வல்லவன்
- படம்: அன்பே வா
- பாடல்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
- எழுதியவர்: வாலி
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8
பாவலன் மறந்த பாடலில் ஒன்று,
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று!
தலைவனை அழைத்தேன், தனிமையைச் சொன்னேன்,
தழுவிடக் குளிர்ந்தேன்!
ஒரு கலையைச் சிறப்பாக நிகழ்த்துகிற ஒருவனை ‘வல்லவன்’ என்கிறோம், அதாவது, அதைச் செய்ய வல்லவன். பின்னர் இது இன்னும் நீண்டு, பலகலை வல்லவன், சகலகலா வல்லவன் என்று பாராட்டாகும்.
‘வல்லவன்’ என்ற வார்த்தை, சில நேரங்களில் ‘வல்லன்’ என்று சுருங்கும். உதாரணமாக, ‘சொலல்வல்லன், சோர்விலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்கிற திருக்குறள்.
’வல்லன்’ என்ற வார்த்தை, மீண்டும் சுருங்கி ‘வலன்’ என்றும் மாறலாம். உதாரணமாக, இன்றைய பாடலில் வரும் ‘பாவலன்’ என்ற சொல்லை வைத்துக் கொஞ்சம் விளையாட்டாக யோசிப்போம்.
’பாவலன்’ என்றால் ‘பா வலன்’, அதாவது பாடல் எழுத வல்லவன், மரியாதையாகச் சொல்வதென்றால், பாவலர்!
அப்படியானால் ‘காவலன்’ என்ற வார்த்தையும் இதேமாதிரிதான், ‘கா வலன்’, அதாவது, காக்க வல்லவன்.
அப்போ, கண்ணகி புருஷன் பெயர் ‘கோவலன்’ என்று உள்ளதே, அதற்கு என்ன அர்த்தம்?
அது தெரியவில்லை, நம்மாழ்வார் பாடல் ஒன்றில் கண்ணனைக் ‘கோவலன்’ என்று அழைக்கிறார். அதற்கு ஒரு சுவாரஸ்யமான விளக்கம் சொல்கிறார்கள்.
வடமொழியில் ‘கோபாலன்’ என்ற சொல்தான் தமிழில் ‘கோவலன்’ என்று திரிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கோ பாலன் என்றால், பசுக்களைப் பராமரிக்கிறவன் / பரிபாலிக்கிறவன், மாடு மேய்க்கும் கண்ணன்.
‘கோ வலன்’க்கும் அதேபோல் கொஞ்சம் நீட்டிப் பிடித்து விளக்கம் சொல்லலாம், பசுக்களை மேய்க்க வல்லவன்.
இன்னும் பெட்டர், தமிழில் கோ என்றால் அரசன் என்று அர்த்தம், அரசர்களுக்கெல்லாம் அரசனான, அவர்களையெல்லாம் கட்டி மேய்க்கும் கண்ணனைக் ‘கோ வலன்’ என்பது பொருத்தம்தானே?
***
என். சொக்கன் …
02 06 2013
183/365
anonymous 9:58 am on June 2, 2013 Permalink |
//ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்//
இளைய – ராஜாவின் பார்வை
இசை (எ) ராணியின் பக்கம்
இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
—–
இன்றைய பதிவு, திரையிசைச் சக்கரவர்த்தி, MSV இசை என்றாலும்… ராஜா தொடர்பான சேதிகளே பாட்டில் இருக்கு:)
ராஜாவின் -ன்னு தொடங்குது;
பாவலர் -ன்னு விளக்கம் வேற; ராஜாவின் ஆரம்ப கால இசையூற்று = பாவலர் அல்லவா?
டேய் முருகா,
ராஜா ரசிகர்கள் எப்படியெல்லாம் மறைஞ்சி மறைஞ்சி, ராஜாவைப் பதிவு போடுறாங்க பாருடா:)
anonymous 10:03 am on June 2, 2013 Permalink |
//வல்லவன்’ என்ற வார்த்தை, சில நேரங்களில் ‘வல்லன்’ என்று சுருங்கும்.
