ஏலப்பூ
- படம்: சின்ன தம்பி
- பாடல்: அரச்ச சந்தனம்
- எழுதியவர்: கங்கை அமரன்
- இசை: இளையராஜா
- பாடியவர்: S. P. பாலசுப்ரமணியம்
- Link: http://www.youtube.com/watch?v=ASAF491CnR4
மான்விழி, ஒரு தேன்மொழி, நல்ல மகிழம்பூவு அதரம்,பூ நிறம், அவ பொன்னிறம், அவ சிரிக்க நெனப்பு சிதறும்,ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான், பலஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்!
ஒரு பெண்ணின் மூக்கைப்பற்றிப் பலவிதமான வர்ணனைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாட்டுமட்டும்தான் நாசிக்கு ஏலப்பூவை உவமை காட்டுகிறது.
நான் ஏலக்காய் பார்த்திருக்கிறேன், ஏலப்பூ பார்த்ததில்லை. இதைக் கேட்டவுடன், Cardamom Flower என்று கூகுள் செய்து பார்த்தேன், அழகான மூக்கு 🙂 கிராமத்தில் வளர்ந்த கங்கை அமரன் கண்ணில் இப்படி ஒரு உவமை சிக்கியதில் ஆச்சர்யமே இல்லைதான்!
இன்னும் கொஞ்சம் தேடியதில், ஒரு நாடோடிப் பாடல் கிடைத்தது. அதில் குழந்தையின் அழகுக் கண்ணுக்கு ஏலப்பூ உவமையாகிறது:
கண்மணியே ஏலப்பூ, காதிரண்டும் பிச்சிப்பூ,மேனி மகிழம்பூ, மேற்புருவம் சண்பகப்பூ!
***
என். சொக்கன் …
02 12 2012
001/365
உமாக்ருஷ் (@umakrishh) 12:25 pm on December 2, 2012 Permalink |
நான் டிவிட்டருக்கு வந்த புதிதில் எள்ளுப்பூ நாசி பற்றி விவாதம் செய்து புகைப்படமும் தேடி எடுத்தது நினைவு இருக்கிறது உங்கள் தேடலும் ஆர்வமும் தொடரட்டும் எங்களுக்கும் மகிழ்ச்சி இது தொடர வாழ்த்துகள் 🙂
கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri) 12:39 pm on December 2, 2012 Permalink |
புது ப்ராஜக்டுக்கு வாழ்த்துகள்!
என்னது? இந்தப் பாட்டும் கங்கையாரா? நான் இத்தினி நாளா வாலி’ன்னுல்ல நெனைச்சிட்ருந்தேன்.
prasannaa 12:47 pm on December 2, 2012 Permalink |
Amazing start. Eagerly waiting for the rest. Best wishes to continue successfully
I’ve heard a different version of this lullaby.
Kanne Kamala poo kaadhu rendum pichi poo
meni magiZHampoo versus kai thaaZhampoo
@tcsprasan
R. Saravanan 1:09 pm on December 2, 2012 Permalink |
இந்த புதிய, அருமையான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !
Muthu Ganesh 1:49 pm on December 2, 2012 Permalink |
Vazhthukkal, Sir. In an article, Je.Mo tells us ரசனை was not taught at school level. i.e how to taste a thing ? say music, tamil etc., Your “பா” already did that. here is another, we can all expect another good treat. btw, ஏலப்பூ உவமை அருமை!
புதிய நல்ல முயற்சி, மனமார்ந்த வாழ்த்துக்கள் !
Kannabiran Ravi Shankar (KRS) 3:00 pm on December 2, 2012 Permalink |
“நாலு வரி”க்கு, இனியவை
நாற்பது வாழ்த்துக்கள்:)
சங்கத் தமிழில் ஏலம்பூ என்று சொல்வதே வழக்கம்; eg: தாழம்பூ, ஏலம்பூ,
நாட்டுப்புற வழக்கில் ஏலப்பூ!
சங்கு முழங்குதா சிவ சங்கரரு கோயிலிலே
சின்னம் முழங்குதா செந்தூரரு கோயிலிலே
ஏன்அழுதே ஏன்அழுதே “ஏலம்பூ” வாய்நோக
வம்புக்கு அழுவாளோ அம்மாவே ஆராரோ!
