மணம்!
- படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
- பாடல்: மதுர மரிக்கொழுந்து
- எழுதியவர்: கங்கை அமரன்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
- Link: http://www.youtube.com/watch?v=78z-g_mB2ls
மதுர, மரிக்கொழுந்து வாசம்,
என் ராசாத்தி உன்னுடைய நேசம்!
மானோட பார்வை, மீனோட சேரும்,
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்!
’மரிக்கொழுந்து’ என்று கங்கை அமரன் எழுதிவிட்டார், மனோ, சித்ராவும் அப்படியே பாடிவிட்டார்கள். நாமும் தினசரி வாழ்க்கையில் அப்படியே பயன்படுத்துகிறோம்.
உண்மையில் அந்தச் சொல் ‘மருக்கொழுந்து’ என்றுதான் இருக்கவேண்டும், பின்னர் பேச்சு நடையில் ‘மரிக்கொழுந்து’ எனத் திரிந்துவிட்டது. இப்போது இருவிதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் ’மரு’ என்றால் வாசனை என்று அர்த்தம். ‘மரு அமர் குழல் உமை’ என்று திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். அதாவது, வாசனை மிகுந்த கூந்தலைக் கொண்ட உமாதேவி.
அதேபோல், இங்கே மரு + கொழுந்து = வாசனை மிகுந்த கொழுந்து!
***
என். சொக்கன் …
20 12 2012
019/365
GiRa ஜிரா 7:16 pm on December 20, 2012 Permalink |
அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க நாகா.
பொதுவா மலர்கள் மணம் மிகுந்து இருக்கும். இலைகளில் மணம் இருந்து, அதுவும் மலர்களின் மணத்தைத் தூக்கியடிக்கும் என்றால் அது மருக்கொழுந்துதான்.
கதம்பம் என்று விற்பார்கள். இப்போது அதைக் காண முடியவில்லை.
கனகாம்பரம் மல்லி மருக்கொழுந்து ஆகியவைகளைக் கலந்து கட்டுவார்கள்.