உதாரணமாக, ‘சொலல் வல்லன்//
அருமை!
இது வரை சரியே!
//’வல்லன்’ என்ற வார்த்தை, மீண்டும் சுருங்கி ‘வலன்’ என்றும் மாறும்/
அல்லவே!
அப்படீன்னா, இரவலன் = (இரத்தல்) பிச்சை எடுப்பதில் வல்லவனா?:)
ஏவலன் = Servant; ஏவுதலில் வல்லவனா? Nowadays servants & maids are only commanding; thatz a different story:)
anonymous 10:16 am on June 2, 2013 Permalink |
பாவல் + அன் = பாவலன் (பா-வல்; பாப் புனைதல்)
நாவல் + அன் = நாவலன் (நா-வல், நாவு-தல் = நவிலுதல்)
காவல் + அன் = காவலன் (கா-வல், காப்பாற்றுதல்)
இரவல் + அன் = இரவலன் (இர-வல், இர-த்தல் = இரவுதல்)
——-
கூவல், ஏவல், சீவல், தாவல் – இப்படி நிறைய -வல் விகுதி பெற்று வரும், தமிழில்!
அவற்றைக், கூவலன் (கூவுவதில் வல்லவன்) -ன்னு பொருள் கொள்வதில்லை:)
கேவல் = கேவி அழுதல்;
கேவலன் -ன்னு பொருள் கொண்டால், வம்பாப் போயீரும்:)
அதே போல் தான் பாவல், காவல்!
=இவை தொழிற் பெயர்கள்; -வல் விகுதி பெற்று வருவன
=பாவல் (பாவுதல்) செய்வதால், அவன்=பாவலன்/ இரவல் செய்வதால், அவன்=இரவலன்
நற்றமிழ் அறிஞர், இராம.கி ஐயா, இதைப் பற்றிச் சொல்லும் ஒரு பார்வை, இங்கே = http://valavu.blogspot.com/2009/03/4.html
என். சொக்கன் 11:11 am on June 2, 2013 Permalink
To avoid confusion, I am rewording the post slightly, to make it clear that mine is not the grammar def, but an interesting interpretation only
என். சொக்கன் 11:17 am on June 2, 2013 Permalink
Just to restate, this blog is interesting interpretations of lyrics, sometimes we discuss grammar here, doesn’t mean everything posted here is a grammar research article 🙂
Mistake is mine, I should’ve explicitly told this in my article, thanks to “Anonymous” for pointing this and giving the right explanation, I have adjusted the article as required
என். சொக்கன் 11:07 am on June 2, 2013 Permalink |
Thanks for the paaval + an explanation, I don’t see anything wrong in ‘paa valan’ viewpoint also, it’s just another interpretation of same word, not the only explanation 🙂
anonymous 11:58 am on June 2, 2013 Permalink
//Mistake is mine//
achacho
no issues sir;
all interpretations are very welcome; i just put my interpretation:)
we can’t be doing grammar research always
but when the occasion comes, just sharing for the benefit of all; thatz it
btw, i like “glamour” research article, than “grammar” research article :)))
anonymous 10:47 am on June 2, 2013 Permalink |
//வடமொழியில் ‘கோபாலன்’ என்ற சொல்தான் தமிழில் ‘கோவலன்’ என்று திரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது//
ஐய்யய்யோ… முருகா;
அல்லவே அல்ல!
கோவலன் = நற்றமிழ்ச் சொல்லு; வடமொழி Gopalan அல்ல!
இடவல, குடவல, ** கோவல **, காவல -ன்னு பரிபாடல்; கடுவன் இள எயினனார் எழுதியது;
“கோவலன்” = செந்தமிழ்ச் சொல்லு தான்!
