எங்கே எந்தன் காதலி
ஆண்கள் காதல் வந்ததும் (அல்லது அதற்கு முன்பே) காதலியைப் பற்றி ‘இவ என் ஆளு’ என்று நண்பர்களிடம் சொல்வதுண்டு. நேரடியாகவோ அல்லது வர்ணித்தோ இந்த அறிமுகம் நடக்கும். அல்லது தனிமையில் காதலியை நினைத்து உருகுவதும் உண்டு. இப்படி நிறைய பாடல்கள் திரைப்படங்களிலும் உண்டு. வித்தியாசமான காதலியை அறிமுகம் செய்யும் சில வரிகளைப் பார்க்கலாம்
வாலி எழுதிய உன்னிடம் மயங்குகிறேன் என்ற பாடலில் (படம்: தேன் சிந்துதே வானம் இசை: வி.குமார் பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்)
https://www.youtube.com/watch?v=PYhF-ipC2Jw
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
ஒரு பெண் பற்றிய வர்ணனை போல்தான் இருக்கிறது. காதலியைப்பற்றி சொல்ல ஆரம்பித்து ‘இன்னிசை தேவதையே’ என்கிறார். தொடர்ந்து ‘வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்’ என்று இன்னொரு clue கொடுக்கிறார். கவிஞருக்கு இசைமீதுதான் முதல் காதல்.. இதே கருத்தை மீண்டும் இன்னொரு பாடலிலும் சொல்கிறார். தங்கத்திலே வைரம் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், SPB)
https://www.youtube.com/watch?v=nmvOZg0usCQ
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா
யார் தன் காதலி என்று வெளிப்படையாக சொல்கிறார். இசை மேல் அவருக்கு இருக்கும் அளவுகடந்த காதல் இதோடு திருப்தி அடையவில்லை. இன்னும் இன்னும் எழுதலாம் என்று நினைத்து முத்தான முத்தல்லவோ படத்தில் ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடியவர்கள் எம் எஸ் விஸ்வநாதன், SPB)
https://www.youtube.com/watch?v=n6D8REKB2ec
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
இசைக்காதலி கவிதைக் காதலனை எப்படி அணைத்து அன்பு காட்டுவாள்? இங்கே வாலி விளக்குகிறார். எழுத்து வடிவில் உள்ள கவிதை இசை வடிவம் பெறும்போது அங்கே பஞ்சமம், தைவதம் எல்லாம் கொஞ்சும் இல்லையா?
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தைவதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இசையை விரும்பும் காதலிக்கும் அனைவருக்கும் பொருந்தும் வரிகள். இன்னும் சொல்கிறார்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் என்னாளும்
காதலியை ‘என்னை மயக்கிய மெல்லிசையே’ என்று சொல்வது ஒருவகை. இசையே என் காதலி என்று சொல்வது கொஞ்சம் வித்தியாசம்தான்
மோகனகிருஷ்ணன்
181/365
anonymous 11:10 pm on June 2, 2013 Permalink |
அழகான பதிவு @mokrish
இசை – காதல் : ரெண்டுமே very complicated, but very pleasurable:)
//கவிஞருக்கு இசைமீதுதான் முதல் காதல்//
egg-jactly:)
காதலி அருகில் இல்லாத போதும், உடலையும்/ மனதையும் பார்த்துக் கொள்வது “இசை” தானே!
அம்புட்டு ஏன்? காதலி அருகில் இருக்கும் போது கூட, இசையை ஓட விட்டுக், காதல்/கலவி செய்வது தான் பேரின்பமாம்!:)
அய்யோ; என்னை மொறைக்காதீக; சொல்லுறது இளங்கோவடிகள்!
—–
மாதவி அறிமுகம் ஆகுறா கோவலனுக்கு!
அப்போ, மாதவி மேல, ஆரம்பத்திலேயே வருத்தமாம் அவனுக்கு! = ஏன்?
மாதவியின் உடல் பாகங்களால், இசைக் கூறுகள் எல்லாம் அழிஞ்சி போயிருதாம்; அதனால் கோவலனுக்குச் சோகமாம்:))
எண்ணும் எழுத்தும் இயல்-ஐந்தும் பண்-நான்கும்
பண்-நின்ற கூத்துப் பதினொன்றும்– மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து….
பண், இயல் -ன்னு எல்லாத்தையும் “போக்கிட்டாளாம்”; மண்ணின் மேல் இதையெல்லாம் போக்கிட்டாளே மாதவி… ச்சே -ன்னு வருத்தம் இசை-ஆர்வலன் கோவலனுக்கு:)
அழகான சிலப்பதிகார வெண்பா!
anonymous 11:33 pm on June 2, 2013 Permalink |
//எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்//
MSV’s master piece!
அவர் குரலில் இருக்குற “வீர்யத்துக்கு” முன்னாடி,
SPB குரல் மாணவனா அடங்கீரும்:)
திரைக் காட்சியிலும், மாணவன் – ஆசிரியர் கிட்ட, பயிற்சி வேண்டித் தான் வருவான்; தேங்காய் சீனிவாசன் கலக்கி இருப்பாரு! Piano & Violin combo!
——
//பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும்
பஞ்சணை போடும் எனக்காக
தைவதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக//
சரிகம-பதநிச
இதில் ப = பஞ்சமம்; த = தைவதம்
சேர்த்துப் படிங்க = பத(ம்)
பதம் என்பதே “புணர்ச்சி”யால் வருவது; பகு-பதம்; பகாப்-பதம்
பதமா நடந்துக்க -ன்னு சொல்லுறோம்-ல்ல?:) பதம் செய்த உணவு -ன்னும் சொல்லுறோம் அல்லவா?
அப்படியொரு அனுபவம் குடுக்க வல்லது = பதம்!
அதைப் ப-த -ன்னு எடுத்து
பஞ்சமத்தை = பஞ்சணையாக்கி, தைவதம் = அவளாக்கி, படர விடக் கண்ணதாசனால் மட்டுமே முடியும்! மனுசன், இன்பத்தில் அப்படி ஆழமானவரு:))
——-
சரிகம-பதநிச வில், எதுக்கு பஞ்சமம்-தைவதம் மட்டும் குறிப்பிட்டுச் சொன்னீங்க?-ன்னு, இசைக் கல்லூரியில் யாரோ கேட்டாங்களாம்;
அப்போ, கண்ணதாசன் சொன்ன வெளக்கம் இது; நானா, அனுபவிச்சிச் சொல்லும் விளக்கம் -ன்னு தப்பா நினைச்சிக்காதீக:))
Saba-Thambi 5:56 pm on June 3, 2013 Permalink |
Another song your theme…
Athisaya raagam
(http://www.youtube.com/watch?v=O8PO18QQ5Gk)