance song
அதுக்கு அப்பறம், அவனைப் பிரியாம வாழுறது எப்படி? -ன்னு, அடுத்த பத்தியில் சொல்லிட்டு…. She stops abruptly!
****மருந்தாம் என்று தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
அவனைப் – பிரியாது என்றும் இருப்பார்களே!
அவனைப் – பிரியாது என்றும் இருப்பார்களே!****
After this…
செத்துப் போனாளா? “அரங்கனோடு” கலந்தாளா?
“அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்தே வீழ்ந்தாளா??? dunno! end of kothai – kuzhal;
Maharajan 8:46 pm on January 6, 2020 Permalink
செத்துப் போனாளா? “அரங்கனோடு” கலந்தாளா?
“அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்தே வீழ்ந்தாளா??? dunno! end of kothai – kuzhal;
Both are the same
wow what an Excellent explanation
Unbelievable tamil taste and knowledge.
Long live with Tamil