பாடல் வரிகள் Remix
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவேஇரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு
நீயா இல்லை நானா நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
இருவரும் அமர்ந்து காதல் எப்படி மலர்ந்தது என்று யோசித்து பல சம்பவங்களை நினைத்து இதை செய்தது நீயா இல்லை நானா என்று பேசுவது போல ஒரு அமைப்பு. கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் கொஞ்சம் கிண்டல் கொஞ்சம் சீண்டல் என்று வாலி அட்டகாசம் செய்யும் பாடல். எல்லா வரிகளும் நீயா இல்லை நானா என்றே முடியும்.
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது,
ஊர்வலமாக பார்வையில் வந்தது
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
இன்று மறு முறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
பூவிதழோரம் புன்னகை வைத்தது
இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
இந்த பாடல் வைரமுத்துவை inspire செய்திருக்கவேண்டும். பஞ்சதந்திரம் படத்தில் சரியான காட்சியமைப்பு கிடைத்தவுடன் வாலியின் இந்த வரிகளை அடித்தளமாக வைத்துக்கொண்டு எழுதிகிறார். இதுவும் காதலன் காதலி பேசிக்கொள்ளும் காட்சிதான். காதல் இளவரசனும் கனவுக்கன்னியும் பாடும் பாடல் கடற்கரை நிலவொளி எல்லாம் இல்லை. ஜஸ்ட் லைக் தட் நடந்துகொண்டு பாடும் பாடல். கொஞ்சம் Blame game போல கட்டமைப்பு. கூர்ந்து பார்த்தால் காதல் பொங்கும் வரிகள்
என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்து நீயா இல்லை நானா
சட்டை பொத்தான், கூந்தல், கண்ணில் தூசி ஊதும் சாக்கு, லிப்டின் நீள அகலம் என்று ஒரு contemporary காதல் உரையாடலை முன் வைக்கிறார். நக்கல் இருந்தாலும் ‘உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது, நீ வேறு நான் வேறு யார் சொன்னது என்று சமரசம் செய்துகொள்ளும் யதார்த்தம்
கவாஸ்கர் போலவே சச்சின் straight டிரைவ் அடித்தால் கொண்டாடுகிறோம் அதை பாராட்டுவது போல், இதையும் பாராட்டலாம்.
மோகன கிருஷ்ணன்
029/365
kamala chandramani 12:03 pm on December 30, 2012 Permalink |
ஆம் திருவெம்பாவை, ”காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட” பாடல். பெரிய இடத்துப் பெண் படத்தில் ”கட்டோடு குழல் ஆட ஆட,” என்ற கண்ணதாசன் பாடல் அப்படியே ரீமிக்ஸ்தான். விஸ்வனாதன் -ராமமூர்த்தி இசையில் பிரபலமான பாடல் அது.
பிழை 8:38 am on January 1, 2013 Permalink |
தினமலர் வாரமலரில் “எங்கிருந்து எடுக்கபட்டது” என்று ஒரு தொடர்… வைரமுத்துவின் பல படைப்புகள் மற்றவரின் பாடல் வரிகளின் ரீமிக்ஸ் செய்யபட்டது என்று உதாரணங்களோடு.. கடந்த 9-10 வாரங்களாக படித்து பாருங்கள் முடிந்தால்
என். சொக்கன் 11:34 am on January 1, 2013 Permalink |
அது திருச்சி பகுதியில்மட்டும் வருவதாகக் கேள்வி
பிழை 1:33 pm on January 1, 2013 Permalink
தெரியவில்லை நான் வந்தவாசியில் படித்தேன்.. அது வேலுர் திருவண்ணாமலை பதிப்பில் வரும்…..