——–
anonymous 11:00 am on June 2, 2013 Permalink |
வடமொழி Go-பாலன் வேறு;
தமிழில் ko-வலன் வேறு
Go = பசு; गोपाल (வடமொழியில்)
தமிழில், கோ = உலகம்
கோ- வேந்தன் = உலகுக்கு அரசன்
கோ- விந்தன் = உலகுக்கு விந்தாய் (தோற்றமாய்) இருப்பவன்;
குறையொன்றுமில்லாத கோ-விந்தா,
உன் தன்னோடு உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது -ன்னு திருப்பாவை; கோ-வலா, கா-வலா -ன்னு பரிபாடல் & கலித் தொகை!
——-
தமிழில், கோ = மாடு/ செல்வம் -ன்னும் வரும்!
வடமொழியில் Go=”புனிதப்” பசு மட்டுமே;
தமிழில், ko = எல்லா மாடுகளும்; காளை/ பசு/ எருமை:)
கோனார்=konar; மாடு மேய்ப்பவர்; பசு மட்டுமே மேய்ப்பவர் அல்ல;
அதே போல், முல்லை நிலத்து ஆயர்கள் = கோனார்/ கோவலர்கள்; கோவல் = மாட்டு மந்தை
திருக்-கோவல்-ஊர் = “திருக்கோயிலூர்” -ன்னு இன்னிக்கி ஆயிருச்சி:)
திருக்கோவலூர் = மாட்டு மந்தை உள்ள, ஆயர்களின் ஊர், என்பதே சங்க கால வழக்கம்! ரொம்ப பழமையான ஊரு;
பூங்-கோவல்-நாச்சியார் -ன்னு தான் தாயாருக்குப் பேரு;
பெருமாளுக்கு = கோவலப் பெருமாள்/ ஆயனார் -ன்னே பேரு!
ஆக, கோவலன் = நற்றமிழ்ச் சொல்லே!
Gopalan அல்ல!
கந்தன்/ ஸ்கந்தன் போல ஓசை ஒற்றுமை இருந்தாலும், வேற வேற பொருள் தரும் சொற்கள்!
என். சொக்கன் 11:04 am on June 2, 2013 Permalink |
//கோவலன் = நற்றமிழ்ச் சொல்லு; வடமொழி Gopalan அல்ல!//
Yes, that’s why I mentioned it first as ‘sollappadugiRathu’ and then moved away :))
anonymous 12:04 pm on June 2, 2013 Permalink
ha ha ha
“cholla padugiRathu” saves chokkan:)))
தமிழ்ச்சொல் (எ) காதலியின் மேலுள்ள மோகத்தால்…
அவளை, சம்ஸ்கிருதப் பையன் தட்டிக்கிட்டுப் போயிருவானோ? -ங்கிற பயத்தால்…
அப்பப்ப, எனக்கு இவ மேல ஒரு “ஜிங்-சக்” வந்துரும்; கண்டுக்காம மன்னிச்சிருங்க:))
rajnirams 10:49 am on June 2, 2013 Permalink |
அருமை,முகமது பின் துக்ளக் படத்தின் “பாவலன்”பாடிய புதுமை பெண்ணும் வாலி எழுதியதே.இன்று ராஜாவின் பிறந்தநாளில் எழுதி உள்ளீர்கள்.ராஜாவுடன் அதிக பாடல்களில் பணியாற்றியவர் என்பதால் அந்த பாட்டை இப்படி பாடினாலும் சரியாக வரும்-“ராஜாவின் பார்வை வாலியின் பக்கம்”. நன்றி.
anonymous 11:50 am on June 2, 2013 Permalink |
//கண்ணகி புருஷன் பெயர் ‘கோவலன்’ என்று உள்ளதே, அதற்கு என்ன அர்த்தம்?//
இது Super-O-Super கேள்வி!
//அது தெரியவில்லை,
நம்மாழ்வார் பாடல் ஒன்றில் கண்ணனைக் ‘கோவலன்’ என்று//
:))
யப்பா, கண்ணகி புருசா; செம பேரு-ப்பா ஒன் பேரு:)
——
சிலப்பதிகாரக் கோவலன் = ஆயர்க் குடியில் பிறந்தவன் அல்லன்!
