நல்ல நல்ல நிலம் பார்த்து
சென்னை வெயில் கடுமையாகி எல்லாரும் கோடை மழையைப் பற்றி பேசுகிறார்கள் எனக்கு என் சுவாசக்காற்றே படத்தில் வரும் சின்ன சின்ன மழைத்துளிகள் பாடல் நினைவுக்கு வந்தது. வைரமுத்து மழையை சிலாகித்து எழுதிய வரிகள் http://www.youtube.com/watch?v=TC61Of_ZYKw
சிறு பூவினிலே விழுந்தால்
ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்தெனவே மலர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால்
நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
மழைத்துளி சேர்ந்த இடம் பொருத்து அதன் உருமாறும் என்று அழகாக ஒரு Outcome Analysis. இதே போல் வேறு ஏதொ படித்தது போல் தோன்றி, கொஞ்சம் யோசித்தவுடன் நினைவுக்கு வந்தது பைபிளின் உவமைக் கதைகள் . நான் படித்த பள்ளி, கல்லூரி இரண்டும் கிறிஸ்துவ நிறுவனங்கள் என்பதால் பைபிளோடு அறிமுகம் உண்டு. கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் படித்ததால் ஒரு மறு அறிமுகம் கிடைத்தது. இயேசு விதைப்பவனும் விதையும் என்று ஒரு உவமைசொல்கிறார் .
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
இதற்கு விளக்கம் சொல்லும்போது விதை என்பது இறைவனின் செய்தி என்று குறிப்பிடுகிறார். இயேசு காவியத்தில் கண்ணதாசன் வார்த்தைகளில் இந்த விளக்கம்
விண்ணரசின் செய்தியினை உணரா தானே
வீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!
கண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான்
கல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!
எண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன்
எப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்!
நண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன்
நல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்!
அருமையான விளக்கம். சரி ஆனால் கொஞ்சம் நெருடல். என்ன சொல்கிறார்? அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை என்றால் , விதை விழுந்த இடமே விளைவுகளை நிர்ணயிக்கும் என்றால் கொஞ்சம் கடுமையாக இருக்கிறதே? விதைக்கு இடம் பெயர வழியில்லைதான் ஆனால் மனிதர்களுக்கு உண்டே? என்ன செய்யவேண்டும் அதையும் கண்ணதாசன் சொல்கிறார் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற பாடலில்
http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Ikkaraikku%20Akkarai.eng.html
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
வாய்த்த இடம் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்தால் நல்ல விளைவுகள் வரும். தெளிவான அறிவுரை.
மோகன கிருஷ்ணன்
153/365
Saba-Thambi 2:18 pm on May 3, 2013 Permalink |
அருமையான பதிவு!
உவமைகள் பொதுவாக பூலோக கதைகள் மேலோக அர்த்தங்களைக் விவரிக்கும். (earthly stories with heavenly meaning)
விவரணம் பல கோணங்களில், உங்கள் பதிவு அழகாக திரைப்பாடலுடன் அமைகிறது.
I have been searching for the “yesu kaaviyam” for the last 20 years. whenever I visited Sri Lanka I have searched most of the Tamil bookshops but was unsuccessful. Finally with the link suggested by Mr. N.Sokkan I have placed an online order and eagerly waiting for the arrival.
Saba
Mohanakrishnan 8:31 am on May 4, 2013 Permalink |
நன்றி.
rajnirams 6:29 pm on May 3, 2013 Permalink |
அருமை,பல வருடங்களுக்கு பிறகு கவியரசரின் அக்கரைப்பச்சை பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் திங்கிங்கிற்கு பாராட்டு,லிங்க்கிற்கு நன்றி:-))
rajnirams 6:30 pm on May 3, 2013 Permalink |
பதிவு அருமை,பல வருடங்களுக்கு பிறகு கவியரசரின் அக்கரைப்பச்சை பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் திங்கிங்கிற்கு பாராட்டு,லிங்க்கிற்கு நன்றி:-))
Mohanakrishnan 8:17 am on May 4, 2013 Permalink |
‘திங்கிங்கிற்கு – அட !
GiRa ஜிரா 10:13 pm on May 3, 2013 Permalink |
அருமையான பதிவு. விதைகள் எங்கு விழ வேண்டும் என்று விதைகள் முடிவு செய்ய முடியாது.
அதைத்தான்.. நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா.. இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா என்று கவியரசர் சொல்லியிருப்பார்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை .. என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை… மெல்லிசை மன்னரின் குரலில் அட்டகாசமான பாடல்.
Mohanakrishnan 8:08 am on May 4, 2013 Permalink |
//விதைகள் எங்கு விழ வேண்டும் என்று விதைகள் முடிவு செய்ய முடியாது // ரொம்ப சரி. Warren Buffet இதை Ovarian Lottery என்று சொல்கிறார். http://www.getrichslowly.org/blog/2010/03/31/warren-buffett-on-the-lottery-of-birth/
amas32 10:44 pm on May 3, 2013 Permalink |
இந்த மாதிரி பாடல்களைத் தேடிப் பிடிக்கவே ஒரு தனித் திறமை வேண்டும். அது உங்களிடம் நிறைய இருக்கிறது. வைரமுத்துவின் கவிதை பிரமாதம்.
இயேசு காவியத்திலும் அதை அடுத்து நீங்கள் கொடுத்திருக்கும் திரைப் பா டலிலும் கவியரசரின் மேதமையையும் எளிமையையும் ஒரு சேரக் காணலாம்.
