அழுத்தினால் அர்த்தம் மாறும்
- படம்: பாண்டித்துரை
- பாடல்: கானக் கருங்குயிலே
- எழுதியவர்: வாலி
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
- Link: http://www.youtube.com/watch?v=louBm1tC5iA
கானக் கருங்குயிலே, கச்சேரிக்கு வா, வா!
கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா!
முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமாலை கட்டிப்போட வந்தேனே!
இந்தப் பாடலை ஏற்கெனவே கேட்டிருந்தாலும், இன்னொருமுறை கேளுங்கள், எஸ். பி. பாலசுப்ரமணியமும் ஸ்வர்ணலதாவும் ‘Kaa’னக் கருங்குயிலே என்று பாடுகிறார்களா? அல்லது, ‘Gaa’னக் கருங்குயிலே என்று பாடுகிறார்களா?
‘Kaa’தான், ‘Gaa’ அல்ல!
வேறு பல பாடல்களில் இதே ‘கானக் குயிலே’ என்ற வரி வந்திருக்கிறது, ஆனால் அங்கெல்லாம் ‘Gaa’னக் குயில்தான், ‘Kaa’னக் குயில் அல்ல.
‘கானம்’ என்ற வார்த்தை வடமொழியிலிருந்து வந்தது, ‘Gaana’ என்றால் பாடுதல், ஆக, ‘பாட்டுப் பாடும் குயில்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினால் ‘Gaa’னக் குயில் என்பதுதான் சரியான உச்சரிப்பு.
ஆனால் SPB, ஸ்வர்ணலதா இருவரும் உச்சரிப்பில் தவறு செய்யாத சிறந்த பாடகர்கள். இசையமைத்தவரும் இதுமாதிரி நுட்பமான விஷயங்களைக் கவனிக்கிறவர். அப்புறம் எப்படி இந்தப் பிரச்னை?
காரணம் இருக்கிறது, ‘Kaa’னக் குயில், ‘Gaa’னக் குயில், இரண்டுமே சரியான உச்சரிப்புகள்தாம், நீங்கள் எந்தப் பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்து அது மாறுபடும்.
‘Gaa’னக் குயில் என்றால், பாடும் குயில், சரி.
‘Kaa’னக் குயில் என்றால், கானம் / கானகம் / காட்டுக் குயில் என்று பொருள்.
சந்தேகமாக இருக்கிறதா? ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்ற ஔவையார் பாடலை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அங்கே ‘கானம்’ என்றால் பாடல் என்பதா பொருள்?
மயில் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அதன் குரல் (அகவல்) கேட்கச் சகிக்காது. அதைப்போய் ‘பாட்டு மயில்’ என்று ஔவைப்பாட்டி எழுதியிருப்பாரா?
ஆக, இது ‘Gaaன மயில்’ அல்ல, ‘Kaaன மயில்’, காட்டு மயில்.
அதேபோல், SPBயும் ஸ்வர்ணலதாவும் பாடியது ‘Kaaனக் கருங்குயிலே’, அதாவது, காட்டில் வாழும் கருங்குயிலே என்கிற அர்த்தத்தில்தான். ஒருவேளை வாலி ‘பாட்டுப் பாடும் கருங்குயிலே’ என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தால், அவர்கள் ‘Gaaனக் கருங்குயிலே’ என்று பாடியிருப்பர் என்பது என் துணிபு.
***
என். சொக்கன் …
17 03 2013
106/365
anonymous 3:35 pm on March 17, 2013 Permalink |
பாட வந்ததோர் Gaaனம் = அங்கே Gaa தான்!
கானக் கருங்குயிலே = இங்கே kaa மட்டுமே!
இதே போல் ஒலிப்பு (உச்சரிப்பு) அறிந்து பழகும் போது,
மொழி வளம் மட்டுமல்ல, நம் மன இன்பமும் தனி!
—
ஜென்சி & இளையராஜா
இவங்க சேர்ந்து பாடும் அற்புதப் பாட்டு; அதுலயும் Gaa-னம் தான்;
“என் கானம் இன்று அரங்கேறும்”-ன்னு அற்புதமான பாடல்;
Guitar மட்டுமே!
இசைக் கருவிகள் குறைந்து ஒலித்து, ராஜாவின் குரல் மட்டும் அரங்கேறும்; (ஈர விழிக் காவியங்கள்)
—
இதெல்லாம் -Gaaனம்:
*எனது “கானம்” – உன் காதில் விழவில்லையா?
*ஓடும் பொன்னி ஆறும், பாடும் “கானம்” நூறும் (போவோமோ ஊர்கோலம்)
இதெல்லாம் -kaaனம்
*காயாத “கானகத்தே”
*மன்னவன் உன்னை மறந்ததென்ன? உன் கண்ணீரில் “கானகம்” நனைந்ததென்ன? (துள்ளித் துள்ளி நீ பாடம்மா)
ஒரே பாட்டுலயே ka & ga இருக்கா?
