விருந்தினர் பதிவு : ஜோடிப் பாசம்
- படம்: ஜோடி
- பாடல்: வண்ணப்பூங்காவைப் போல்
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: ஏ. ஆர். ரஹ்மான்
- பாடியவர்: மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ்
- Link : http://thiraipaadal.com/tpplayer.asp?sngs=’SNGARR0201’&lang=en
ஜோடி படப் பாடல் ட்யுன்கள், ஒரு ஹிந்திப் படத்துக்காக ரஹ்மான் போட்டது. இந்த மாதிரி அவர் நிறையப் படங்களுக்கு செய்திருக்கிறார். ஆனால் ஜோடி தான் ஆரம்பம் என நினைக்கிறேன்.
அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருக்கும். “காதல் கடிதம் தீட்டவே” பாட்டுக்கு வைரமுத்துவே படத்தில் வந்து லீட் எடுத்துக் குடுப்பார்.
ஆல்பத்தில் “வண்ணப்பூங்காவை போல்” என ஒரு பாடல் உண்டு. ஆனால் படத்தில் வராது.
வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாத பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
விண்மீன்களைக் கேட்டால் அண்ணன்கள்
எல்லாம் பறித்து தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி
ஒடித்து ஒடித்து தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக உயிரை தருவார்கள்
பாடல் வரிகளைப் பாருங்கள். அண்ணன்(கள்), தங்கை பாசத்தைப் பற்றி இருக்கிறது. ஜோடி படத்துக்கும் இந்த வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடலை எழுதிப் பதிவு செய்யவேண்டும் ?
இந்த ட்யுன்கள் ஒரு ஹிந்திப் படத்துக்குப் போட்டதல்லவா. அந்தப் படத்தின் பெயர் Doli Saja Ke Rakhna. அனியத்து புறவு/காதலுக்குமரியாதையின் ரீமேக்.
”காதலுக்குமரியாதை” கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தக் கதைக்கு இந்தப் பாடல் வரிகள் அப்படியே பொருந்துகிறதா?! :))
ஆனால், இதற்குச் சம்பந்தமே இல்லாத ‘ஜோடி’ கதையில் இந்தப் பாடலை ஏன் எழுதவேண்டும்?
கூகிளில் கிடைக்காத சில தகவல்கள் கூட ட்விட்டரில் கிடைக்கும். 🙂 ’ஜோடி’ பாடல்களை எழுதிய வைரமுத்து அவர்களின் மகன், திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்த மர்மத்தை ட்விட்டரில் அவிழ்த்தார்:
- ’Doli Sajake Rakhna’ ஹிந்திப் படத்தை தமிழில் டப் செய்வதாக இருந்தார்கள், அதற்காக இந்தப் பாடல்கள் எழுதப்பட்டன, பதிவு செய்யப்பட்டன
- ஆனால் பின்னர், அந்த டப்பிங் முயற்சி கைவிடப்பட்டது. இந்தத் தமிழ்ப் பாடல்கள் வீணாகும் சூழ்நிலை
- ‘ஜோடி’ திரைப்படத்தின் இயக்குனர் அந்தப் பாடல்களை எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றி ஒரு கதை செய்தார், ‘வண்ணப் பூங்காவைப்போல்’ பாடல் அந்தக் கதைக்குப் பொருந்தவில்லை, ஆகவே அதனை விட்டுவிட்டார்
- அந்த ட்வீட்கள் : 1, 2 & 3
ஆக, “ஆனந்தக்குயிலின் பாட்டு” என்ற காதலுக்கு மரியாதை படப் பாடலின் அதே சூழ்நிலைக்கு ரஹ்மான் இசையமைத்த பாடல்தான், ‘ஜோடி’க்காக இப்படி மீண்டும் தமிழ் வடிவம் பெற்று வந்திருக்கிறது.
காளீஸ்
@npodiyan 2:43 pm on March 2, 2013 Permalink |
ஊஞ்சல் என்று ஒரு ஆல்பம் வந்ததே(அதே மெட்டுகள் வேறு வரிகள்). அது தான் Doli Saja Ke Rakhnaவின் டப் என்று ரகுமானின் விக்கி பக்கம் சொல்கிறது. ஊஞ்சலிலுள்ள என் நெஞ்சுக்குள்ளே (அஞ்சாதே ஜீவா மெட்டு) பாடலின் வர்கள் முழுக்க கடல் வாசம் வீசுவது அது மணிவண்ணன் கேரக்டரின் பாடலோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வண்ணப் பூங்காவில் மெட்டில் 2 பாடல்கள் உண்டு (வரிகள் முழுக்க அண்ணன் பாசம்).
Im confused.
Kalees 7:24 pm on March 2, 2013 Permalink |
ஜீவா பாட்டு மணிவ்ண்ணன் கேரக்டருக்குத்தான்
ஆனந்தக்குயிலின் கூட 2 வெர்சன் உண்டு.so is வண்ணப்பூங்காவை.ஆச்சரியமில்லை.
இந்த “ஊஞ்சல்” விசயம் தான் புதுசா இருக்கு. அதுப்பத்தி தகவலே இல்லை. எனிவே, தகவலுக்கு நன்றி.