-ன்னு கிராமத்துல தாலாட்டுப் பாடல்…
கண்ணதாசனும் ஏலம்பூவைப் பாடி இருக்காரு:)
நம்ம LR Eswari கிக் குரலில் சூப்பர் பாட்டு, கருப்புப் பணம் படத்துல, MSV Music!
பட்டுச் சிறகு கொண்ட, சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
என்னென்ன சொன்னதோ, கன்னத்தைத் தொட்டதோ
“ஏலம்பூ” மேனி கொண்டதோ?
——–
ஏலம்பூவின் அழகு என்ன-ன்னா, அந்த வெள்ளையில், சிவப்பு நரம்பு விடைப்பு “சுருக்”-ன்னு தெரியும்;
Kannabiran Ravi Shankar (KRS) 3:14 pm on December 2, 2012 Permalink |
கொப்புக் கனியே, கோதுபடா மாங்கனியே
ஏனழுதாய் என்னுயிரே, “ஏலம்பூ” வாய் நோக
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
அத்தை அடிச்சாளோ, அல்லி மலர்த் தண்டாலே
மாமன் அடிச்சானோ, மல்லியப்பூச் செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு, ஆக்கினைகள் செய்து வைப்போம்
கடிந்தாரைச் சொல்லி அழு, கைவிலங்கு போட்டு வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு, தோள்விலங்கு போட்டு வைப்போம்..
Kannabiran Ravi Shankar (KRS) 3:26 pm on December 2, 2012 Permalink |
பொதுவா,
பழ வாசனை வேறா இருக்கும், பூ வாசனை வேற இருக்கும்! (என்ன தான் பூவில் இருந்து பழம் தோன்றினாலும்)
ஆனா, ஏலம்பூ மட்டும் அப்பிடி இல்ல;
ஏலக்காய் மணம், ஏலம்பூவுலயே தெரியும்;
அவன், அவளை, வெட்கப்பட்ட மூக்கின் சிவந்த நரம்பை.. ஏலம்பூ -ன்னு பாடுறான்;
அவளோ, பூவின் மணமே, காய்க்கும் கனிக்கும் போவது போல், தந்தையின் வீரக் குணமே தனயனுக்கும் போகும் -ன்னு,
ஏலம்பூவை வச்சிப் பாடும் புள்ளத் தாய்ச்சிப் பொண்ணு ஒருத்தி, சங்கத் தமிழில்…
kadagam80 6:18 pm on December 2, 2012 Permalink |
வாழ்த்துகள் நிறைய தகவல்களை பெற்றுத்தரப்போகும் 4 வரி நோட்டுக்கு நன்றிகள் இன் அட்வான்சு 🙂
ஆயில்யன் (@aayilyan) 6:19 pm on December 2, 2012 Permalink |
kadagam80யில் அடியேன் இட்ட மறுமொழி 🙂
Rex Arul 10:11 pm on December 2, 2012 Permalink |
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் சொக்கன். முதல் பதிவே starts with a big bang. All the very best 🙂
BaalHanuman 10:45 pm on December 2, 2012 Permalink |
ஒரு நாட்டுப்புறத் தாலாட்டுப் பாட்டில் பூ என்று குழந்தையின் முகத்தை வருணணை செய்கின்றாள் தாய் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூ வாக இருப்பதைக் கூறுகின்றார்
”கண்ணே கமலப்பூ கண்ணிரண்டும் தாமரைப்பூ
கண்மணியே ஏலப்பூ
சாதிரண்டும் பிச்சிப்பூ
மேனி மகிழம் பூ
மேற் புருவம் சண்பகப்பூ”
என்று தன் குழந்தையைப் பல்வேறு பூக்களாக வருணித்துத் தாலாட்டுகின்றாள். இப்பாடலினை அடியொற்றி
”சின்னச் சின்னக் கண்ணணுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டு தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா”
என்னும் பாடலைக் கவிஞர் பாடியுள்ளார்.
http://thoguppukal.wordpress.com/2011/08/24/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/
Sagar (@npodiyan) 10:00 pm on December 3, 2012 Permalink |
அட்டகாசமான ஆரம்பம்! கலக்குங்க.. 🙂