*மாசிலா நிலவே நம் -பாட்டு தான்:) Banumathi & TMS கடேசீல பாடுவாங்க-ன்னு நினைக்கிறேன்!
ka=காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?
ga=வேணு கானம் தென்றலொடு சேர்ந்த பின்னாலே
ka&ga = “கானம்” வேறு, “காற்று” வேறாய்க் கேட்பதே இல்லை
இனி நானும் வேறில்லை, நீயும் வேறில்லை!
anonymous 3:55 pm on March 17, 2013 Permalink |
இதே போல “தேவாரம்”;
பலரும் Devaram -ன்னு எழுதும் போது, என் ஈரக் குலையே நடுங்கும்:)
தேவாரம் : தே (தெய்வம்) + ஆரம் (மாலை)
பல பேரு, dE-வாரம் ன்னு தான் ஒலிக்குறாங்க; தவறு;
the-வாரம் என்பதே சரி;
Dembavani -ன்னா சொல்லுறோம்? Thembavani தானே?
சென்னையில், பல பேரு Deivam ன்னு தவறாவே ஒலிக்குறாங்க;
Theivam -ன்னு சொல்லப் பழகுவோம்;
—
தமிழில் ட-ஓசை மொழிமுதல் வராது;
த-ஓசை தான்!
தமிழ் = மென்மையான மொழி;
ஒவ்வொரு ஒலிப்பும் மூச்சு அடங்கும்; வெளியே தாறுமாறாச் சிந்தி விரயம் ஆகாது;
வல்லினம் கூட மென்மையாத் தான் இருக்கும்; க=ka;
ga, gha, da, dha, ja -ன்னுல்லாம் “சவுண்டு” வுடாது:)
நல்ல தமிழில்..
திட்டினாக் கூட அல்வாத் துண்டால் அடி வாங்குறது போல, அம்புட்டு மென்மை!:)
அதான், “முத்தமிழால், வைதாரையும் ஆங்கே வாழவைப்போன்” -ன்னு முருகனைப் பாடுனாரு;
வடமொழிக் கலப்பால், Cha போயே போயிருச்சி!
ஸரஸ்வதி (saraswathi), ஸந்தானம் (santhanam) -ன்னு புழங்க வேண்டிய அவசியம் காரணமாக…
சொல் (chol) என்பதையும், sol -ன்னு ஆக்கியாச்சு:(
இதே போல், தேவாரத்தையும் ஆக்கீற வேணாம்!
Pl remember, itz not Devaram, but Thevaram!
anonymous 4:11 pm on March 17, 2013 Permalink |
“கானா” பிரபா
=kaana பிரபாவா?
=gaana பிரபாவா?
பாட்டு பாடும் போது = gaana piraba
காட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கும் போது = kaana piraba:)))
கனக. என்ற முன்னெழுத்தால், kaana piraba என்பதே அழகு!
amas32 3:43 pm on March 17, 2013 Permalink |
இந்தப் பாடலை எஸ்.பி.பியும் ச்வர்ணலதாவும் பாடியதால் இவ்வளவு துல்லியமாக வார்த்தையின் ஒலியைக் கேட்டு ரசிக்கமுடிகின்றது. பின்னணி இசையும் பாடகரின் குரலை அமுக்கிவிடவில்லை. காயாத கானகத்தே பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அந்தப் பாடலில் கானகம் என்றே வந்து விடுகிறது. கானம் என்று வரும்போது தான் பேசும் மொழி சரியாக இருக்க வேண்டும்.
amas32
anonymous 9:27 pm on March 20, 2013 Permalink |
சிறப்பானதொரு பதிவு, திரு. சொக்கன் ஐயா
எந்த எண்ணுக்கு மட்டும் போலியே கிடையாது? சொல்லுங்க பார்ப்போம்;
முருகனின் எண்ணுக்குத் தான்:))
ஆறு = இதுக்கு என்ன போலிச் சொல்?:)
ஒன்று = ஒன்னு
இரண்டு = ரெண்டு
மூன்று = மூனு
நான்கு = நாலு
ஐந்து = அஞ்சு
ஆறு = ?
Chummaa, I told:)
ஏழு-க்கும் அப்படியே!
சொல்லப் போனா, ஆறு = அறு ஆகும்!
ஏழு = எழு ஆகும்
எட்டு = எண் ஆகும்
ஒன்பது = ஒம்போது
பத்து = பதின்
எதுக்குய்யா, இந்தத் தமிழ்-ல, ஒரு பேரை வச்சிட்டு, வேற வேற பேருலயும் கூப்பிடணும்?
அதுக்குப் பேசாம, கூப்புடு பேரையே, பேரா வச்சிட்டுப் போகலாமே?:) Any clues??;)