விருந்தினர் பதிவு : முன்னோர்கள்
வைகைப்புயலார் வடிவேலுவின் மேனேஜ்மெண்ட் தத்துவங்களில் ஒன்று “வரலாறு மிக முக்கியம் அமைச்சரே”.
நமக்கு முந்தையக் காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள, அவர்களைப் பற்றிய பதிவுகள் அவசியம்.
அந்தந்தத் துறையில் சிறந்து விளங்கிய தங்கள் முன்னோர்களை,அடுத்தடுத்த தலைமுறையினர் பதிவு செய்வது கலை,அறிவியல்,விளையாட்டுக்களில் பரவலாக இருப்பதுதான்.
நாம் இப்பொழுது பார்க்கப்போவது பதிவுகள் என்பதை விட குறிப்புகள் எனச் சொல்லாம் 🙂
தமிழ்சினிமா பாடல்வரிகளில் , ஒரு கவிஞர்,தான் எழுதியப் பாடல்களில் வேறு கவிஞரின் பெயரை உபயோகப்படுத்தியப் பாடல்களைப் பார்க்கலாம்.
ரொம்ப பின்னோக்கிப் போனால், வள்ளுவர்,கம்பன்,பாரதி – இவர்களது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
“கம்பன் ஏமாந்தான் “
”கம்பனை வம்புக்கிழுத்தேன்”
“கம்பன் காணாத கற்பனை”
“பாரதியை படிச்சுப்புட்டா பெண்களுக்கும் வீரம் வரும்”
என இவர்கள் பெயர் உள்ள பாடல்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். அதனால் இவர்களை விட்டுவிடலாம்.
Immediate முன்னோர்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.
இதில் சட்டென நினைவுக்கு வரும் பாடல்கள் இவை.
“கண்ணதாசனே ,எந்தன் காதல் வரிகளை கொஞ்சம் திருத்திக் கொடு” எழுதியவர்- காமகோடியான் –
படம் – மரிக்கொழுந்து
“காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ”
எழுதியவர் – வாலி
படம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
”சொன்னான் அந்தக் கண்ணதாசன் பாட்டுல –
( யார் எழுதியதெனத் தெரியவில்லை.)
படம் – “வரவு எட்டண்ணா செலவு எட்டண்ணா
எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில் தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!! –
எழுதியவர்-வாலி –
படம் “சந்திரமுகி”
“வாலி போல பாட்டெழுத எனக்குத் தெரியலயே” –
எழுதியவர் – சிம்பு
படம் -வல்லவன்
”வாலி, வைரமுத்து… உன்போல யாரு கவிதை யோசிச்சா?”
எழுதியவர் : கார்க்கி
படம்: ரெண்டாவது படம்
மேற்கண்ட வரிகளை எழுதிய கார்க்கியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொன்னார், இந்தப் பாடல் வரியில் இடம்பெற்ற வாலி, வைரமுத்து இருவருமே, தங்களது சொந்தப் பெயரையே தங்களுடைய பாடல்களில் இடம்பெறச் செய்துள்ளார்கள். இப்படி:
- ”எதிர் நீச்சலடி, அட ஜாலியா வாலி சொன்னபடி” (படம்: எதிர்நீச்சல், எழுதியவர்: வாலி)
- “பாட்டு கட்டும் நம்ம வைரமுத்தைக் கேட்டு, பாரதிராசா சொன்ன கிராமத்தைக் காட்டு” (படம்: தமிழ்ச்செல்வன், எழுதியவர்: வைரமுத்து)
காளீஸ்
rajinirams 11:05 pm on April 17, 2013 Permalink |
சூப்பர் சார். வரவு எட்டணா பட பாடல் வாலி எழுதியது,அஞ்சாதே படத்தில் (மக்கள் கவிஞர்:-))?)கபிலன் எழுதிய பாடல் கண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்தி குடி பாடலுக்கு -ஆரம்பத்தில் இந்த பாடலுக்கு லேசான எதிர்ப்பு தோன்றி மறைந்தது. ஒரு படத்தின் நாயகனே பாடலை பாடுவதற்கு முன் எழுதியவர் பெயரை சொன்ன பெருமை வாலிக்கு மட்டுமே-நேற்று இன்று நாளை படத்தில் எம்ஜியார் பாடல்-வாலி என்று சொல்லிவிட்டு “தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று”என்று பாடுவார்.திமுகவின் நகராட்சி ஊழல்கள் பற்றிஎல்லாம் அமைந்த அந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் முழங்கி அதிமுகவின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. நன்றி.
GiRa ஜிரா 2:22 pm on April 19, 2013 Permalink |
அதே போல இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்திலும் பாடல்-வாலி, இசை-இளையராஜான்னு வரும். ஒரே நாள் உனை நான் பாட்டுக்கு முன்னாடி
GiRa ஜிரா 2:46 pm on April 19, 2013 Permalink |
மிக நல்ல பதிவு. உண்மையிலேயே வரலாறு முக்கியம். இந்த மாதிரி பெயர்களைப் பயன்படுத்தும் போது இலக்கியங்களின் காலத்தையும் கணிக்க பின்னாளில் உதவும்.
amas32 6:16 pm on April 18, 2013 Permalink |
இது ஒரு ஜாலி போச்ட்! ரொம்ப நன்றாக உள்ளது 🙂 முந்தய தலை முறையினறை நல்ல முறையில் போற்றி குறிப்பிடுவது, அட்லீச்ட் குறிப்பிடுவத்உ வரலாறுக்கு முக்கியம் தான்!
amas32