விருந்தினர் பதிவு : காண்டா
பாடல்: அந்தக் காண்டாமணி ஓசை
படம் : விருமாண்டி
எழுதியவர் : முத்துலிங்கம்
அந்தக் காண்டாமணி ஓசை கேட்டிருச்சு
எங்க கலியுகத்துச் சாமி, வெளிய வா
படத்தில் “காண்டாமணி” ஒலித்தவுடன் தான் இந்தப் பாடலும் ஆரம்பிக்கும்.
மணி தெரியும். அதென்ன காண்டா?!
படத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய மணியைக் காட்டுவார்கள் காண்டாமணி என..
அதுதான். காண்டா என்றால் “மிகப்பெரிய” எனப் பொருள்…
இதே பொருளில் நமக்குத் தெரிந்த சில. காண்டாமிருகம்,காண்டாவிளக்குஇவையிரண்டும் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம்.
காண்டாக் கம்பு, காண்டா வாளி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இங்கே க்ளிக் செய்யுங்கள்: http://3.bp.blogspot.com/_6KDxNeBPslQ/S-PyuhnbCdI/AAAAAAAABZI/4fb49Dhvr-o/s200/malaysia+tamilar.JPG
மேலே உள்ள படத்தில், அந்தம்மா சுமந்துக் கொண்டிருப்பதுதான் காண்டா வாளி. இரண்டு வாளிகளையும் ஒரு கம்பில் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கம்பு வளையும் தன்மை கொண்டதாக இருக்கும், சுமப்பதற்கு வசதியாக. இந்தக் கம்பின் பெயர் காண்டாக் கம்பு. இவை ரப்பர் தோட்டங்களில் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள்.
மெட்ராஸ் பாஷையில் “காண்டாயிடுவேன் மச்சான்” ( கடுப்பு) & “உனக்கேண்டா காண்டு” (பொறாமை) சொல்றதுக்கும் ”காண்டா”வுக்கும் எந்த ஸ்னானப்ராப்தியும் இல்லை. இதுக்கு இன்னும் விவாகாரமான அர்த்தம் இருக்கும்ன்னும் சொல்றாங்க. தேடிப் பார்த்துக்குங்க… 🙂
சரி சரி, இந்தப் பதிவைப் படிச்சு காண்டாகாம பாட்டைக் கேட்டு எஞ்சாய் பண்ணுங்க 🙂 🙂
காளீஸ்
பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் புளியங்குடி.திருவண்ணாமலையில் எஞ்சனியரிங். Contact Center industry(Voip / IVR)யில் வேலை.சென்னையில் 7 வருடங்கள். இப்பொழுது சிங்கப்பூரில்.
பக்கத்துவீட்டில் தினத்தந்தி,விகடன்,குமுதம் பஸ் பயணங்களில் ராஜேஷ்குமார் என ஆரம்பித்த வாசிப்பு, வலைத்தள அறிமுகத்திற்குப்பிறகு கொஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது. ட்விட்டரில் 140க்குள் எழுத ஆரம்பித்து இப்பொழுது இங்கே வலைப்பதிவுவரை வந்திருக்கிறது : http://eeswrites.blogspot.sg/
anonymous 4:27 am on May 5, 2013 Permalink |
“காண்டா” என்பது வடமொழிச் சொல்:)
http://spokensanskrit.de/index.php?tinput=rhinoceros&direction=ES&script=HK&link=yes&beginning=0
காண்டா-மிருஹம் = பெரு-விலங்கு!
காண்டா-மணி = திரு-மா-மணி
(திருமலை வேங்கடவன் கருவறைக்கு முன்னுள்ள மண்டபம் = “திருமாமணி” மண்டபம்;
வாயிற் காப்போன் சிலைக்கு இந்தப் புறம்…
ரெண்டு பெரிய (காண்டா) மணி தொங்கும், “தரிசனம்” முடித்து வரும் வழியில் நாமளே பார்க்கலாம்)
காண்டா-மிருஹத்துக்கு, நல்ல தமிழ்ச் சொல் = கொந்தளம்
மூக்குக் கொம்பன்/ உச்சிக் கொம்பன் -ன்னும் சொல்லுறது வழக்கம்
ஆனா, “காண்டா-மிருஹமே”, இன்னிக்கி தமிழில் பரவல் ஆயிருச்சி
“காண்டா” மேல் நமக்கொன்றும் “காண்டு” இல்லை:)
Kalees 7:50 am on May 5, 2013 Permalink |
அட!! வடமொழிச் சொல்தானா.. என்க்கு சந்தேகம் இருந்தது. தேடிப் பார்த்தேன். கொஞ்சம் விவாகரமான அர்த்தம் போட்டிருந்தது. அதை தேடிப் படிச்சுக்கோங்கன்னு பதிவுலயே போட்டிருப்பனே 🙂