அவர்கள் = நகரத்தார்/ வாணிபக் குடி
அதனால், “மாடு மேய்ப்பவன்” -ன்னு கொள்ளுதல் சரியா வராது;
So, இன்னொரு பொருளான, கோ=அரசன்; To govern என்பதே நலம்;
கோத் தொழில் = Governance
கோவலன் அப்பா (மாசாத்துவான்) பெரிய Business Magnate அல்லவா; ஒரு அரசனைப் போல வளம்/ அதிகாரம் கொண்டவரு;
அதான் கண்ணகி, பாண்டியன் கிட்ட பேசும் போதும், “மாசாத்து வாணிகன் மகனை ஆகி” -ன்னு Intro குடுக்குறா; He is such a well known business person in governance circles..
கோவலன் = (வணிக) அரசில் சிறந்தவன்
——
எங்கோ, சிலரு சொல்லக் கேட்டுள்ளேன்; கோவலன் குடும்பம் = வைணவக் குடும்பம்; அதான் “கோவலன்” -ன்னு கண்ணன் பேரை வச்சாங்க -ன்னு:)
அப்படி அல்ல!
நகரத்தார் சமூகம் = சிவபெருமானையே பெரும்பாலும் தலைமகனாகக் கொள்ளும் (பெரும்பாலும்)
அதனால், கோவலன் = வைணவக் குடும்பம் என்பது செல்லாது செல்லாது:)
அன்றைய நகரத்தார் சமூகம் = ஆசீவக சமயத்தவர்
ஆசீவகம் அழிந்த பின், பின்னாளில் சைவத்தைத் தழுவியவர்கள்;
இளங்கோ அடிகள் காட்டும், கோவலன் அப்பா மாசாத்துவான் = ஆசீவகம்; கண்ணகி அப்பா மாநாய்கன் = பெளத்தம்
——-
நம்மாழ்வார், கண்ணனை = கோவலன் -ன்னு பாடுவது, கோனார்/ ஆயர்க் குலம் என்ற அளவில் மட்டுமே!
ஆனா கண்ணகி புருசன் = கோவலன் வேறு; Both kovalans are different:)
எனக்கு, ஆழ்வாரின் ஈரத் தமிழ் பிடிக்கும் என்பதற்காக,
சிலப்பதிகாரக் கோவலனை = கண்ணனோடு தொடர்பு படுத்தவே மாட்டேன்!
சமயம் கடந்து, “தமிழைத் தமிழாய் அணுகுதலே” நலம்!
என்ன, சரி தானே கண்ணகி புருசா?:))
எழுத்தில் என் விசுவாசம், தமிழுக்கு மட்டுமே! காதல் முருகனுக்குக் கூட அல்ல!
amas32 9:21 am on June 3, 2013 Permalink |
Nice discussion 🙂
amas32
ravi 11:02 pm on November 29, 2013 Permalink |
ஆயர் குலத்திற்கு கோவலர் என்றும் கோபாலர் ஸ்ரீ கோபாலர் என்றும் அழைப்பர் கோவலர் என்பது ஆயர் குலத்தையே குறிக்கும் அந்நாட்களில் இடத்தை வைத்து செல்வந்தன் என்று முடிவு செய்வதில்லை யாரு என்னகு வேண்டுமானாலும் வீடு அமைத்து கொள்ளலாம் மாடு ஆடு எவ்வளோ வைத்து உள்ளானோ அவனே செல்வந்தன் என்று கூறுவர் முல்லை நிலத்திலே தான் அரசாட்சி உருவானது. அகவே கோவலர் அரசன் வணிகன் என்பதுஅவன் கோவலனை இருந்தவன் என்பதனாலே அப்பேர் அவனுக்கு வந்திருக்க கூடும்