படித்துப் படித்து இன்புறுகிறேன்.
amas32
Mohanakrishnan 8:30 am on May 4, 2013 Permalink |
நன்றி. சில பாடல்களும் பாடல் வரிகளும் என்றும் நினைவில். மறக்கவே முடியாது
Mohanakrishnan 8:24 am on May 4, 2013 Permalink |
அந்த உவமை வழிச்செய்தியை கண்ணதாசன் வார்த்தைகளில் படிக்க http://goo.gl/5Chl8
rvpp 4:58 pm on May 4, 2013 Permalink |
Koadaiyil Jannalai thiranthu vaithean. Kaatru varavillai. Kavidaiyum, paniththuliyum mattrum vithai kalum vanthu vizhukindrathu. Kilpauk (veedu irukkum idam) illai illai…MALEpaukil irunthu. Valthukkal sir.
anonymous 5:01 am on May 5, 2013 Permalink |
sema post, mokrish;
pl. pardon my english
there is a great song (sonnet) by John Milton – On His Blindness
that exactly captures the contemplative mood of our Kannadasan
God, has thousands of angels at his bidding speed; over the land & ocean
Milton speaks to himself –
“Then what did I do or achieve? What did I do to make my creation purposeful?”
That murmur soon replies, “God doth not need either man’s work or his own gifts”
= Who best bear his mild yoke, they serve him best;
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
//போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
The last line is the explosion of Kannadasan
//போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
= They also “serve”, who only “stand” & wait
நிற்பவர்கள் நில்லுங்கள் = Only Stand….
Whattay flashing lightning thoughts of both Kannadasan & Milton!
= They also “serve”, who only “stand” & wait
உன் அருளே புரிந்து “இருந்தேன்”, இனி என்ன திருக் குறிப்பே?
வாழும் சோம்பரை உகத்தி போலும், அரங்க மா நகருளானே!
anonymous 5:12 am on May 5, 2013 Permalink |
விண்ணரசின் செய்தியினை உணரா தானே = வீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!
= வீதியில் விழும் விதை ரொம்ப மிதிபடும்; ஆனாலும் வீதியிலும் மரங்கள் இருக்கே!
கண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான் = கல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!
= கல்லிலே விழும் விதை மடமட-ன்னு வளராது; ஆனா, கல்லிலும் வேர் கொள்ளும் செடிகள் இருக்கே!
எண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன் = எப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்!
= முள்ளில் விழுந்த விதை முள்ளாய்த் தான் போவும்; ஆனா கள்ளியிலும் பால் இருக்கே!
நண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன் = நல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்!
= நல்ல நிலத்தில் விளைந்தவை தான் அறுவடை ஆகும்; (பிறர் உண்ணப் பயன்படும்);
= ஆனா, அதுக்காக, மற்ற நிலத்தில் விளைபவையும், வளர்ச்சி உள்ளவையே!
= They also serve who only stand & wait
இயேசு நாதப் பெருமானின் உள்ளத்தை, அப்படியே கொண்டாந்து கொடுக்கும் கண்ணதாசன் வாழ்க!
anonymous 5:35 am on May 5, 2013 Permalink |
ஒரு வகையில், இது கண்ணதாசனின் Life Confession கூட:)
//வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
—–
கண்ணதாசன் வாழ்க்கை வரலாற்றைப் படிச்சிப் பாருங்க (குறிப்பா: வனவாசம் & மனவாசம்)
கண்ணதாசனுக்கு அருகில் இருந்தோர் பலருக்கு
=அவரைப் பிடிக்கவே பிடிக்காது
கண்ணதாசனைப் பிடித்தவர்கள்
=அவர் அருகில் இல்லாத/ முகம் தெரியாதவங்க தான்!
(MSV was the only one near soul, who really “understood” him)
——
கண்ணதாசனின் “உறுதி” அப்படி;
=தன் முனைப்பு செய்யவே மாட்டாரு
=பிரபலங்களிடம் ஒட்டிக்கிட்டு வாழ மாட்டாரு;
எது-ன்னாலும் பளீர் தான்;
கொள்கை மாறினாலும், அதையும் பளீர் -ன்னு அவரே சொல்லீருவாரு;
ஐயோ, என் நண்பர்கள் தப்பா நெனச்சிக்குவாங்களோ?
பாட்டுக்காக அமைஞ்ச Social Networking கலைஞ்சீருமோ? -ன்னு எல்லாம் துளியும் கவலைப்படாத குணம்;
அதான் போல, அவர் அருகில் இருப்போர் எல்லாம், அரசியலில்/ அதிகாரத்தில் முன்னேற…
இவர் மட்டும், “தான் தானாகவே” இருந்து கொண்டார்;
//வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
= They also “serve”, who only “stand” & wait
அருகில் இருப்போருக்கு பிடிக்கலீன்னாலும்
முருகில் இருப்போனுக்கு என்றும் பிடித்தமான கண்ணதாசன்;
psankar 11:08 pm on May 13, 2013 Permalink |
ஒரு முறை பாண்டியராச(ஜ)ன் மிகவும் சோகமாக இருந்தாராம். அப்போது வினுச் சக்கரவர்த்தி, அவரிடம், “வீழ்வது பாறையாக இருந்தாலும் விதைக்கு வீரியம் இருந்தால் பிழைத்துக் கொள்ளும்” என்றாராம். இதனைக் கேட்ட பின் பாண்டியராசனுக்கு மிகவும் வீரம் வந்து அதன் பின் முன்னேறினாராம். உங்கள் பதிவைப் படித்தவுடன், பாண்டியராசனும், வினுவும் இந்த சேதியைப் பகிர்ந்து கொண்ட பேட்டி நினைவுக்கு வந்தது.